என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

    • நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் புகுந்த மர்மநபர் பெண் அணிந்திருந்த 4 கிராம் நகையை திருடினார்.
    • மேலும், செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    பேராவூரணி:

    பேராவூரணி ரயிலடி எதிரில் உள்ள வர்த்த சங்க கட்டிடத்தின் அருகில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் விக்னேஷ்.

    ஆட்டோ டிரைவர் .

    இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் நேற்று இரவு தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் புகுந்த மர்மநபர் பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் கொண்ட தாலி கயிறு மற்றும் இரண்டு வயது குழந்தை சுகன்யாஸ்ரீ அணிந்திருந்த வெள்ளி கொலுசு, அருணாகயிறு ஆகியவற்றை அறுத்துக் கொண்டும், மாமியார் இந்திராணி (53) வைத்திருந்த செல்போனை எடுத்து கொண்டும் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பபேரில் ட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்விராஜ் சௌகான், பேராவூரணி இன்ஸ்பெக்டர் காவேரி சங்கர், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், வாகீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×