search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நவம்பர் 19.. ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால் ஆபத்து.. எச்சரிக்கை விடுத்த பயங்கரவாதி
    X

    நவம்பர் 19.. ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால் ஆபத்து.. எச்சரிக்கை விடுத்த பயங்கரவாதி

    • அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது.
    • விமானத்தில் பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டு இருக்கும் புதிய வீடியோவில், நவம்பர் 19-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்போருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 19-ம் தேதி இந்தியாவில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் "நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்களை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது. நவம்பர் 19-ம் தேதி, ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால், உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×