என் மலர்tooltip icon

    இந்தியா

    மோசடிகளை தடுக்க மொபைல் போன்களில் கால் செய்பவர்களின் பெயர்களை காட்டும் புதிய திட்டம்
    X

    மோசடிகளை தடுக்க மொபைல் போன்களில் கால் செய்பவர்களின் பெயர்களை காட்டும் புதிய திட்டம்

    • திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.
    • செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    சமீபகாலமாக நாடு முழுவதும் போன் மூலம் நூதன மோசடி, டிஜிட்டல் கைது, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி, குரல் வழியாக பேசி மோசடி என புதுப்புது வகைகளில் மோசடிகள் நடைபெறுகிறது.


    மேலும் செல்போனுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்பதன் மூலமும் பலரிடம் மோசடிகள் நடக்கிறது. இந்த சிக்கல்களுக்கு முடிவு கட்ட இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்பதற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதன்படி அழைப்பாளரின் பெயர் விளக்க காட்சி என்று அழைக்கப்படும் இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.

    இதுவரை ட்ரூகாலர் போன்ற செயலிகள் அழைப்பாளர்களின் பெயரை காண்பிக்கும் வசதியை அளித்து வருகின்றனர். ஆனால் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

    புதிய திட்டத்தின்படி அவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடடோ போன் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த புதிய அம்சத்தை செயல்படுத்த உள்ளனர்.

    இந்த அழைப்பாளர் பெயரை வெளிப்படுத்தும் அம்சத்திற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் சில விற்பனை யாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். இந்த விற்பனையாளர்கள் டெலிகாம் நிறுவனங்களுக்கு மென்பொருள் தேவையான சர்வர்களை வழங்கு வார்கள்.

    இந்த சேவை மராட்டியம் மற்றும் ஹரியானாவில் தொடங்க உள்ளது. விரைவில் மற்ற மாநிலங்க ளுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.

    Next Story
    ×