search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kangana ranaut"

    • இமாச்சல் பிரதேசத்தில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுடன் சந்திப்பு.
    • பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளர் கங்கனா ரனாவத்.

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், கங்கனா ரனாவத் இன்று திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை தர்மஷாலாவில் சந்தித்தார்.

    இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    அதில், " இன்று நான் தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்தேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்.

    அவர் இமாச்சல பிரதேசத்தில் இருப்பதை ரசிப்பதாகவும், பாரதத்தை முற்றிலும் நேசிக்கிறேன் என்றும் அவரது புனிதர் கூறினார்.

    அத்தகைய பாக்கியம்.. அத்தகைய மரியாதை.." என்றார்.

    • கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநில மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான பிரதிபா சிங் போட்டியிடுகிறார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரதிபா சிங் போடடியிடுகிறார். இவரது மகன் விக்ரமாதித்யா சிங் இமாச்சல பிரதேச மாநில மந்திரியாக இருந்து வருகிறார்.

    தனது தாயாருக்காக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் விக்ரமாதித்யா சிங். இந்த நிலையில் கங்கனா ரனாவத் சர்ச்சைகளின் ராணி என விக்ரமாதித்யா சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விக்ரமாதித்யா சிங் கூறியதாவது:-

    கங்கனா ரனாவத் சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் சர்ச்சைகளின் ராணி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர் அவ்வப்போது பேசியது தேர்தலில் கேள்வி எழுப்பப்படாது என்று நினைத்தால், அதன்பின் அவருக்கு ஜெய் ஸ்ரீராம்.

    பிரச்சனைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்படும். அதற்கு அவர் பதில் அளித்தாக வேண்டும். குறிப்பாக இமாச்சல பிரதேச மாநலித்தின் மண்டி தொகுதி மக்களுக்கு.

    இவ்வாறு விக்ரமாதித்யா தெரிவித்துள்ளார்.

    மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கங்கனா ரனாவத்திற்கு எதிராக எழும்பிய குற்றச்சாட்டு குறித்து கூறுகையில் "கடவுள் ராமர் அவருக்கு அருளாசி வழங்கட்டும். இந்த மாநில மக்களவை பற்றி ஏதும் தெரியாத அவர் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் அவர் தேவ் பூமியில் இருந்து திரும்புவார்" என்றார்.

    ஆனால், கங்கனா ரனாவத், முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்றார்.

    • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் பேசியுள்ளார்
    • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லை - நெட்டிசன்கள்

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.

    இந்நிலையில், நாட்டின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என கங்கனா ரனாவத் கூறியதற்கு நேதாஜி குடும்பம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக போஸ் குடும்பத்தை சேர்ந்தவரான சந்திரகுமார் போஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "தங்கள் அரசியல் ஆசைக்காக வரலாற்றை சிதைக்க கூடாது. போஸ் ஒரு அரசியல் சிந்தனையாளர், போர் வீரர், அரசியல்வாதி, தொலைநோக்கு பார்வையுடையவர். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்துப் போராடிய ஒரே தலைவர். அத்தகைய தலைவருக்கு நாம் கொடுக்க கூடிய உண்மையான மரியாதை என்பது அவரது சித்தாந்தத்தை பின்பற்றுவது தான்" என்று பதிவிட்டு உள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
    • தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என கூறினார்

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.

    சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ். அவர் பிரதமராக பதவி வகித்ததில்லை. இந்திய தேசிய காங்கிரசில் பணியாற்றியபின் 1939 -ம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே. டி. ராமாராவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "வடக்கில் ஒரு பா.ஜ.க வேட்பாளர் சுபாஷ் சந்திர போஸ் தான், இந்தியாவின் முதல் பிரதமர் என்கிறார். தெற்கில் ஒரு பா.ஜ.க தலைவர், மகாத்மா காந்தி தான் முதல் பிரதமர் என்கிறார். இவர்கள் எல்லாம் எங்கு கல்வி கற்றார்கள்?" என்று பதிவிட்டுள்ளார். 

    • நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.

    சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ். அவர் பிரதமராக பதவி வகித்ததில்லை. இந்திய தேசிய காங்கிரசில் பணியாற்றியபின் 1939 -ம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.

    இன்னும் சிலர், 'கங்கனா பா.ஜ.க தலைவர்களையே விஞ்சிவிடுவார். அந்த அளவுக்கு அவர் புத்திசாலி' என வஞ்சப் புகழ்ச்சி செய்கின்றனர்.

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கங்கனா, இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

    • சன்னி தியோல் தொகுதி மக்கமே செல்லவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
    • கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதிநிதியை நியமித்தாக கூறப்படும் அறிவிப்பை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர்.

