search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "escape"

    • சிறை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் தேடி வந்தனர்.
    • புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கிருந்த ஜெயந்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    சென்னை:

    புழல் சிறையில் இருந்து ஜெயந்தி என்ற பெண் 2 நாட்களுக்கு முன்பு தப்பிச் சென்றார். கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சிறை வாசல் வழியாகவே வெளியேறியது தெரியவந்தது.

    இது தொடர்பாக சிறை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி பகுதியில் தப்பியோடிய கைதி ஜெயந்தி பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கிருந்த ஜெயந்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பெண் கைதி ஜெயந்தி தப்பிய விவகாரத்தில் சிறை வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
    • தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார்.

    முல்லைத்தீவு:

    இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கை தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை, விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் தீலிபன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தார்.

    சமீபத்தில் 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்புக்கு பிறகு அவருக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் மிரட்டல்களும் வந்தது.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் நிதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா இலங்கையை விட்டு வெளியேறி தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உயிருக்கு பயந்து நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் புகுந்த மர்மநபர் பெண் அணிந்திருந்த 4 கிராம் நகையை திருடினார்.
    • மேலும், செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    பேராவூரணி:

    பேராவூரணி ரயிலடி எதிரில் உள்ள வர்த்த சங்க கட்டிடத்தின் அருகில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் விக்னேஷ்.

    ஆட்டோ டிரைவர் .

    இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் நேற்று இரவு தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் புகுந்த மர்மநபர் பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் கொண்ட தாலி கயிறு மற்றும் இரண்டு வயது குழந்தை சுகன்யாஸ்ரீ அணிந்திருந்த வெள்ளி கொலுசு, அருணாகயிறு ஆகியவற்றை அறுத்துக் கொண்டும், மாமியார் இந்திராணி (53) வைத்திருந்த செல்போனை எடுத்து கொண்டும் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பபேரில் ட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்விராஜ் சௌகான், பேராவூரணி இன்ஸ்பெக்டர் காவேரி சங்கர், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், வாகீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கல்லணையில் போலீசிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது
    • தண்ணீரில் தத்தளித்தவர்களை பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்

    திருச்சி,

    தஞ்சை மாவட்டம் தோகூர் போலீசார் கல்லணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை சாலையோரம் போட்டுவிட்டு தப்பி ஓடினர்.போலீசார் அவர்களை விடாமல் துரத்திச் சென்றனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அந்த வாலிபர்கள் கொள்ளிடம் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து தப்பினர். இதையடுத்து போலீசார் அவர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.பின்னர் இரவு 10 மணிக்கு மேல் அந்த 2 வாலிபர்களும் நைசாக காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றனர்.அப்போதும் போலீசார் அவர்களை விரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீஸிடம் இருந்து தப்பிக்க தலை தெறிக்க ஓடினர். பின்னர் மீண்டும் கல்லணை கரிகால் சோழன் யானை சிலை அருகே உள்ள காவேரி ஆற்றில் குதித்தனர்.இரவில் விரட்டிச் சென்ற போலீசார் இருவரையும் காணாததால் ஏமாற்றத்துடன் காவல் நிலையம் திரும்பினர். இதற்கிடையே ஆற்றில் குதித்த இரண்டு வாலிபர்களும் சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் நீச்சல் அடித்தனர்.ஒரு கட்டத்தில் சோர்ந்து போன அவர்களால் நீச்சல் அடிக்க இயலவில்லை. இதனால் தங்களை காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர்.அந்த வழியாக சென்றவர்கள் ஆற்றில் சத்தம் கேட்பதை பார்த்து லைட் அடித்து பார்த்தனர்.அப்போது 2 வாலிபர்கள் நீச்சல் அடிக்க இயலாமல் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டு தண்ணீரில் குதித்து அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.இது பற்றி தகவல் அறிந்த தோப்பூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து தங்களுக்கு போக்கு காட்டிய அந்த 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் (வயது 20).திருச்சி காஜா பேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த முகமது செல்லார்ஷா (19) என்பது தெரியவந்தது. இவர்களில் செல்வகுமார் ஒரு தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்கு கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.அதை தொடர்ந்து தோ கூர் இருவரையும் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் உத்தமர் சீலி மேல வெட்டி பகுதியில் மணல் குவாரி கேசியர் மணிகண்டன், அரவிந்த் ஆகியோரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ. 8 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என விசாரித்தனர்.ஆனால் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்தது. நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் கூறும்போது,போலீசை கண்டதும் ஆற்றில் குதித்த இரண்டு வாலிபர்களுக்கும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மது அருந்தி வந்தபோது போலீசுக்கு பயந்து ஆற்றில் குதித்ததாக தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.
    • திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போருர்:

