என் மலர்
நீங்கள் தேடியது "Suicide"
- சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பெண் ஒருவர் தனது 7 வயது மகன் முன்னிலையில் தனது கணவரை கொன்று, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் முகேஷ் பர்மருக்கும், அவரது மனைவியான சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சங்கீதா, கணவரை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அக்கடிதத்தை கைப்பற்றிய போலீசார், திருமணம் மற்றும் நிதி பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- இம்தியாஸ் அகமதுவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது 2 பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குல்காமை சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே (வயது 23). என்பவர் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்தாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கு தான் உதவியதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் அந்த இடத்தை காண்பிப்பதாக அவர் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து நேற்று இம்தியாஸ் அகமது மக்ரேவை போலீசார் மற்றும் ராணுவ படையினருடன், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற இம்தியாஸ் அகமது மக்ரே, வேஷா நதியில் குதித்துள்ளார். ஆனால் அவர் நீந்த முயற்சித்தும் முடியாமல் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இம்தியாஸ் அகமது மக்ரேவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக மக்ரேவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதனை மறுத்த பாதுகாப்பு படையினர் இம்தியாஸ் அகமது மக்ரே ஆற்றில் குதித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
- இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மதுரை
மதுரை அவனியாபுரம் வள்ளல் ஆனந்தபுரம் ஜே.ஜே. நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மாலினி (வயது 24). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் குடும்பப் பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசில் மாலினியின் தந்தை கருப்பையா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மிளகரணை நாகம்மாள் தெரு வடக்கு தெருவை சேர்ந்தவர் மணி (50). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயபிரிய குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் ரங்கசாமி லே அவுட்டை சேர்ந்தவர் ஜெயராமன்.
இவரது இளைய மகன் விஜயபிரியகுமார் (வயது 47) இவர் பல் மருத்துவ படிப்பு 3ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது மன நோயால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த 9 ஆண்டுகளாக அரியாங்குப்பம் மணவெளியில் உள்ள மனநல மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை அவரது உறவினர்கள் அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் விஜயபிரிய குமாரின் சித்தப்பா ராமகிருஷ்ணன் மனநல மையம் சென்று அவரை பார்த்து பேசிவிட்டு வந்தார்.
அவர் வந்து சென்ற சிறிது நேரத்தில் விஜயபிரிய குமார் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனே கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயபிரிய குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று வீட்டில் பாஜக மகளிரணி நிர்வாகி தீபிகா படேல் தூக்கில் தொங்கினார்.
- தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தில் 30-வது வார்டு பாரதீய ஜனதா கட்சியின் மகிளா மோர்ச் பிரிவு தலைவராக தீபிகா படேல் (வயது34) என்பவர் இருந்து வந்தார். இவரது கணவர் விவசாயியாக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று வீட்டில் தீபிகா படேல் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபிகா படேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் அழைப்புகளை பட்டியல் சேகரித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர்.
- மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
கொடைக்கானல்:
மதுரை மேலக்கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அவரது உறவினர் மகாலெட்சுமி என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சசிகுமார் மகாலெட்சுமி மீது கொண்ட காதல் மோகத்தால் நாடு திரும்பினார்.
இவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றுலா சென்று வந்துள்ளனர். உறவினர்கள் இவர்களை சந்தேகப்படவில்லை. இந்த நிலையில் மகாலெட்சுமி தனது கணவரிடம் நகை கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் மகாலெட்சுமியை தேடினார்.
இந்நிலையில் மகாலெட்சுமி தனது குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொடைக்கானலில் உள்ளேன் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து கொடைக்கானலுக்கு சென்றனர்.
ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பு சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர். அதன்படி விஷ மருந்தை மகாலெட்சுமி மட்டும் குடித்துள்ளார். ஆனால் சசிகுமார் அதனை குடிக்காமல் வெளியே வீசினார்.
மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மகாலெட்சுமி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கள்ளக்காதலன் சசிகுமாரை தேடி வருகின்றனர்.
- தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர்.
- சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தார்.
தெலுங்கானா மாநிலம் கல்குவத்தியை சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி (வயது 44). இவரது மனைவி கவிதா (வயது 35).
தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் வருவாய் இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் ரெட்டி தனது மகளை தூக்கில் தொங்கவிட்டும், மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.
பின்னர் கணவன், மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் 4 பேரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரசேகர் ரெட்டி எழுதி வைத்த கடிதம் மூலம் அவர் கடன் தொல்லையால் மகன் மகளைக் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்தது தெரியவந்தது.






