search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளை மண்வெட்டியால் உடைத்து குடிபோதையில் வாலிபர் மிரட்டல் - பயணிகள் அலறியடித்து ஓட்டம்
    X

    கடைகளை மண்வெட்டியால் உடைத்து குடிபோதையில் வாலிபர் மிரட்டல் - பயணிகள் அலறியடித்து ஓட்டம்

    • கண்ணாடி விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அருகில் இருந்த பயணிகள் கடை வாடிக்கையாளர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் திடீரென பஸ் நிலையத்தில் குடிபோதையுடன் உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர் கையில் மண்வெட்டியுடன் பயணிகளை மிரட்டியபடி பஸ் நிலையத்தில் கடைகளுக்கு சென்று மிரட்டல் விடுத்தார்.

    முடிதிருத்தும் கடை நடத்தி வந்த இளையராஜா (34) பெட்டிக்கடை நடத்தி வந்த பிரபுராஜ் (45) ஆகியோரது கடைகளின் முன்பக்க கண்ணாடிகளை மண்வெட்டியால் உடைத்தார்.

    கண்ணாடி விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அருகில் இருந்த பயணிகள் கடை வாடிக்கையாளர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பொன்னேரி போலீஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் இன்க்டஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். போலீசை கண்டதும் வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் மிரட்டலில் ஈடுபட்டது பர்மா நகரை சேர்ந்த விஜய் (24) என்பது தெரிய வந்தது தப்பி ஓடிய அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×