    பா.ஜனதா கட்சி இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இத்தொகுதியின் எம்.பி.யாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் பிரதிபா சிங் இருந்து வருகிறார். இவர் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இன்னும் இந்த தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் பிரதிபா சிங் மகனும், இமாச்சல பிரதேச மாநில மந்திரியுமான விக்ரமாத்தியா சிங், நடிகரும் எம்.பி.யுமான சன்னி தியோல் உடன் கங்கனா ரனாவத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

    சன்னி தியோல் பாராளுமன்றத்திற்கும், பாராளுமன்ற தொகுதிக்கும் செல்வதில்லை என விமர்சனம் வைக்கப்படுகிறது. சன்னி தியோல் தனது தொகுதி கூட்டத்திற்கா தனக்குப்பதிலாக தனது பிரதிநிதியை நியமித்ததாக கூறப்படும் அறிவிப்பை விக்ரமாத்தியா சிங் வெளியிட்டுள்ளார்.

    இதை வெளியிட்டு விக்ரமாதித்யா "அதேபோன்ற நிலை மண்டி தொகுதிக்கும் உருவாகிவிடக் கூடாது என நான் கடவுள் ராமரிடம் வேண்டிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் வாக்களிப்பதற்கு முன்னதாக இதை நினைத்து பார்க்க வேண்டும் என்றார்.

    • கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்- கங்கனா.
    • தனது சமூக வலைதள பக்கங்களை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் பதில்.

    நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா கடந்த 24-ந்தேதி வெளியிட்டது. இதன்படி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

    5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் நடிகர், நடிகைகள், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தது.

    இதற்கிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் கவர்ச்சி புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இந்த பதிவு கங்கனா ரனாவத்தை இழிவு படுத்தும் வகையில் இருந்ததால் பலரும் சுப்ரியா ஸ்ரீனேட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், கங்கனா ரனாவத் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்.

    குயின் படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாகவும், தாக்கட் படத்தில் மயக்கும் உளவாளியாகவும், மணிகர்ணிகாவில் ஒரு தெய்வப் பெண்ணாகவும், சந்திரமுகியில் ஒரு பேயாகவும், ராஜ்ஜோவில் விலைமாதுவாகவும், தலைவியில் புரட்சிகரமான பெண்ணாகவும் நடித்துள்ளேன்.

    கட்டுப்பாடுகளில் இருந்து நமது மகள்களை விடுவிக்க வேண்டும். அவர்களின் உடல் உறுப்புகள் பற்றிய ஆர்வத்தை தவிர்த்துவிட்டு உயர வேண்டும். அனைத்திற்கும் மேலாக பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் கண்ணியம் உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கங்கனா விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், தனது 'எக்ஸ்' தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது சமூக வலைதள பக்கங்களை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வருவதாகவும், அதில் யாரோ ஒருவர் மோசமான பதிவை வெளியிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

    இது குறித்து தனது கவனத்திற்கு வந்த உடனேயே அந்த பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், பெண்களைப் பற்றி அந்தரங்கமான முறையில் விமர்சிக்கும் பழக்கம் தனக்கு கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஜெய்ராம் தாகூர் "இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். பெண்களை இழிவுப்படுத்துவம் காங்கிரஸ் பழக்கமாகியுள்ளது. ஒட்டுமொத்த மண்டி மற்றும் இமாச்சல பிரதேசம் கோபத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி அதற்கு விலை கொடுத்தாக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • 111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
    • வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார்.

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    இதில், இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, இன்று பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் அரியானா குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்கொள்கிறார்.

    ஒடிசா சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்.

    ஜார்கண்ட் மாநிலம் தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் போட்டியிடுகிறார்.

    ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராம ராவின் மகளும், அம்மாநில பாஜக தலைவருமான புரந்தேஷ்வரி, ஆந்திராவின் ராஜாமுந்திரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
    • திருமணம் பற்றி கங்கனா ரனாவத் கருத்து.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். திரையுலகம் தவிர்த்து இவர் கூறும் பல்வேறு கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமையும். தமிழில் இவர் சந்திரமுகி 2 படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் நடனம் ஆடுவது பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. அந்த வரிசையில், குடும்ப உறவு மற்றும் திருமணம் பற்றி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

    "ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ளனர். அப்படி தான் நானும் ஆசைப்படுகிறேன். நான் எப்போதும் குடும்பத்துடன் தான் இருப்பேன். எனது குடும்பம் எனக்கு முக்கியம். ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அது காதல் திருமணமாக இருந்தால் நல்லது," என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது
    • இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது

    'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்த 'மிஷன் சாப்டர் 1' ஆக்ஷன் படம் இயக்கத்துக்குப்பின் இயக்குனர் ஏ.எல். விஜய் தற்போது புதிய படம் இயக்கும் பணியை தொடங்குகிறார்.

    இந்த படத்தில் நடிகர் மாதவன்- கங்கனா ரணாவத் நடிக்கின்றனர்.இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்பட வில்லை.

    இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.




     


     ஏ.எல்.விஜய் பெரும்பாலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து தெய்வத்திருமகள், சைவம், மதராசப்பட்டினம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆனால், தற்போது இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

    • பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்களும் மட்டும்தான் எந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட்டு பாடுவதோ நடனமாடுவதோ இல்லை
    • பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்

    அண்மையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு நடனமாடினார்.

    இந்நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத்தை நடனமாட அழைத்ததாகவும், அதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியும் நடனமாட அவர் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், அம்பானி இல்ல திருமண விழாவில் பிரபலங்கள் பங்கேற்று நடனமாடியதை குறிக்கும் வகையில் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

    அதில், "நான் எவ்வளவோ பொருளாதார சிக்கல்களில் மாட்டியுள்ளேன். ஆனாலும் பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்களும் மட்டும்தான் எந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட்டு பாடுவதோ நடனமாடுவதோ இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். எத்தனையோ முறை எனக்கு ஆசைகாட்டப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளிலும் விருது நிகழ்ச்சிகளிலும் நடனமாட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளேன். பணம் வேண்டாம் என்று சொல்வதற்கு குணம் தேவை. பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    கங்கனாவின் இந்த பதிவு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வரும் கங்கனா இந்த மாதிரி சர்ச்சையாக பேசுவது ஒன்றும் புதிது இல்லை.

    இதற்கு முன்பும் கூட, "ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் ஊரை கூட்டி பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அவர்களது வீட்டுக்குள் வெவ்வேறு மாடியில்தான் வாழ்கிறார்கள். சேர்ந்து வாழ்வது போல் வெளியுலகுக்கு மட்டும் காண்பித்துக்கொள்கிறார்கள். அண்மையில் லண்டன் சென்ற ஆலியா பட் தனது மகளை தனியாக விட்டுவிட்டு சென்றார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும்" என கங்கனா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனுராக் பதக் எழுதிய புத்தகத்தின் திரை வடிவம்தான், 12th ஃபெயில்
    • பத்திரிகை துறையை அனுபமா அவமானப்படுத்தி விட்டார் என்றார் கங்கனா

    கடந்த 2023 அக்டோபர் மாதம் வெளியான இந்தி திரைப்படம், "12th ஃபெயில்" (12th Fail).

    2019ல் அனுராக் பதக் என்பவர், மனோஜ் குமார் ஷர்மா எனும் இந்திய காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தின் திரை வடிவம்தான் 12th ஃபெயில்.

    இத்திரைப்படத்தை பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கியிருந்தார்.

    விது வினோத் சோப்ராவின் மனைவி அனுபமா ஒரு முன்னணி திரைப்பட விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அனிமல், சலார், டங்கி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டி போட்ட 12th ஃபெயில் திரைப்படம், ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

    இந்த வெற்றி குறித்து விது வினோத் சோப்ரா தெரிவித்ததாவது:

    இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயன்ற போது, ஓடிடி-யில் (OTT) மட்டுமே வெளியிடுமாறு அனைவரும் என்னை எச்சரித்தனர்.

    என் மனைவி என்னை அச்சுறுத்தினார். இப்படத்தை யார் பார்ப்பார்கள் என என் மனைவியே கூறினார்.

    ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்ததால் எங்கள் சொந்த பணத்திலேயே விளம்பரங்கள் செய்தேன். தொடக்கத்தில் இப்படத்திற்கு சிறிய வரவேற்புதான் கிடைத்தது. ஆனால், தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் பாருங்கள்.

    இவ்வாறு இயக்குனர் கூறினார்.

    அனுபமா குறித்து சோப்ரா வெளியிட்ட கருத்திற்கு பிரபல இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    நடிகை கங்கனா கூறியிருப்பதாவது:

    திரைப்பட பத்திரிக்கையாளர் துறையையே அனுபமா அவமானப்படுத்துபவராக உள்ளார்.

    புத்திசாலியான பெண்கள் மற்றும் இளவயது பெண்களை கண்டால் பொறாமைப்படுபவராகவும் உள்ளார்.

    தனது கணவரை கண்டே அவர் பொறாமைப்படுகிறார். கணவரின் வளமையையும் புகழையும் கொண்டுதான் அனுபமா தற்போது அனுபவிக்கும் அனைத்தையும் அடைந்துள்ளார்.

    பாலிவுட் இயக்குனரின் மனைவி எனும் அடையாளத்தை திரைப்பட துறையில் பிரபலமானவர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பயன்படுத்துகிறார்.

    உண்மையான திறமைசாலிகளையும், சிறந்த திரைப்படங்களையும் வெறுத்து ஒதுக்கும் வதந்தி கும்பலுடன் இணைந்து செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    ×