search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threat"

    • அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது.
    • விமானத்தில் பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டு இருக்கும் புதிய வீடியோவில், நவம்பர் 19-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்போருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 19-ம் தேதி இந்தியாவில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் "நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்களை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது. நவம்பர் 19-ம் தேதி, ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால், உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    • போட்டோ எடுக்க முயன்றபோது ரவிபிரகாஷ் மீது கல்வீசி தாக்கினர்
    • கோவையில் ரகளையில் ஈடுபட்ட 3 திருநங்கைகள் கைது

    கோவை,

    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிபிரகாஷ் (வயது 31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ரவிபிரகாஷ் சம்பவத்தன்று இரவு சாய்பாபாகாலனியில் உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க சென்றார். அப்போது அவரது செல்போனை யாரோ சிலர் அபேஸ் செய்து விட்டனர்.

    எனவே அதிர்ச்சி அடைந்த ரவிபிரகாஷ் உடனடியாக சாய்பாபா காலனி போலீசில் புகார் அளிக்க சென்றார்.

    அங்கு போனின் ஐ.எம்.இ.ஐ நம்பர் வேண்டும் என்று போலீசார் கேட்டு உள்ளனர். எனவே ரவிபிரகாஷ் வேறு வழியின்றி வீடு திரும்பினார்.

    இந்தநிலையில் அவர் தொலைந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசியவர், உன் போன் என்னிடம் தான் உள்ளது. ரூ.10 ஆயிரம் உடன் வா என்று நிபந்தனை விதித்து உள்ளார்.

    தொடர்ந்து ரவிபிரகாஷ் பூ மார்கெட்டுக்கு சென்றார். அங்கு 3 திருநங்கைகள் இருந்தனர். அவர்கள் ரூ.10 ஆயிரம் கேட்டனர். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என ரவிபிரகாஷ் கூறினார்.

    அப்போது ரூ.3000 கொடுத்து விட்டு போனை வாங்கி செல் என்று மிரட்டினார்கள். ரவிபிரகாஷ் ரூ.1500 தருவதாக கூறியும் ஒப்புக்கொள்ளவில்லை.

    எனவே அவர் 3 பேரையும் போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை ரோட்டில் வீசியெறிந்து கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை திருடி ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. தொடர்ந்து 3 திருநங்கைளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
    • தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார்.

    முல்லைத்தீவு:

    இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கை தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை, விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் தீலிபன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தார்.

    சமீபத்தில் 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்புக்கு பிறகு அவருக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் மிரட்டல்களும் வந்தது.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் நிதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா இலங்கையை விட்டு வெளியேறி தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உயிருக்கு பயந்து நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
    • போலீசார் ஜவுளிக்கடை ஊழியர்கள் 2 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 31 வயது இளம் பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    அதே ஜவுளிக்கடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 32), தூத்துக்குடியைச் சேர்ந்த மதன் (31) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால் இளம்பெண்ணுக்கும், சிலம்பரசனுக்கும் நட்பு ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் சிலம்பரசனும், மதனும் விடாமல் அந்த பெண்ணை தங்களுடன் பேசுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

    சம்பவத்தன்று செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உன்னை புகைப்படம் எடுத்து வைத்துள்ளோம். எங்களிடம் பேசாவிட்டால் அந்த படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். பின்னர் அவர் பெரியகடை வீதி போலீஸ்நிலையத்தில் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக 2 பேர் மிரட்டுகிறார்கள்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த சிலம்பரசன், மதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.92 ஆயிரம் பறிக்கப்பட்டது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வலையபட்டியில் மதுக்கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக ேவலை பார்ப்பவர் முருகேசன் (வயது40). நேற்று இரவு விற்பனையை முடித்து விட்டு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் விற்பனை யாளர்கள் அய்யனார், தனசேகர் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் முருகே சன் பணம் தராமல் பெட்டியை மறைக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் பணப் பெட்டியை பறித்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்தி ருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பணப்பெட்டியில் ரூ.92 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர். ேமலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மதுக்கடை விற்பனையாளர் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார்.
    • மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    குவாலியர்:

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவராகவும் இருந்து வருபவர் கமல்நாத். இவரது மொபைல் போனை மர்ம மனிதர்கள் ஹேக் செய்தனர். பின்னர் இவரது போனில் இருந்து காங்கிரஸ் பொருளாளர் அசோக் சிங் என்பவரை ஹேக்கர்கள் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார்கள்.

