search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adult Apps"

    • வாலிபர் ஒருவர் வண்ணார்பேட்டையில் உள்ள தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக வந்துள்ளார்.
    • இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று அந்த வாலிபரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

     நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தியேட்டருக்கு சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் படம் பார்ப்பதற்காக வந்துள்ளார். இதனிடையே அவரது செல்போனில் உள்ள ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ததில் சிலர் அவருக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்களில் 2 பேர் தியேட்டர் அருகே வந்துள்ளனர். அப்போது திடீரென அந்த வாலிபரை இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று அவரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து அந்த வாலிபர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் பணத்தை பறித்து சென்றது சீவலப்பேரி பகுதியை சேர்ந்த பிரேம்சங்கர்(வயது 25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×