search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செல்போனில் வீடியோ எடுத்த எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல்
    X

    கோப்பு படம்.

    செல்போனில் வீடியோ எடுத்த எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல்

    • சிறுவன் உட்பட 2 பேர் கைது
    • ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ்சை வழிமறித்து இருவரும் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன். இவர் சம்பவத்தன்று பத்துக்கண்ணு வழியாக பைக்கில் திருபுவனை சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாகச் சென்ற தனியார் பஸ்சை வழிமறித்து 2 பேர் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அந்த வழியாகச் சென்ற அங்காளன் எம்.எல்.ஏ இதனை செல்போனில் வீடியோ எடுத்து போலீசாருக்கு அனுப்பினார்.

    அப்போது தகராறில் ஈடுபட்டவர்கள் அங்காளன் எம்.எல்.ஏ வீடியோ எடுப்பதை பார்த்து ஆத்திரமடைந்து அவரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காட்டேரி குப்பம் சுத்துக்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 22).

    இவருடன் சேர்ந்து தகராறிலா ஈடுபட்டது தொண்டமானத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் இருவரும் பைக்கில் சென்ற போது தனியார் பஸ் இவர்களை முந்திக் கொண்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ்சை வழிமறித்து இருவரும் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இருவரையும் பிடித்து உடைமைகளை சோதனை செய்ததில் ஜெயப்பிரகாஷ் கத்தி வைத்திருந்ததை போலீசார் கண்டனர்.

    இதை தொடர்ந்து கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் எம்.எல்.ஏ.வை மிரட்டிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×