என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உயர் ரக கஞ்சா சிக்கிய விவகாரம்: பிரபல மலையாள பட இயக்குனர் கைது
    X

    உயர் ரக கஞ்சா சிக்கிய விவகாரம்: பிரபல மலையாள பட இயக்குனர் கைது

    • கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • ஒரு அடுக்குமாடி குயிருப்பில் கலால் துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.

    கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குயிருப்பில் கலால் துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு குடியிருப்பில் இருந்து உயர்ரக கலப்பின கஞ்சா வைத்திருந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர்கள் காலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா ஆகியோர் பிடிபட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் கலால் துறையினர் கைது செய்தனர்.

    இயக்குனர்கள் இருவரும் சிக்கிய அடுக்குமாடி குடியிருப்பு மலையாள திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக் குனருமான சமீர் தாஹிரின் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது கலால் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராக கல்லாதுறை நோட்டீஸ் அனுப்பியது.

    அதன்படி கொச்சி கலால் துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். உயர்ரக கஞ்சா அடுக்குமாடி குடியிருப்புக்கு எப்படி வந்தது? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் இயக்குனர் சமீர் தாஹிரை கலால் துறையினர் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    உயர் ரக கஞ்சா சிக்கிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×