    இதேபோல இந்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுர்ஜித்சிங் சதா, குவாலியர் எம்.எல்.ஏ. சதீஷ் சகார்வார் மற்றும் முன்னாள் காங்.பொருளாளர் கோவிந்த் கோயல் ஆகியோரையும் போனில் மிரட்டினார்கள்.

    இதையடுத்து அந்த மர்ம மனிதர்களை கையும், களவுமாக பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். ஹேக்கர்களை தனது பங்களாவுக்கு வந்து கேட்ட பணத்தை வாங்கி செல்லுமாறு கோவிந்த் கோயல் கூறினார். உடனே 2 பேர் அவரது பங்களாவுக்கு பணம் வாங்க வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்களது பெயர் சாகர்சிங் பார்மர், பிந்து பார்மர் என்பதும் இருவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் உட்பட 2 பேர் கைது
    • ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ்சை வழிமறித்து இருவரும் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன். இவர் சம்பவத்தன்று பத்துக்கண்ணு வழியாக பைக்கில் திருபுவனை சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாகச் சென்ற தனியார் பஸ்சை வழிமறித்து 2 பேர் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அந்த வழியாகச் சென்ற அங்காளன் எம்.எல்.ஏ இதனை செல்போனில் வீடியோ எடுத்து போலீசாருக்கு அனுப்பினார்.

    அப்போது தகராறில் ஈடுபட்டவர்கள் அங்காளன் எம்.எல்.ஏ வீடியோ எடுப்பதை பார்த்து ஆத்திரமடைந்து அவரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காட்டேரி குப்பம் சுத்துக்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 22).

    இவருடன் சேர்ந்து தகராறிலா ஈடுபட்டது தொண்டமானத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் இருவரும் பைக்கில் சென்ற போது தனியார் பஸ் இவர்களை முந்திக் கொண்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ்சை வழிமறித்து இருவரும் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இருவரையும் பிடித்து உடைமைகளை சோதனை செய்ததில் ஜெயப்பிரகாஷ் கத்தி வைத்திருந்ததை போலீசார் கண்டனர்.

    இதை தொடர்ந்து கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் எம்.எல்.ஏ.வை மிரட்டிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தெலுங்கானாவில் வங்கிக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டினார்.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம் ஜி.டி.மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த நபர் ஒருவர், போலி வெடிகுண்டை காண்பித்து அங்குள்ளவர்களை மிரட்டினார். அவர், தனக்கு உடனடியாக 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். தவறினால் வெடிகுண்டை வெடிக்க செய்துவிடுவேன் என்றார்.

    இதையடுத்து, வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

    விசாரணையில், ஜி.டி.மெட்லா பகுதியைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் சிவாஜி என தெரிய வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கண்ணாடி விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அருகில் இருந்த பயணிகள் கடை வாடிக்கையாளர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் திடீரென பஸ் நிலையத்தில் குடிபோதையுடன் உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர் கையில் மண்வெட்டியுடன் பயணிகளை மிரட்டியபடி பஸ் நிலையத்தில் கடைகளுக்கு சென்று மிரட்டல் விடுத்தார்.

    முடிதிருத்தும் கடை நடத்தி வந்த இளையராஜா (34) பெட்டிக்கடை நடத்தி வந்த பிரபுராஜ் (45) ஆகியோரது கடைகளின் முன்பக்க கண்ணாடிகளை மண்வெட்டியால் உடைத்தார்.

    கண்ணாடி விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அருகில் இருந்த பயணிகள் கடை வாடிக்கையாளர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பொன்னேரி போலீஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் இன்க்டஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். போலீசை கண்டதும் வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் மிரட்டலில் ஈடுபட்டது பர்மா நகரை சேர்ந்த விஜய் (24) என்பது தெரிய வந்தது தப்பி ஓடிய அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் நடக்கிறது.
    • முக்கிய இடங்களில் கேமராக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.