    திருப்போரூர் குளக்கரை அருகே பேக்கரி கடை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் டி.குன்னத்துரை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பெங்களூரில் இருந்து தனிப்படை போலீசார் பேக்கரிக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஊழியர் விக்னேஷ் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தங்க வளையல்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    விக்னேஷ் கைது செய்யப்பட்டது எதற்கு என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட விக்னேசை பெங்களூர் போலீசார் காரில் அழைத்து சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அப்போது திடீரென விக்னேஷ் போலீசாரை தாக்கி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் அவரை போலீசாரால் விரட்டி பிடிக்க முடியவில்லை. இதனால் கையில் சிக்கிய விக்னேசை தவற விட்டுவிட்டோமே என்ற ஏமாற்றத்துடன் பெங்களூர் போலீசார் திரும்பி சென்றனர்.

    துப்பாக்கியுடன் சுற்றிய விக்னேஷ் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் பிடித்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது 'கொள்ளைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் நகைகளை திருப்போரூரில் பேக்கரி கடையில் வேலைபார்த்து வரும் விக்னேசிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    இதன் அடிப்படையில் தான் பெங்களூர் போலீசார் விக்னேசை துப்பாக்கி உடன் பிடித்து இருந்தனர். ஆனால் அவர் பின்னர் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
    • பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பியுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத் தில் பிரதான சாலையான பாரதியார் வீதியில் அன்சாரி என்பவர் துணிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு காரில் வந்த 5 பேர், அந்த கடையில் விலை உயர்ந்த துணிகள் எடுத்த னர். தொடர்ந்து மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி விட்டு துணிகளை எடுத்துக்கொண்டு காரில் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து கடை ஊழி யர்கள் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீஸ் சூப்பிரண்ட் சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் கடை யில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.
    • இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார்.

    விழுப்புரம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதுடைய இளம் சிறார். இவர் மீது பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் திருட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அவரை ேபாலீசார் கைது செய்தனர்.பின்னர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 18 வயது பூர்த்தியாகும் வரை செங்கல்பட்டு இளம் சிறார் மையத்தில் வைத்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். இதனால் மதுரை இளம் சிறார் மையத்திலிருந்து செங்கல்பட்டு இளம் சிறார் மையத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் போலீசார் கார்த்திக் ஆகியோர் நேற்று இரவு அரசு பஸ்சில் 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் ஓட்டலில் அரசு பஸ் நின்றது. அப்போது பஸ்சில் இருந்து இருந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸ்காரர் கார்த்திக் 17 வயதுடைய இளம் சிறாருடன் சாப்பிட சென்றனர். பின்னர் சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது 17 வயதுடைய இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட போலீசார் இளம் சிறாரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் இளம் சிறார் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் இளம் சிறார் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விக்கிரவாண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று தனியார் ஓட்டல் இருந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தப்பி ஓடிய இளம் சிறாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்
    • புது வாழ்க்கை அமைத்து விட்டதாக செல்போனில் தகவல்

    திருச்சி,

    திருச்சி துறையூர் கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ) மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதை யடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார்.அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச் சென்ற நித்யா வீடு திரும்பவில்லை. இதை யடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை தேடி வந்தார். இந்த நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து நள்ளிரவு அழைப்பு வந்தது.உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா,புது வாழ்க்கை ஒன்றை அமைத்து விட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறி இணைப்பை துண்டித்தார்.இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.அந்த இன்ஸ்டாகிராம் நம்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவர் என பழகி வந்துள்ளார்.

    • கால் முறிவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • பார்த்தசாரதியுடன் சேர்த்து கோகுல் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைதாகி உள்ளனர்.

    கோவை,

    கோவை கோர்ட்டு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    2 ரவுடிகளிடையே ஏற்பட்ட விரோதம் காரணமாக கோகுல் கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்திருந்தனர்.

