முக அங்கீகார அம்சத்துடன் பிரதமரின் வேளாண் மொபைல் செயலி

மத்திய அரசின் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 ரொக்கம் மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ெடல்லியில் தொடங்கி வைத்தார்.
முக அங்கீகார அம்சத்துடன் பிரதமரின் வேளாண் மொபைல் செயலி
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் மத்திய அரசின் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 ரொக்கம் மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலியை மத்திய வேளாண் மற்றும் விவசா யிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ெடல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி யில், நாடு முழு வதிலு மிருந்து ஆயி ரக்கணக்கான விவசாயி கள், மத்திய, மாநில அரசு அதி காரிகள், பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் வேளாண் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் காணொலிக் காட்சி வாயி லாக கலந்து கொண்டனர்.

இந்த செயலி மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் அல்லது கைரேகை யில்லா மல், மின்னணு வாயிலான வாடிக்கையா ளர் விவ ரங்களை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் மற்ற விவசாயிகளுக்கும் உதவ முடியும். இதன் மூலம் மாநில அரசு அதிகாரி ஒருவர், 500 விவசாயிகளின் மின்னணு வாயிலான வாடிக்கை யாளர் விவ ரங்களை சரிபார்க்க முடியும்.

இது குறித்து பேசிய மத்திய மந்திரி தோமர், பிரதமரின் வருவாய் ஆத ரவுத் திட்டத்தின் மூலம் சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தவணை முறையில் நிதியளிக்கப்படு கிறது. இதன்மூலம் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு நிதி கிடைக்கிறது.

இந்த தொழில்நுட்பத் தின் மூலம் பெரும் எண்ணிக்கை யிலான விவசாயிகளுக்கு தற்போது உதவ முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com