என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறில்; வாலிபர் கைது
- அத்துமீறி தவறாக நடக்க முயன்றார்.
- கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை ரஹ்மத் நகரை சேர்ந்த கருப்பணன் மகன் சதீஷ் (வயது26).
இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றார். இதனால் அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி சாதி பெயரை கூறி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
Next Story






