என் மலர்
நீங்கள் தேடியது "மிரட்டல்"
- திலீப் பறித்த நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பயந்து போன தொழிலதிபர் மனைவி தனது கணவரிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.
சென்னை:
சென்னை புரசைவாக்கம் முருகப்பா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் மனைவியை மயக்கி அதே குடியிருப்பில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தொழிலதிபர் சென்னை அண்ணா சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். 36 வயதான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில்தான் தொழிலதிபரின் மனைவியுடன் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடிவந்த திலீப் என்ற 34 வயது வாலிபர் பழகியுள்ளார்.
வாலிபர் திலீப்பின் தாய் சங்கீதா தான் முதலில் தொழிலதிபரின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியுடன் நெருங்கி பழகி இருக்கிறார். இதன் பிறகு தொழிலதிபரின் மனைவியும் வாலிபர் திலீப்பின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட திலீப் தொழில் அதிபர் மனைவியை காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையிலும் தொழிலதிபர் மனைவி தனது குடும்பத்தை மறந்து கள்ளக்காதலுடன் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்திருக்கிறார்.
கடந்த ஓராண்டாகவே இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில் வாலிபர் திலீப் தொழிலதிபர் மனைவியிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அதிக அளவில் பறித்துள்ளார்.
தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தொழிலதிபர் மனைவியிடம் சென்று வாலிபர் திலீப் பணம் வாங்குவதை வழக்கமாகவே வைத்திருந்து உள்ளார்.
இப்படி தொழிலதிபரின் மனைவியிடம் இருந்து திலீப் 850 கிராம் தங்க நகைகள் 120 கிராம் வைர நகைகள் 2½ கிலோ வெள்ளி பொருட்கள்,ரூ.20,000 ரொக்க பணம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
இதன் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்று குடியேறி உள்ளார். இருப்பினும் தொழிலதிபர் மனைவியை தொடர்பு கொண்டு மேலும் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி இருக்கிறார்.
நான் கேட்கும்போதெல்லாம் பணத்தை கொடுக்காவிட்டால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தொழிலதிபர் மனைவியை வாலிபர் திலீப் மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன தொழிலதிபர் மனைவி தனது கணவரிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இந்த சம்பவம் பற்றி வேப்பேரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திலீப்பின் தாய் சங்கீதா, அவரது தம்பி அங்கித் ஆகிய இருவரையும் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
தொழிலதிபர் மனைவியை மயக்கி நகை, பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்ற மன்மத வாலிபர் திலீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தொழிலதிபர் மனைவியிடம் இருந்து வாலிபர் திலீப் பறித்த நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள திலீப்பை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
- பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங் சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார்.
- இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது.
மும்பை:
பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங், சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது. அத்துடன் வசூலையும் வாரிக் குவித்தது.
இந்நிலையில், ரன்வீர் சிங்கின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதில் கோடிக்கணக்கில் பணம் தரவேண்டும் என கோரியுள்ளார். இதுதொடர்பாக, மும்பை போலீசிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார்.
இதையடுத்து, ரன்வீர்சிங் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மிரட்டல் விடுத்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் போலீசாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மார்பிங் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை சம்பந்தப்பட்ட மாணவிகளின் செல்போனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட தொடங்கி உள்ளனர்.
- மாணவிகள் மற்றும் வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
உன்னுடைய நண்பர்கள் யார் என்று சொல். நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு.
எனவே தோழனையோ தோழியையோ தேர்வு செய்யும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதை கோவையில் நடந்த சம்பவம் மீண்டும் அனைவருக்கும் எடுத்துக்காட்டி உள்ளது.
கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகள் தோழிகளாக பழகி வந்தனர். அந்த மாணவிகளில் 2 மாணவிகள், 2 வாலிபர்களை காதலித்து வந்தனர்.
அந்த 2 மாணவிகளின் காதலர்கள், தங்களது காதலிகளிடம் அவர்களுடன் படிக்கும் சக மாணவிகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது மாணவிகள் 2 பேரும் தங்களது காதலர்களிடம் சில பணக்கார மாணவிகள் குறித்த விபரங்களையும் பரிமாற்றம் செய்துள்ளனர்.
இந்த விபரங்களை அறிந்து கொண்ட அந்த வாலிபர்கள், பணக்கார மாணவிகளின் விபரத்தை அனுப்பி வைக்கும்படி செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 2 காதலிகளும், அந்த 2 மாணவிகளின் புகைப்படங்களையும், அவர்களது செல்போன் எண்களையும், தங்களது செல்போனில் இருந்து தங்களது காதலர்களின் செல்போனுக்கு அனுப்பியுள்ளனர்.
புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர்கள், மாணவிகளின் புகைப்படத்தை அவதூறாக மார்பிங் செய்துள்ளனர்.
தொடர்ந்து மார்பிங் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை சம்பந்தப்பட்ட மாணவிகளின் செல்போனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்ட தொடங்கி உள்ளனர்.
இதை பார்த்த அந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் அவர்களிடம் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என கேட்டு மிரட்டினர்.
இதனால் அதிர்ச்சியான மாணவிகள், தங்கள் புகைப்படம் எப்படி இவர்களின் கைகளுக்கு கிடைத்தது என விசாரித்தனர். அப்போது தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. தங்களுடன் இவ்வளவு நாட்கள் தோழிகளாக பழகிய சக மாணவிகளே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மாணவிகள் கோவை மாவட்ட போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தோழிகளாக நடித்து சக கல்லூரி மாணவிகளே 2 தோழிகளையும் சிக்கலில் சிக்க வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவிகள் மற்றும் வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த வாலிபர்கள் இதுபோன்று வேறு மாணவிகளையும் மிரட்டி பணம் பறித்துள்ளனரா? அல்லது வேறு வகையில் அவர்களை தவறாக பயன்படுத்தினார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.
இந்தநிலையில் நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா அரசு தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் கூறும்போது, மரியா கொரினா மீது குற்றவியல் விசாரணைகள் உள்ளன. எனவே அவர் வெனிசுலாவில் இருந்து வெளியே சென்றால் தப்பி ஓடியவராகக் கருதப்படுவார் என்றார்.
- போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
- பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அடுத்த குஜ்ஜார அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்முடி (வயது45). இவர் கடந்த 18-ந் தேதி இரவு, சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடி குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து, மாரண்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
இதையடுத்து, குஜ்ஜார அள்ளிக்கு சென்ற போது, பொன்முடி தலைமறைவாகி விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பொன்முடி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவ்வப்போது 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பேசுவேன் என்றும், அதே போல் கடந்த 18-ந் தேதி வெடிகுண்டு வைத்ததாக கூறியதாக குற்றத்தை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
- பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிசேகர் (44), திருமணமாகி இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு சேலத்தில் உள்ள மற்றொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார்.
அப்போது அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம்பெண் ஒருவருடன் சசிசேகர் பேசி பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் சசிசேகர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த இளம்பெண் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்த இளம்பெண்ணின் கணவர் திருமணமாகி 10 நாளில் எப்படி 2 மாதம் கர்ப்பம் என்று மனைவியிடம் கேட்டார்.
அப்போது கதறி அழுத அந்த இளம்பெண் என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் விட்டு கதறினார். மேலும் தன்னுடன் வேலை பார்த்தவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புது மாப்பிள்ளை சசிசேகரை தேடி சென்றார். அவர் அப்போது தனது நண்பரான கோபால் என்பவரையும் உடன் அழைத்து சென்றார். சசிசேகரை பிடித்து எச்சரித்த 2 பேரும் கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர். கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுக்கப்போவதாகவும் கூறினர்.
இதனால் பயந்து போன சசிசேகர் உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்து விட்டார். பணத்தை வாங்கிய புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் வேறு யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்தார். தொடர்ந்து புது மாப்பிள்ளை, மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இதையடுத்து புதுமாப்பிள்ளையுடன் சென்ற கோபால் சசிசேகரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். அதன்படி சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், உலகநாதன், பூமாலை ராஜன் ஆகிய 3 பேரை அழைத்து கொண்டு மீண்டும் சசி சேகரை கோபால் சந்தித்தார்.
அப்போது மேலும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவோம் , பின்னர் நீ சிறைக்கு சென்று விடுவாய் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன சசிசேகர் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்தார்.
பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர். அதன்படி மேலும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் இல்லை என்றால் சிக்கலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று மிரட்டினர்.
இதனால் செய்வதறியாது திகைத்த சசிசேகர் ஏற்கனவே இந்த பிரச்சனைக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்த நிலையில் மேலும் ரூ.10 லட்சம் கொடுக்க முடியாது என்று கூறிய நிலையில் பயந்து போன அவர் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அழகாபுரம் போலீசில் புகார் கொடுத்த அவர் இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கதறினார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணின் கணவரின் நண்பரான கோபால் மற்றும் பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய 4 பேர் மீதும் மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்ட கோபால் தவிர மற்ற 3 பேர் மீதும் சேலம் டவுன், அழகாபுரம் போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில் இருந்து சூரத் செல்ல தயாராக இருந்தது.
