என் மலர்
நீங்கள் தேடியது "வதந்தி"
- தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
- சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். மேலும், உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் "Pokkiri Victor (@Pokkiri_Victor)" w "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சசிகுமார் கடந்த 2022-ம் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார்.
- அபர்ணா தாஸ் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து சசிகுமார் கடந்த 2022-ம் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார். வதந்தி தொடரின் முதல் சீசனில், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளை மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தொடரின் முன்னணி கதாப்பாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இந்நிலையில் அபர்ணா தாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது இதனை அபர்ணா தாஸ் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
அபர்ணா தாஸ் இதற்கு முன் பீஸ்ட், டாடா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
- கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
- ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்து ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதனை தொடர்ந்து சசிகுமார் கடந்த 2022-ம் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க உள்ளார். வதந்தி தொடரின் முதல் சீசனில், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தொடரின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. மேலும், படப்பிடிப்பு பணிகளை மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் அபர்ணா தாஸ் இணைந்துள்ளதாக சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணலில் கூறியுள்ளார்.
அபர்ணா தாஸ் இதற்கு முன் பீஸ்ட், டாடா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
- ரூ.500 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் எனக் கூறப்பட்டது.
- சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையே இதற்கிடையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மார்ச் 2026க்குள் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மக்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் 'கேபிடல் டிவி' என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோ, ரூ.500 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் எனக் கூறி, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ 4.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற நிலையில், PIB உண்மைச் சரிபார்ப்புத் துறை இந்த வதந்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இந்த நோட்டுகள் நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையே இந்த வதந்திக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த சுற்றறிக்கையில்,ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் புழக்கத்தை ஏடிஎம்கள் மூலம் அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இது ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு விளக்கமளித்துள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- நடிகர் எஸ்.ஜே. சூர்யா பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
- இவர் தற்போது ‘வதந்தி’ வெப் தொடரில் நடித்துள்ளார்.
அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.

எஸ்.ஜே. சூர்யா
தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இதன் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வதந்தி ஃபர்ஸ்ட் லுக்
அதன்படி, 'வதந்தி' வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா, "இது என்னை பற்றிய வதந்தி அல்ல" என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
It's not a rumour about me…it's my first web series in @PrimeVideo Vadhandhi. Very happy to share the first look 🥰🥰🥰👍👍👍💐💐💐Catch our new thriller #VadhandhiOnPrime on 2nd December directed by @andrewxvasanth and produced by @PushkarGayatri pic.twitter.com/0JOf5Z7Uz3
— S J Suryah (@iam_SJSuryah) November 17, 2022
- நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'வதந்தி'.
- இந்த தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.

வதந்தி
தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வதந்தி
'வதந்தி' வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது நடித்துள்ள வெப் தொடர் ‘வதந்தி’.
- இந்த தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது. தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா
புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இதையடுத்து வதந்தி படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். வதந்தி படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதில் நடிகர் சூர்யா, "போய் சேர வேண்டிய இடம் நூறு என்றால் நான் 15 கிலோ மீட்டர் மட்டுமே கடந்திருக்கிறேன். எனக்கு ஆஸ்கர் விருது வாங்குவது தேசிய விருது வாங்குவது இவைகளில் விருப்பம் இல்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்தால் அதை உடனே பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்க வேண்டும். அந்த அன்பை மக்களிடம் அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
- எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான ‘வதந்தி’ வெப் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
- இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி15 படத்தில் நடித்து வருகிறார்.
அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.

வதந்தி
இதைத்தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கும் ஆர்சி15 படத்தில் நடித்து வருகிறார். ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எஸ்.ஜே. சூர்யா
இந்நிலையில், 'வதந்தி' புரோமோஷன் பணிகளின் போது நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் ஆர்சி 15 படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர் ஆர்சி 15 பற்றி சொல்ல எனக்கு அனுமதி இல்லை எனவும் இயக்குனர் ஷங்கர் படத்தை முடிக்கும் வரை விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், ஆர்சி 15-ல் என் பங்கு பற்றி நான் பேசுவது கூட, தயாரிப்பாளர்கள் நான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் தான் என தெரிவித்துள்ளார்.
- நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான வெப் தொடர் ‘வதந்தி’.
- இந்த வெப் தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர்.
அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.

வதந்தி
புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வதந்தி
இந்நிலையில், 'வதந்தி' வெப் தொடர் குறித்து 'வெண்ணிலா கபடி குழு' இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எஸ்.ஜே. சூர்யா சார் நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'வதந்தி' வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா மிக சிறப்பான நடிப்பை அளவாக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். லைலா அவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் புஷ்கர் - காயத்ரி மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Thx a lot sir 🥰🙏 https://t.co/44TS8Nk9pD
— S J Suryah (@iam_SJSuryah) December 7, 2022
- புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
- தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 700 பேர் வந்து தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில், மேற்கு வங்காளம், பீகார், உத்தர–காண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி பால்பண்ணை பகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சில இடங்களில் துன்புறுத்தப்படுவதாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கட்டுமானப் பணி நடைபெறும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு நடத்தியதுடன், புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அப்போது கலெக்டர் பேசுகையில், இங்கு வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலா–ளர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, எந்த பயமும் இன்றி சுதந்திரமாக பணியாற்றலாம். மேலும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார். கலெக்டர் பேசியதை யுவா ஜெயின் சங்கத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தியில் மொழி பெயர்த்தார்.
அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் இங்கு பாது–காப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், கோட்டாட்சியர் வ.யுரேகா, டிஎஸ்பி சஞ்சீவ்குமார், துணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு) ராஜேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அல்மாஸ்பேகம் தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
- பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர்.
திருப்பூர்:
வட மாநில தொழிலா ளர்கள், தமிழர்களால் தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோவை, சிலர் சமூக வலைதளங்களில் பரப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இச்சூழலில், பல்வேறு மாநில தொழிலாளர்கள், மக்கள் வந்து செல்லும் திருப்பூர் ரெயில், பஸ் நிலை யங்களில், பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர். அதில் 'வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்; அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையை தூண்டும் வகையில், சித்திரிக்கப்பட்ட வீடியோவை, யாரும் பகிரக்கூடாது. அவ்வாறு பகிர்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டு வருகிறது.
- சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலுசமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல்
- தனியார் ஆக்கிரமிப்பை அகற்றிய விவகாரம் திசைதிருப்பபடுவதாக போலீசார் விளக்கம்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதனை திசை திருப்பும் விதமாக போலீசார் குறித்து தவறான பிரசாரங்களை பல்வேறு இந்து இயக்கங்கள் மூலம் சிவனடியார் மீது தாக்குதல் என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூக அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரங்களை செய்து வருவதாக தெரியவருகிறது. இது போன்ற பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று மதத்தின் பெயரால் மக்களின் கவனத்தை திசை திருப்பி தங்களது சுயலாபத்திற்காக சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் சமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அரியலூர் மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.






