search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் சாலையில் சென்றவரை மிரட்டி வழிப்பறி
    X

    நாமக்கல்லில் சாலையில் சென்றவரை மிரட்டி வழிப்பறி

    • நாமக்கல் பஸ் நிலையப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த வாலிபர், அவரை மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலையப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், அவரை மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணத்தை பறித்து சென்றது சேலத்தை சேர்ந்த கொள்ளையன் பூபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பூபாலகிருஷ்ணனை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×