- "எனது பையை எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்" என அச்சுறுத்தியுள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 'விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்' என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில் இருந்து சூரத் செல்ல தயாராக இருந்தது.
அப்போது, ஆயுர்வேத பெண் மருத்துவரான வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்பவர், தனது இரு கைப்பைகளில் ஒன்றை தனது இருக்கை 20F-ல் வைத்துள்ளார். ஆனால், மற்றொரு பையை விமான ஊழியர்கள் அமரும், பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்துள்ளார்.
இதைப் பார்த்த விமான ஊழியர்கள், அந்த பையை எடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், வியாஸ் ஹிரல் இதை ஏற்க மறுத்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், "எனது பையை எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்" என அச்சுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, விமானி மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு, வியாஸ் ஹிரலை விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இச்சம்பவத்தால் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகச் சூரத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.
- பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகரை சேர்ந்த தனக்கொடி மகன் முத்துக்குமார்(வயது38). பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.
இதே நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவரும், முத்துக்குமாரும் நண்பர்கள். இதனால் இரு குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முத்துக்குமார் வீட்டுக்கு, நண்பரின் மனைவி சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து முத்துக்குமார் கொடுத்தார். சிறிது நேரத்தில் நண்பரின் மனைவி மயங்கியதும் தனது செல்போனில் அவரை ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனது செல்போனில் ஆபாசமாக எடுத்திருந்த போட்டோ மற்றும் வீடியோவை காட்டி அடிக்கடி பணம் கேட்டு நண்பரின் மனைவியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார். எஸ்.பி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் இதே போல் ஏற்கனவே ஒருபெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு முத்துக்குமார் மிரட்டி வந்ததும், அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார்.
- ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
விழுப்புரம்:
செஞ்சி கிருஷ்ணாபுரம் வ.உ. சி. தெருவை சேர்ந்த வர் சையத் ஜின்னா. அவரது மகன் சையத் இத்ரிஸ் (வயது 35). இவர் மேல்மலையனூ ரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் செஞ்சி மேய்கலவாய்_ சந்தை தோப்பு சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளியின் அருகே அடையாளம் தெரியாத 3 பேர் வழிமடக்கி மிரட்டல் விடுத்து அவர் வைத்தி ருந்த ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சையத் இத்ரிஸ் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். எப்போதும் போக்குவரத்து இருக்கும் பகுதியில் வாலி பரை வழிமடக்கி பணம் பறித்த சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரமேஷ் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
- வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.
ராயபுரம்:
பழைய வண்ணாரப் பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி கல்லறை சுரேஷ் என்பவர் அடியாட்களுடன் சென்று மாமூல் கேட்டு மிரட்டினார்.
வியாபாரி ரமேஷ் மாமூல் தர மறுத்ததால் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே ரவுடி கல்லறை சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆபாச வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ரவுடி கல்லறை சுரேஷ் கூட்டாளிகளுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கல்லறை சுரேஷ், அவனது கூட்டாளிகள் ஆதம்,பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- புத்தன்கடை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெபஸ்டின்
- கண்ணன் மது போதையில் வேலைக்கு வந்துள்ளார். அவரை மேலாளர் ஜெபஸ்டின் கண்டித்துள்ளார்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெபஸ்டின் (வயது 26). அதே பங்கில் கண்ணனூர் உடையார்விளை பகுதியை சேர்ந்த கண்ணன் (36), உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு கண்ணன் மது போதையில் வேலைக்கு வந்துள்ளார். அவரை மேலாளர் ஜெபஸ்டின் கண்டித்துள்ளார். மேலும் பணியிருந்தும் நீக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் மறுநாள் பெட்ரோல் பங்கிற்கு வந்து ஜெபஸ்டினை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருவட்டார் போலீசில் ஜெபஸ்டின் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- முருகனை தகாதவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 45).
இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நகரப் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியம் வரை செல்லும் நகரப் பேருந்தை திருப்புறம்பயம் கடைத்தெருவில் நிறுத்தி இருந்த போது திருப்புறம்பயம் வெள்ளாளத் தெரு பரணத்தான் என்கி்ற முருகராஜ் (36) என்பவர் பஸ்சின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் முருகன் இதுபற்றி கேட்டதற்கு முருகராஜ், முருகனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் , தலைமை காவலர் சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர்.






