search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intimidation"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர்.
    • இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி தியாகதுருகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர். இதனை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் ஆனந்தபாபு (29) மாணவியின் வீட்டிற்குள் சென்று மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி ஆனந்தபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கன்னியாகுடி ரெயில்வே கேட் பகுதிக்கு சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கன்னியாகுடி பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் கேரள மாநிலம் அயன்சேரி பகுதியை சேர்ந்த விஜின் (வயது 40).இவர் கடந்த 12-ம் தேதி தான் தங்கியுள்ள வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் இருந்து கன்னியாகுடி ரயில்வே கேட் பகுதிக்கு பணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருப்புங்கூர் ரைஸ்மில் அருகே விஜின் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விஜினை வழிமறித்து அவரை மிரட்டி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர். அதில் ஒருவர் விஜினின் சைக்கிளையும் எடுத்துச் சென்றார். ஆள் இல்லாத காட்டுப் பகுதியில் விஜினை மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ 2 ஆயிரத்து 400 மற்றும் அவரது செல்போனை பிடுங்கி தங்களுக்கு போன் பே மூலம் பணம் செலுத்த சொல்லி மிரட்டி ரூபாய் 6 ஆயிரம் போன் பே செய்துக்கொண்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து விஜின் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இதில் வைத்தீஸ்வரன் கோயில் அருகே புலவனூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன்,அபிஷேக் மற்றும் கடலூர் தர்மநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் ஆகிய 3 பேரும் விஜினை கடத்தி சென்று வழிப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்கியவர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் பன்னூன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, ஏர்-இந்தியாவை புறக்கணிப்பதை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புப் படுத்தி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே அவரை கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார்.
    • பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஓரையூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் மினி பஸ் டிரைவர், அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார். இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் பஞ்சாயத்து துணை தலைவர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
    • பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.

    பணம் கேட்டு மிரட்டல்

    இவரது பட்டறை அருகில் சந்தோஷ் என்பவர் புல்லட் மோட்டார் சைக்கிள் சரிசெய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது உறவினர் கார்த்திக் (25). சந்தோஷ் மூலம் கார்த்திக், சுரேசிடம் அறிமுகம் ஆனார். இதனால் 2 பேரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக், சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்பதும், அவரும் பணத்தை கொடுத்து சில நாட்களுக்கு பிறகு திரும்ப வாங்குவார், வழக்கம் போல சம்பவத்தன்று கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான அருண் (30), அனேக் (28) ஆகியோர் சுரேஷ் பட்டறைக்கு வந்தனர். பின்னர் சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்டனர்.

    அப்போது அவர் பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    சிறையில் அடைப்பு

    அப்போது கார்த்திக் தப்பியோடி விட்ட நிலையில் அங்கிருந்த அருண், அனேக் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து போலி துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வந்தனர். அவரும் நேற்று போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர்.
    • மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மீன்பிடிக்க செல்கிறார்கள். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் அச்சத்தில் தவித்து வருகிறார்கள்.

    இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை படகுகளுடன் சிறைப்பிடித்து செல்வதும், மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசுவதும் காலங்காலமாய தொடர்கிறது. இதனை தடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இயற்கை சீற்றம் காரணமாகவும், மீன்பாடு அதிகமாக கிடைக்காததாலும் செலவுகளை மிச்சப்படுத்த குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 70 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதில் கச்சத்தீவு-நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்திருந்த ராமேசுவரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சுற்றி வளைத்தனர். உடனே வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான மீனவர்களை மிரட்டும் வகையில், சிங்கள கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர். இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறிய கடற்படை வீரர்கள் கடலில் விரித்திருந்த மீன் பிடி வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    பின்னர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு இன்று கரை சேர்ந்தனர். ஏற்கனவே மீன்பாடு மிகவும் குறைந்த நிலையில் ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு சென்றால், சிங்கள கடற்படையினர் அட்டூழியத்தால் தினம் தினம் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று மீனவர்கள் கண்ணீருடன் கூறினர்.

    ஆனால் இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் போலீஸ் நிலையத்திலோ, மீன்துறை அதிகாரிகளிடமோ புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார்.
    • 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சொரத்தன்குழி பஸ் நிலையம் அருகே பாப்பா ன்கொல்லை பழனிவேல் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி தங்கமணி கடையில் இருந்த போது அதே ஊரை சேர்ந்த மாம்பழம் என்கிற அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார். தங்கமணி தரமறுத்ததால் அவரை ஆபாசமாக திட்டினார்.பின்னர் கத்தியை காட்டி மிரட்டி கடையில் வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து அசோக் ராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்துக்குமார் தனது குடும்ப செலவுக்காக நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.
    • இதனைதொடர்ந்து ஆனந்த் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டார்.

    களக்காடு:

    களக்காடு கோவில்பத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). இவர் ஓட்டலில் மாஸ்டராக உள்ளார். இவர் தனது குடும்ப செலவுக்காக நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதனை அவர் திரும்ப கொடுக்க வில்லை. இதனைதொடர்ந்து ஆனந்த் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு முத்துக்குமார் பணம் தற்போது இல்லை, ஆனால் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

    சம்பவத்தன்று முத்துக்குமார் வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆனந்த், புதுபேட்டை அரசடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் மகாராஜன் (20), புதுபேட்டை செக்கடியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் கேசவன் (23) ஆகியோர் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்தனர். மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி முத்துக்குமார் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆனந்த் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.
    • இளைஞர்கள் இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் அறிமுகமானார். அவர்கள் இருவரும் பேஸ்புக்கில் குறுந்தகவல் அனுப்பி நட்பை பலப்படுத்தி வந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முக அடையாளத்தை அறியும் வகையில் அந்த வாலிபர் பேஸ்புக்கில் வீடியோ காலில் அழைத்து பேசி இருக்கிறார். அந்த பெண்ணும் வீடியோகாலில் ஜாலியாக பேசி உள்ளார்.

    ஒருமுறை அப்பெண் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் அந்த வாலிபரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி உள்ளார். இருவரும் நிர்வாண கோலத்தில் இருந்தபடி பேசிய வீடியோ காட்சியை அந்த பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் அந்த பெண், வாலிபரிடம் நிர்வாணமாக இருந்தபடி பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்து ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் மேலும் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.

    தொடர்ந்து அந்த பெண் பணம் கேட்டு மிரட்டி வந்ததால் வாலிபர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகிறார்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில்,

    கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நிர்வாண வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo