என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vadhandhi"

    • கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
    • ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    சசிகுமார் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்து ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    அதனை தொடர்ந்து சசிகுமார் கடந்த 2022-ம் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க உள்ளார். வதந்தி தொடரின் முதல் சீசனில், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தொடரின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. மேலும், படப்பிடிப்பு பணிகளை மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் அபர்ணா தாஸ் இணைந்துள்ளதாக சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணலில் கூறியுள்ளார்.

    அபர்ணா தாஸ் இதற்கு முன் பீஸ்ட், டாடா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது ‘வதந்தி’ வெப் தொடரில் நடித்துள்ளார்.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.


    எஸ்.ஜே. சூர்யா

    தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இதன் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    வதந்தி ஃபர்ஸ்ட் லுக்

    அதன்படி, 'வதந்தி' வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா, "இது என்னை பற்றிய வதந்தி அல்ல" என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'வதந்தி'.
    • இந்த தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.


    வதந்தி

    தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    வதந்தி

    'வதந்தி' வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது நடித்துள்ள வெப் தொடர் ‘வதந்தி’.
    • இந்த தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது. தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.


    எஸ்.ஜே.சூர்யா

    புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இதையடுத்து வதந்தி படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். வதந்தி படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதில் நடிகர் சூர்யா, "போய் சேர வேண்டிய இடம் நூறு என்றால் நான் 15 கிலோ மீட்டர் மட்டுமே கடந்திருக்கிறேன். எனக்கு ஆஸ்கர் விருது வாங்குவது தேசிய விருது வாங்குவது இவைகளில் விருப்பம் இல்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்தால் அதை உடனே பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்க வேண்டும். அந்த அன்பை மக்களிடம் அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.



    • எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான ‘வதந்தி’ வெப் தொடர் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
    • இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி15 படத்தில் நடித்து வருகிறார்.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.


    வதந்தி

    இதைத்தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கும் ஆர்சி15 படத்தில் நடித்து வருகிறார். ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    எஸ்.ஜே. சூர்யா

    இந்நிலையில், 'வதந்தி' புரோமோஷன் பணிகளின் போது நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் ஆர்சி 15 படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர் ஆர்சி 15 பற்றி சொல்ல எனக்கு அனுமதி இல்லை எனவும் இயக்குனர் ஷங்கர் படத்தை முடிக்கும் வரை விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், ஆர்சி 15-ல் என் பங்கு பற்றி நான் பேசுவது கூட, தயாரிப்பாளர்கள் நான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் தான் என தெரிவித்துள்ளார்.

    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான வெப் தொடர் ‘வதந்தி’.
    • இந்த வெப் தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர்.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.


    வதந்தி

    புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    வதந்தி

    இந்நிலையில், 'வதந்தி' வெப் தொடர் குறித்து 'வெண்ணிலா கபடி குழு' இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எஸ்.ஜே. சூர்யா சார் நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'வதந்தி' வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா மிக சிறப்பான நடிப்பை அளவாக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். லைலா அவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் புஷ்கர் - காயத்ரி மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த அறிக்கையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    ×