என் மலர்
நீங்கள் தேடியது "Arrest"
- போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
- பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அடுத்த குஜ்ஜார அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்முடி (வயது45). இவர் கடந்த 18-ந் தேதி இரவு, சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மாரண்ட அள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடி குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து, மாரண்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் காவல் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் வெடி குண்டு கிடைக்கவில்லை.
இதையடுத்து, குஜ்ஜார அள்ளிக்கு சென்ற போது, பொன்முடி தலைமறைவாகி விட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே பொன்முடி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவ்வப்போது 100 என்ற எண்ணுக்கு போன் செய்து பேசுவேன் என்றும், அதே போல் கடந்த 18-ந் தேதி வெடிகுண்டு வைத்ததாக கூறியதாக குற்றத்தை ஒப்பு கொண்டார். இதையடுத்து, பொன்முடியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
- போலீசார் விரைந்து சென்று மாரப்பா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் சுரேஷை தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சாலக்குர்தி தாண்டவை சேர்ந்தவர் பாஸ்கர். தொழிலதிபர். இவரிடம் விஜய நகரம் மாவட்டம், கோட்டூர், பட்டண அள்ளி சேர்ந்த மாரப்பா (58), பிரகாஷ் (29), லாரி டிரைவர் சுரேஷ் ஆகியோர் பாஸ்கரை சந்தித்தனர்.
தங்களிடம் ½ கிலோ எடையுள்ள ஒரிஜினல் தங்க நாணயங்கள் உள்ளதாக தெரிவித்தனர். அதிக மதிப்புடைய தங்க நாணயங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறினர். அவர்கள் வைத்திருக்கும் தங்க நாணயங்களுக்கு ஈடாக பாஸ்கர் ரூ.8 லட்சம் பணம் கொடுத்தார்.
பின்னர் அவர்கள் கொடுத்த தங்க நாணயங்கள் போலியானது என தெரிய வந்தது. இது குறித்து பாஸ்கர் ஜகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று மாரப்பா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் சுரேஷை தேடி வருகின்றனர்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
- கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மணியம் பாடியில் நிலஅளவையாளராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் நிலம் அளவீடு செய்ய இன்று மதியம் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து விஜயமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூதாட்டி வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
- மூதாட்டிக்கு குப்பை கொட்டிய பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஹுச்சம்மா (76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார். இதைப்பார்த்த மூதாட்டி ஹுச்சம்மா அவரிடம் ஏன் எனது வீட்டின் முன்பு குப்பை கொட்டினாய் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தை சேர்ந்த மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் வந்து மூதாட்டியிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் ஆத்திரம் அடைந்த பிரேமா, மூதாட்டி ஹுச்சம்மாவை அந்த பகுதியில் இருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்து தாக்கினார். இந்த சம்பவத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் செயல்பட்டனர். மூதாட்டியை பிரேமா மரத்தில் கட்டி வைத்து தாக்கியதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மூதாட்டியை மீட்டனர்.
பின்னர் இது குறித்து தாக்கப்பட்ட ஹுச்சம்மாவின் மகன் கண்ணப்பா என்பவர் ஆனந்த்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பிரேமா, மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் மீத தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வயதான பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பிரேமாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோரின் பங்கு என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..
- கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- ஒரு அடுக்குமாடி குயிருப்பில் கலால் துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.
கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குயிருப்பில் கலால் துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு குடியிருப்பில் இருந்து உயர்ரக கலப்பின கஞ்சா வைத்திருந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர்கள் காலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா ஆகியோர் பிடிபட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் கலால் துறையினர் கைது செய்தனர்.
இயக்குனர்கள் இருவரும் சிக்கிய அடுக்குமாடி குடியிருப்பு மலையாள திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக் குனருமான சமீர் தாஹிரின் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது கலால் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராக கல்லாதுறை நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி கொச்சி கலால் துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். உயர்ரக கஞ்சா அடுக்குமாடி குடியிருப்புக்கு எப்படி வந்தது? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் இயக்குனர் சமீர் தாஹிரை கலால் துறையினர் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உயர் ரக கஞ்சா சிக்கிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- இம்தியாஸ் அகமதுவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது 2 பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குல்காமை சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே (வயது 23). என்பவர் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்தாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கு தான் உதவியதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் அந்த இடத்தை காண்பிப்பதாக அவர் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து நேற்று இம்தியாஸ் அகமது மக்ரேவை போலீசார் மற்றும் ராணுவ படையினருடன், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற இம்தியாஸ் அகமது மக்ரே, வேஷா நதியில் குதித்துள்ளார். ஆனால் அவர் நீந்த முயற்சித்தும் முடியாமல் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இம்தியாஸ் அகமது மக்ரேவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக மக்ரேவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதனை மறுத்த பாதுகாப்பு படையினர் இம்தியாஸ் அகமது மக்ரே ஆற்றில் குதித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
- கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
- கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘ஆலப்புழா ஜிம்கானா’.
கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதில் சமீபத்தில் ஒரு ஒட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனைக்கு சென்ற போது அங்கிருந்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு விடுவித்தனர். இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்திய நிலையில் தவறாக அணுகிய தாக நடிகை வின்சி புகார் கொடுத்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான். அதேபோல் மற்றொரு இயக்குநர் அஷ்ரப் ஹம்சா.இவர் தமாஷா, பீமன்டே வழி, சுலைகா மன்சில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர்கள் கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டனர்.