    இந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 26) என்ற நபருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர். ஏற்கனவே கோத்தகிரியில் சில குற்றவாளிகளை போலீசார் தேடிச் சென்றபோது போலீசாரிடம் இருந்து பார்த்தசாரதி தப்பிச் சென்றார். இதனால் அவரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் பார்த்தசாரதி இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து பார்த்தசாரதி தப்பி ஓடினார். ரத்தினபுரி பகுதியில் உள்ள கண்ணப்பநகர் பாலம் தப்பிச் சென்றார். திடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் அவரது காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். அதனால் அவரால் அங்கிருந்து தப்பி ஓட முடியவில்லை. இதையடுத்து போலீசார் பார்த்தசாரதியை கைது செய்தனர்.

    காலில் முறிவு ஏற்பட்டதால் உடனடியாக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பார்த்தசாரதியுடன் சேர்த்து கோகுல் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைதாகி உள்ளனர்.

    • தேவனோடை கொள்கை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை.
    • மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன், பயிற்சி சப் -இன்ஸ்பெக்டர் நஸ்ரின் மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது கபிஸ்தலம் அருகே உள்ள தேவனோடை கொள்கை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை செய்ததில் மாட்டு வண்டி ஓட்டி வந்த தேவனோடை நடுத்தெரு ராஜன் (வயது 45) என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

    அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஜோதி ராஜனை தேடி வருகின்றனர்.

    • 3 குழந்தைகளுடன் கணவர் தவிப்பு
    • போலீசில் புகார்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள செங்க–னம் பகுதியைச் சேர்ந்த–வர் கந் தன் மனைவி மங்கை–யர்க்க–ரசி (வயது 36) (இருவ–ரின் பெயர்களும் மாற்றப்பட் டுள்ளன). இந்த தம்பதிய–ருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில் மங்கை–யர்க்கரசிக்கு தைராய்டு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு அவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வழக்கம் போல் கடந்த 24-ந்தேதி துறையூர் மருத்துவமனைக்கு செல்வதாக புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கணவர் கந்தன் மனைவியை பல் வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.

    இருந்தபோதிலும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கி–டையே கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு மங்கை–யர்க்கரசி இதேபோன்று திடீரென மாயமாகி உள் ளார். பின்னர் 3 நாட்கள் கழித்து வீடு திரும்பினார். அதேபோன்று வீட்டிற்கு வந்து விடுவார் என கந்தன் எண்ணியிருந்தார்.ஆனால் தற்போது 15 நாட்களுக்கு மேல் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் ஜம்புநாதபுரம் போலீசில் கந்தன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தினர். இதில் மாயமான மங்கையர்க்கரசி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரு–கேயுள்ள மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த வீரா (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருப்பது தெரிய–வந்தது.இதில் மீண்டும் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் சந்தே–கிக்கப்படுகிறது. மேலும் இருவரின் செல்போன்க–ளும் சுவிட்ச் ஆப் செய் யப்பட்டுள்ளதால் போலீ–சாருக்கு சந்தேகம் வலுத் துள்ளது. மூன்று குழந்தை–களின் தாயான 36 வயது பெண்மணி 21 வயது வாலி–பருடன் ஓட்டம் பிடித் துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப–டுத்தியுள்ளது.

    • 2 பேரை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கோவை,

    கோவை கணபதி லட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி அம்பிகா (வயது 42).

    இவர் கோவை ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் லட்சுமி புரம் பகுதியில் உள்ள

    காப்பகத்தில் காவலாளி யாக வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று காப்பகத்தில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தேன்.

    அப்போது காப்பகத்தில் இருந்த மதுரையை சேர்ந்த 19 வயது பெண், காரமடையை சேர்ந்த 22 வயது பெண், தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் மற்றும் 3 வயது குழந்தையுடன் இருந்து வரும் திருப்பூரை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் சேர்ந்து நான் தூங்கி கொண்டு இருந்த போது எனது தலையணையின் அடியில் இருந்த காப்பகத்தின் சாவியை எடுத்து மாயமாகி விட்டனர்.

    அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே அவர்களை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 பெண்களையும் குழந்தையும் தேடி வந்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் உள்பட 2 பெண்கள் அவர்களது வீட்டு சென்று விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மற்ற 2 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 இளம் பெண்களும் எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினையா என 2 பேரை மீட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×