என் மலர்
நீங்கள் தேடியது "மிரட்டல்"
- ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.
இந்தநிலையில் நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா அரசு தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் கூறும்போது, மரியா கொரினா மீது குற்றவியல் விசாரணைகள் உள்ளன. எனவே அவர் வெனிசுலாவில் இருந்து வெளியே சென்றால் தப்பி ஓடியவராகக் கருதப்படுவார் என்றார்.
- போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
- பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அடுத்த குஜ்ஜார அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்முடி (வயது45). இவர் கடந்த 18-ந் தேதி இரவு, சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடி குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து, மாரண்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
இதையடுத்து, குஜ்ஜார அள்ளிக்கு சென்ற போது, பொன்முடி தலைமறைவாகி விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பொன்முடி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவ்வப்போது 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பேசுவேன் என்றும், அதே போல் கடந்த 18-ந் தேதி வெடிகுண்டு வைத்ததாக கூறியதாக குற்றத்தை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
- பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிசேகர் (44), திருமணமாகி இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு சேலத்தில் உள்ள மற்றொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார்.
அப்போது அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம்பெண் ஒருவருடன் சசிசேகர் பேசி பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் சசிசேகர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த இளம்பெண் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்த இளம்பெண்ணின் கணவர் திருமணமாகி 10 நாளில் எப்படி 2 மாதம் கர்ப்பம் என்று மனைவியிடம் கேட்டார்.
அப்போது கதறி அழுத அந்த இளம்பெண் என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் விட்டு கதறினார். மேலும் தன்னுடன் வேலை பார்த்தவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புது மாப்பிள்ளை சசிசேகரை தேடி சென்றார். அவர் அப்போது தனது நண்பரான கோபால் என்பவரையும் உடன் அழைத்து சென்றார். சசிசேகரை பிடித்து எச்சரித்த 2 பேரும் கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர். கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுக்கப்போவதாகவும் கூறினர்.
இதனால் பயந்து போன சசிசேகர் உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்து விட்டார். பணத்தை வாங்கிய புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் வேறு யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்தார். தொடர்ந்து புது மாப்பிள்ளை, மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இதையடுத்து புதுமாப்பிள்ளையுடன் சென்ற கோபால் சசிசேகரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். அதன்படி சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், உலகநாதன், பூமாலை ராஜன் ஆகிய 3 பேரை அழைத்து கொண்டு மீண்டும் சசி சேகரை கோபால் சந்தித்தார்.
அப்போது மேலும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவோம் , பின்னர் நீ சிறைக்கு சென்று விடுவாய் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன சசிசேகர் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்தார்.
பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர். அதன்படி மேலும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் இல்லை என்றால் சிக்கலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று மிரட்டினர்.
இதனால் செய்வதறியாது திகைத்த சசிசேகர் ஏற்கனவே இந்த பிரச்சனைக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்த நிலையில் மேலும் ரூ.10 லட்சம் கொடுக்க முடியாது என்று கூறிய நிலையில் பயந்து போன அவர் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அழகாபுரம் போலீசில் புகார் கொடுத்த அவர் இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கதறினார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணின் கணவரின் நண்பரான கோபால் மற்றும் பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய 4 பேர் மீதும் மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்ட கோபால் தவிர மற்ற 3 பேர் மீதும் சேலம் டவுன், அழகாபுரம் போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில் இருந்து சூரத் செல்ல தயாராக இருந்தது.
- "எனது பையை எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்" என அச்சுறுத்தியுள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 'விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்' என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில் இருந்து சூரத் செல்ல தயாராக இருந்தது.
அப்போது, ஆயுர்வேத பெண் மருத்துவரான வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்பவர், தனது இரு கைப்பைகளில் ஒன்றை தனது இருக்கை 20F-ல் வைத்துள்ளார். ஆனால், மற்றொரு பையை விமான ஊழியர்கள் அமரும், பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்துள்ளார்.
இதைப் பார்த்த விமான ஊழியர்கள், அந்த பையை எடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், வியாஸ் ஹிரல் இதை ஏற்க மறுத்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், "எனது பையை எடுத்தால் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்" என அச்சுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, விமானி மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு, வியாஸ் ஹிரலை விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இச்சம்பவத்தால் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகச் சூரத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.
- பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகரை சேர்ந்த தனக்கொடி மகன் முத்துக்குமார்(வயது38). பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.
இதே நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவரும், முத்துக்குமாரும் நண்பர்கள். இதனால் இரு குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முத்துக்குமார் வீட்டுக்கு, நண்பரின் மனைவி சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து முத்துக்குமார் கொடுத்தார். சிறிது நேரத்தில் நண்பரின் மனைவி மயங்கியதும் தனது செல்போனில் அவரை ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனது செல்போனில் ஆபாசமாக எடுத்திருந்த போட்டோ மற்றும் வீடியோவை காட்டி அடிக்கடி பணம் கேட்டு நண்பரின் மனைவியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார். எஸ்.பி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் இதே போல் ஏற்கனவே ஒருபெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு முத்துக்குமார் மிரட்டி வந்ததும், அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார்.
- ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
விழுப்புரம்:
செஞ்சி கிருஷ்ணாபுரம் வ.உ. சி. தெருவை சேர்ந்த வர் சையத் ஜின்னா. அவரது மகன் சையத் இத்ரிஸ் (வயது 35). இவர் மேல்மலையனூ ரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு வந்து கொண்டு இருந்தார். அவர் செஞ்சி மேய்கலவாய்_ சந்தை தோப்பு சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளியின் அருகே அடையாளம் தெரியாத 3 பேர் வழிமடக்கி மிரட்டல் விடுத்து அவர் வைத்தி ருந்த ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சையத் இத்ரிஸ் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். எப்போதும் போக்குவரத்து இருக்கும் பகுதியில் வாலி பரை வழிமடக்கி பணம் பறித்த சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரமேஷ் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
- வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.
ராயபுரம்:
பழைய வண்ணாரப் பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவுடி கல்லறை சுரேஷ் என்பவர் அடியாட்களுடன் சென்று மாமூல் கேட்டு மிரட்டினார்.
வியாபாரி ரமேஷ் மாமூல் தர மறுத்ததால் அங்கிருந்த வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே ரவுடி கல்லறை சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆபாச வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து வியாபாரி ரமேஷ் ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ரவுடி கல்லறை சுரேஷ் கூட்டாளிகளுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கல்லறை சுரேஷ், அவனது கூட்டாளிகள் ஆதம்,பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- புத்தன்கடை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெபஸ்டின்
- கண்ணன் மது போதையில் வேலைக்கு வந்துள்ளார். அவரை மேலாளர் ஜெபஸ்டின் கண்டித்துள்ளார்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெபஸ்டின் (வயது 26). அதே பங்கில் கண்ணனூர் உடையார்விளை பகுதியை சேர்ந்த கண்ணன் (36), உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு கண்ணன் மது போதையில் வேலைக்கு வந்துள்ளார். அவரை மேலாளர் ஜெபஸ்டின் கண்டித்துள்ளார். மேலும் பணியிருந்தும் நீக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் மறுநாள் பெட்ரோல் பங்கிற்கு வந்து ஜெபஸ்டினை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருவட்டார் போலீசில் ஜெபஸ்டின் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- முருகனை தகாதவார்த்தையால் திட்டி கொலை மிரட்டல்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 45).
இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நகரப் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியம் வரை செல்லும் நகரப் பேருந்தை திருப்புறம்பயம் கடைத்தெருவில் நிறுத்தி இருந்த போது திருப்புறம்பயம் வெள்ளாளத் தெரு பரணத்தான் என்கி்ற முருகராஜ் (36) என்பவர் பஸ்சின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் முருகன் இதுபற்றி கேட்டதற்கு முருகராஜ், முருகனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் , தலைமை காவலர் சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து முருகராஜை கைது செய்தனர்.
- மரக்காணம் அருகே கடனை திரும்ப கேட்டு மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அனுமந்தை மீனவர் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) . இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் அதே பகுதியில் தீபாவளி சீட்டும் நடத்தி வந்துள்ளார். இதனால் ராஜேந்திரனுக்கு அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது . எனவே அவர் 2 ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு வெளியில் சென்று உள்ளார். அதிலிருந்து அவர் வீடு திரும்பவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரமும் உறவினர்கள் கூட இதுவரையில் தெரியவில்லை. இந்நிலையில் ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார். கடந்த 8-ந் தேதி சீனிவாச னின் மனைவி மணி மேகலையின் வீட்டிற்குச் சென்று நீங்கள் எங்களிடம் கடன் வாங்கியது 5 லட்சம் அதற்கு வட்டி இப்பொழுது 5 லட்சம் ஆகிவிட்டது.
எனவே வட்டியும் அசலுமாக சேர்த்து எங்களுக்கு ரூ. 10 லட்சம் இப்பொழுது நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மணிமே கலைக்கும் மதிக்கும் வாய் தகராறு ஏற்ப ட்டுள்ளது. இதனால் மதி மணிமேகலையை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால் மணமுடைந்த மணிமேகலை எலி மருந்தை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் புதுவை ஜிப்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மணிமேகலை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
கன்னியாகுமரி:
களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜு (வயது 38) இவர் படந்தாலுமூட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இங்கு திருமணமான 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அவரை மிரட்டி அருகே நின்று, பிஜு போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்ப மாக இருந்ததால், இளம் பெண் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிஜு, இளம்பெண்ணுடன் தான் இருக்குமாறு எடுத்த போட்டோக்களை அவரது கணவர் மொபைல் போனுக்கு அனுப்ப போவ தாக மிரட்டி உள்ளார். மேலும் மற்றொரு மொபைல் போனிலிருந்து அந்தப் போட்டோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார். இதனால் பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த பெண் எறும்பு பொடி(விஷம்) யை தண்ணீரில் கலக்கி குடித்து உள்ளார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஜூவை தேடி வருகின்றனர்.
- கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்த போது வட்டிக்கு பணம் கொடுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று பணம் கேட்டார். 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
உறவினர்களுக்கு பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்றுகொடுத்தார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை வாங்கி கொடுத்தார்.
பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் பணம் வாங்கிய சிலர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் ரூ.100-க்கு 3 ரூபாய், 100 ரூபாய்க்கு 10 ரூபாய், 100 ரூபாய்க்கு 13 ரூபாய் வட்டி வீதமும் மற்றும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1 ½ கோடி கட்டினர்.
பெரும்பாலானோர் அசல் தொகையை செலுத்தி விட்டதால் அசல் தொகை அனைத்தையும் வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கங்காதரன் மிரட்டியுள்ளார். பணம் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தியதால் வீட்டு பத்திரத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.
ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ. 1 ½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.






