என் மலர்
நீங்கள் தேடியது "Kangana Ranaut"
- மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
- இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2021-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத், ஒரு வயதான பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். "டைம் பத்திரிகையால் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர் என்று குறிப்பிடப்பட்ட அதே பாட்டி இவர். பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள், இந்தியாவின் சர்வதேச மக்கள் தொடர்பு முயற்சிகளைக் கேவலமான முறையில் கைப்பற்றிவிட்டனர். சர்வதேச அளவில் நமக்காகப் பேச நமது ஆட்களே தேவை" என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவர் பகிர்ந்திருந்த படம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான மஹிந்தர் கவுர். இவர் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டக்களத்தில் கலந்துகொண்டவர்.எங்கள் போராட்ட முறையை இழிவு படுத்தியிருக்கிறார் என பதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தார்.
பிப்ரவரி 2022-ல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று சம்மன் அனுப்பியது. இந்த உத்தரவால் கோபமடைந்த கங்கனா ரனாவத், ஜூலை 2022-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகி, அவதூறு புகாரையும் கீழ் நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவையும் ரத்து செய்யக் கோரினார்.
ஆனால், இந்த மனுவை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய உயர் நீதிமன்றம் கங்கனா ரனாவத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றமும் கங்கனா ரனாவத்தின் மனுவை ஏற்க முடியாது எனக் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தெரிவித்தது. இந்த நிலையில், கங்கனாவின் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை வாபஸ் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்காக கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், "மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து மஹிந்தர் கவுரின் கணவருக்கு நான் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறேன்.இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எந்த மாநிலத்தைச் சேர்ந்த தாதாவாக இருந்தாலும் எனக்கு மரியாதைக்குரியவர். மேலும் எந்த நபருக்கும் எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரான உடனேயே, மஹிந்தர் கவுரின் கணவரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன்" என்றார்.
- இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன், கங்கனா ரனாவத் இணைந்து நடித்த படம் 'Tanu Weds Manu Returns'. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'சர்க்கிள்'.
'சர்க்கிள்' இதற்கு முன்பு பார்த்திராத ஒரு அசாதாரண உளவியல் த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எ.எல். விஜய் இயக்கி உள்ள இப்படத்தை ட்ரைடென்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஊட்டி, சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 'சர்க்கிள்' படம் தசரா பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் மாதம் வெளியாகிறது.
- பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
- கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் குறித்து பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் கிழவி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனாவின் மனுவை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக பஞ்சாபின் பாதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் இன்று ஆஜரானார். நீதிமன்ற விசாரணைக்கு மஹிந்தர் கவுர் சார்பாக அவரது கணவர் வனத்திருந்தார். விசாரணையின்போது தனது கருத்துக்கு கங்கனா மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்கு ஒதுக்கிவைக்கப்ட்டது.
மேலும் நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே அந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றும், நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார். 5 வருடங்கள் முன் கழிந்து கங்கனா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டது. இதில் பல மக்கள் அவர்களது வாழ்வாதரத்தை மற்றும் சொந்தங்களை இழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக வந்து சந்தித்ததால் மக்கள் கங்கனாவின் மீது அதிருப்தி அடைந்தனர். அந்த அதிருப்தியை `வெளியே போ கங்கனா!" என்ற முழக்கங்களை எழுப்பி வெளிப்படுத்தினர்.அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.
அப்போது பொது மக்களிடம் பேசிய கங்கனா ரனாவத்
"நான் இங்குதான் வாழ்கிறேன், என் வீடும் நிலமும் இங்குதான் இருக்கிறது. நானும் நஷ்டத்தை சந்தித்துள்ளேன். என்னுடைய உணவகம் மூலம் வெறும் 50 ரூபாய் மட்டுமே வருமானம் வந்தது. ஆனால் நான் 15 லட்சம் ரூபாய் உணவகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நானும் ஒரு மனுஷி தான். தயவு செய்து என்னை இங்கிலாந்து ராணி போல், உங்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறவளாக தாக்க வேண்டாம். நானும் இங்குதான் வாழ்வை நடத்திக் கொண்டு இருக்கிறேன்," என கங்கனா கூறினார்.
கங்கனா இதுபோல் கூறியது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மழைக்காலப் பெருவெள்ளத்தால் ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது தொகுதியை மிகவும் அலட்சியமாக நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.
- இமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரணாவத் மணாலியில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறது.
- மேகவெடிப்பு, மழை வெள்ளத்தால் இமாச்சல பிரதேசம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இமாச்சல பிரதேச மாநிலமும் ஒன்று. கனமழையுடன் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. ஒருமுறை அல்ல. பலமுறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுள்ளது.
வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளளனர். இவர்கள் எப்படியோ சமாளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கங்கனா ரணாவத் "நேற்று, என்னுடைய ரெஸ்டாரன்டில் வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது. நான் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறேன். தயது செய்து என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நான் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவள். என்னுடைய வீடும் இங்கேதான் உள்ளது" எனத் தெரிவிததுள்ளார்.
மவுன்டைன் ஸ்டோரி என்ற ரெஸ்டாரன்ட்-ஐ கங்கனா ரணாவத் மணாலியில் இந்த வருடம் தொடங்கினார். உண்மையான இமாச்சல பிரதேச மாநில உணவுகளை வழங்கும் உணவகம் என சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்.