இங்கு இன்று அதிகாலை கலால் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இயக்குநர்கள் உள்பட 3 பேர் அங்கு இருந்தனர். அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1½ கிராம் கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இயக்குநர்களுடன் இருந்த 3-வது நபர் ஷாகித் முகமது.இவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் போலீசார் சோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக விசாரணைக்கு பிறகு 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் போதைப் பொருளை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.
இது தொடர்பாக கலால் துறை அதிகாரி ஓருவர் கூறுகையில், கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சோதனைக்கு சென்றோம். அங்கிருந்த 3 பேரிடம் இருந்து கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.
அவர்கள் மீது போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரும் தொடர்ந்து போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இயக்குநர் காலித் ரகு மான், அனுராகா கரிக்கின் வெல்லம், உண்டா, காதல், தள்ளுமாலா போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார்.
- வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.
நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார். பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ள போதிலும் காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
47 வயதானவர். திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.
அப்போது தனக்கு திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்றும் அவர் துணை நடிகையிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பி துணை நடிகையும் சகுமாருடன் பழகி இருக்கிறார்.
அந்த துணை நடிகை கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலும் சுகுமார் அவரை ஏற்றுக் கொள்வதாகவே தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து துணை நடிகை சுகுமாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
அப்போது காதல் சுகுமார் துணை நடிகை இடம் தேவைப்படும் போதெல்லாம் நகை பணத்தை வாங்கியுள்ளார்.துணை நடிகையும் சுகுமாருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே என எண்ணி நகை-பணத்தை கொடுத்துள்ளார்.
இப்படி துணை நடிகை இடம் இருந்து நகை பணத்தை சுருட்டிய பிறகு காதல் சுகுமார் அவருடன் பழகுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் துணை நடிகை செல்போனில் அழைத்தாலும் காதல் சுகுமார் போனை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து காதல் சுகுமார் பற்றி துணை நடிகை விசாரித்துள்ளார்.அப்போது காதல் சுகுமார் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் அவர் குடும்பத்தோடு வசித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை இது பற்றி வடபழனி போலீசில் புகார் அளித்தார்.கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட இந்த புகார் மீது வடபழனி மகளிர் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வந்தனர்.
இதன் காரணமாக போலீஸ் கமிஷனர் அருண் துணை நடிகை அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாம்பலம் மகளிர் போலீசார் சுகுமார் மீது நம்பிக்கை மோசடி. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசார் தன்மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் சுகுமார் தலை மறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதை தொடர்ந்து நடிகர் காதல் சுகுமார் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- அவருக்கு மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
- அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 48). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் பிரான்சிஸ் தனது கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலியின் மகள் ஆகியோருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
அப்போது கள்ளக்காதலியின் 16 வயது மகளை பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர்.
- இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர்.
- ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் விவேக் (வயது 29). இவர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தனர். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இது குறித்து காதலனிடம் அந்த பெண் கூறியுள்ளார்.
உடனே அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்,அதற்கு முன் நான் ஊருக்கு சென்று பெற்றோரிடம் நமது காதல் விவகாரங்களை கூறி சம்மதம் பெற்று வருகிறேன் என கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார். காதலன் வந்து திருமணம் செய்து கொள்வார் என்று காத்திருந்த அந்த பெண்ணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஊருக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை.செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போனையும் எடுப்பதில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப்பெண் தனது காதலன் குறித்து விசாரித்த போது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக ஊருக்கு சென்ற காதலன் விவேக் பெற்றோர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17-ந் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்கள் போலீசாரின் பஸ் மற்றும் பள்ளி பஸ் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி தீ வைத்தனர்
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னசேலம் அருகே ஏரவார் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ், (வயது28), வேல்முருகன் (29) ஆகியோர் கலவரத்தின் போது போலீசாரின் வாகனத்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.
அதேபோல் கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த அவிஷ் ஸ்ரீ முகந்த் (20) பள்ளியில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கியதும் தெரியவந்தது.
இதனையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 3 பேரையும் கைது செய்து, கள்ளக்குறிச்சி2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் நின்ற கொண்டிருந்த 3வாலிபர்களை பார்த்து, ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
- 3பேரும் சேர்ந்து கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள்.
கடலூர்:
கடலூர் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்ற வருகின்றது. அங்கு 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்து ஷாம் கோஷ் (வயது 37) ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார் .அப்போது அங்கு இருந்த 3 நபர்களும், நாங்கள் இரும்பு திருடுவதை நீ மொபைல் போனில் போட்டோ எடுக்கின்றாயா என கேட்டு, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஷாம் கோஷை தாக்கினார்கள் ஷாம் கோஷ்யுடன் இருந்த 2 பணியாளர்கள், 3 பேரை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த 3 நபர்களில் ஒருவர், அவரது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதையடுத்து மேலும், 3 நபர்கள் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் 6 பேரும் சேர்ந்து 3 தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினார்கள் இதில் ஷாம் கோஷை தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டதாகவும், மற்ற நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த ஷாம் கோஷ், சதன் கோஷ், பிஸ்வாஜ்பால் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் புதுக்கடை காலனியை சேர்ந்தவர்கள் சிந்தனைச்செல்வன் (வயது 23), சதீஷ்குமார் (21), தர்மராஜ் (28), மணிகண்டன் (27) ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.