    வல்லம்:

    தஞ்சை மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.

    பின்னர் இது பற்றி மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் கூறியதாவது ;-

    ஜி.எஸ்.டி. வரி வருவதற்கு முன்னர் பொருட்கள் அனைத்தும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்தது.

    தற்போது பொருளாதார நெருக்கடியால் கடைகளே விற்பனையாகி வருகிறது. வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வணிகர்கள் மீண்டும் சற்று தலைதூக்கி வியாபாரம் செய்து வருகிறோம்.

    தற்போது வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் வந்து கொண்டுள்ளது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட தஞ்சை கரந்தை பகுதியில் சமூக விரோதிகளால் வணிகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

    தற்போது சிலர் ஆயுதபூஜை அன்று பல இடங்களில் கடைகளுக்கு வந்து மிரட்டி மாமூல் கேட்டு வாங்கி சென்றுள்ளனர்.

    சில திருநங்கைகள் கடையில் வாசலில் நின்றும், கடைக்குள் வந்தும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் சில சமூக விரோதிகளும் மிரட்டி பணம் கேட்டனர். தற்போது இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது.

    அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வரவுள்ளது.

    தீபாவளி பண்டிகை நேரத்திலும் இவர்களால் மாமூல் தொல்லை ஏற்படும்.

    மாமூல் கேட்டு வணிகர்கள் மிரட்ட படும் அபாயம் உள்ளது.

    அது போன்ற சூழலில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

    இது தொடர்பாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளோம்.

    சங்கம் சார்பாகவும் தஞ்சை, பட்டுக்கோட்டை, உள்ளிட்ட அந்தந்த ஊர்களில் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.

    வணிகர்கள் மிரட்டப்பட்டால் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    கடைகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும்.

    அதேபோல் அனைவரும் அந்தந்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று உதவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட‌ செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் பாஸ்கரன், ஊடக தொடர்பாளர் இராம.சந்திரசேகரன், மாவட்ட இணை செயலாளர் முருகையன், மாவட்ட கூடுதல் செயலாளர் தாமரை செல்வன், தியாக சுந்தரமூர்த்தி, மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • அவினாசியை ரங்கா நகர் பகுதியை சேர்ந்த கவின் ராஜ் மற்றும் அவர் மனைவியிடம் இருந்து பணம் நகை மற்றும் செல்போன் பறித்து செல்லப்பட்டது
    • புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து ரங்கா நகர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் மகன் கவின் ராஜ் ( வயது 32) .இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவின் ராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா என்று கேட்டவாறு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். எனவே அவர் வீட்டிற்குள் சென்ற போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற ஒரு நபர் திடீரென தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில். வைத்து உன்னிடம் உள்ள பணம் நகைகளை எடுத்து கொடு என மிரட்டியுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி ஓடிவந்து அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று கதறியவாறு கெஞ்சியுள்ளார் .அவரையும் மற்றொரு நபர் தான் வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து மிரட்டியதுடன் அவர்களிடமிருந்து ரூ .10 ஆயிரம் மற்றும் 2 கிராம் மதிப்புள்ள ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    உடனே கவின் ராஜ் அங்கிருந்த காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது பைக்கில் சென்ற நபர்கள் வஞ்சிபாளையம் அருகே பைக்குடன் கீழே விழுந்து பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைந்துவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 52). இவருக்கு சொந்தமான இடம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கிருஷ்ணனின் இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் காற்றாலை அமைத்திருந்தார். சமீபத்தில் 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அவர்களிடம் கிருஷ்ணன் தட்டிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான தனது காற்றாலை எந்திரங்களை தொழிலதிபர் ஏமாற்றி அபகரித்ததாக கூறி கிருஷ்ணன் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூரை சேர்ந்த தியாகராஜன், காங்கேயத்தை சேர்ந்த அருணாதேவி, பாளை தியாகராஜநகரை சேர்ந்த மாணிக்க வாசகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    ×