search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.92 ஆயிரம் பறிப்பு
    X

    மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.92 ஆயிரம் பறிப்பு

    • மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.92 ஆயிரம் பறிக்கப்பட்டது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வலையபட்டியில் மதுக்கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக ேவலை பார்ப்பவர் முருகேசன் (வயது40). நேற்று இரவு விற்பனையை முடித்து விட்டு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் விற்பனை யாளர்கள் அய்யனார், தனசேகர் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் முருகே சன் பணம் தராமல் பெட்டியை மறைக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் பணப் பெட்டியை பறித்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்தி ருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பணப்பெட்டியில் ரூ.92 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர். ேமலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மதுக்கடை விற்பனையாளர் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×