மணாலி சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. கனமழை மற்றும் நிலச்சரிவால் இங்கு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கங்கனா ரணாவத், பாஜக தலைவரும், மணாலியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கோவிந்த் சிங் தாகூர் உடன் சோலங்க், பல்சான் ஆகிய கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கும் வசிக்கும் மக்கள், வெள்ளத்தால் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 16 வீடுகள் பாதுகாப்பாற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவால் சோலாங் கிராமம் முழுவதற்கும் ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது, பியாஸ் ஆறு படிப்படியாக தனது எல்லையை விரித்து கரையோர அரிப்பு அதிகமாகியுள்ளது. மேற்கொண்டு அரிப்பை தடுக்க ஆற்றின் திசையை மாற்றிட விடவேண்டும்" எனத் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதியில் இருந்து இமாச்சால பிரதேசத்தின் பெய்த கனமழை மற்றும் பருவமழை காரணமாக 419-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் 52 பேர் ஆவார்கள்.
- இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்.
- நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்
2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் மீதான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் பாட்டி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், "உங்கள் அறிக்கைகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இது வெறும் ரீ ட்வீட் அல்ல. நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களை சேர்த்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் கருத்தில் மசாலாவை சேர்த்துளீர்கள்" என்று கூறி கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- டிரம்ப் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆல்பா ஆண், ஆனால் நமது பிரதமர் அனைத்து ஆல்பா ஆண்களுக்கும் முதலாளி.
- மாண்புமிகு தேசியத் தலைவர் J.P. நட்டா என்னை அழைத்து பேசினார்.
கத்தாரில் நேற்று நடந்த வணிக மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் இந்தியாவுடனான வணிக உறவு பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.
அதாவது, "இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க சம்மதித்துள்ளது" அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனர் டிம் குக் இடம் வலியுறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
"சீனாவில் ஆப்பிள் நிறுவனம் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்'' என்று தனது உரையில் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாஜக எம்.பி.யும் பிரபல திரைப்பட நடிகையுமான கங்கனா ரனாவத், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து அதிபர் டிரம்ப் கூறிய கருத்துகளைக் விமர்சித்து அவரை பிரதமர் மோடியுடன்ஒப்பிட்டு தனது சமூக வலைதள பக்கங்களில் பதவு ஒன்றை வெளியிட்டார்.
அவரது பதிவில், "அவர் அமெரிக்காவின் அதிபராக இருக்கலாம், ஆனால் உலகின் மிகவும் பிரபலமான தலைவர் இந்தியப் பிரதமர். டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும்போது, இந்தியப் பிரதமர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். டிரம்ப் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆல்பா ஆண், ஆனால் நமது பிரதமர் அனைத்து ஆல்பா ஆண்களுக்கும் முதலாளி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட பொறாமையா அல்லது இராஜதந்திர பாதுகாப்பின்மையா?" என்று பல விஷயங்களை அடுக்கினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் J.P.நட்டா பதறியடித்து கங்கனா ரனாவத்துக்கு போன் போட்டு கண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது பதிவை நீக்கிய கங்கனா அதற்கு விளக்கப் பதவு ஒன்றையும் எக்ஸில் போட்டுள்ளார். அதில், "மாண்புமிகு தேசியத் தலைவர் J.P.நட்டா என்னை அழைத்து, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று டிரம்ப் கூறியது குறித்து நான் பதிவிட்ட ட்வீட்டை நீக்கச் சொன்னார்.
எனது தனிப்பட்ட கருத்தைப் பதிவிட்டதற்கு வருந்துகிறேன். அவரது அறிவுறுத்தலின்படி, அதை உடனடியாக இன்ஸ்டாகிராமிலிருந்தும் நீக்கிவிட்டேன். நன்றி," என்று விலாவரியாக விளக்கியுள்ளார்.
- மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை.
- இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.
நடிகை கங்கனா ரனாவத், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக சார்பில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகத் தேர்வானார். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கங்கனா சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை அண்மையில் அவர் விமர்சித்திருந்தார்.
மாண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் "இமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் அரசு, மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த மாதம், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை. இங்குள்ள நிலைமைகளை கற்பனை செய்து பாருங்கள்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இமாச்சல மின் வாரியம் இதற்கு பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் சந்தீப் குமார் பேசுகையில், "ஜனவரி 16 முதல் கங்கனா ரனாவத் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர் தொடர்ந்து மின் கட்டணம் செலுத்துவதை தாமதப்படுத்தி வருகிறார். தற்போதைய கட்டணம், ஒரு மாதத்திற்கு மட்டுமே என்று அவர் கூறுவது முற்றிலும் தவறானது. அவரது வீட்டின் மின் சுமை(LOAD) 94.82 KW என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.
தோராயமாக, அவருக்கு ரூ.32,287 வரை நிலுவைத் தொகை உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 28 நாட்களுக்கு அவருடைய மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.55,000. இது தவிர மற்ற மாத கட்டணங்கள் உட்பட மொத்தம் கிட்டத்தட்ட ரூ.90,384 ஆகும். ஆகையால், இதையெல்லாம் மறைத்து அவர் தனது வீட்டின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.1 லட்சம் என்று பிரச்சனையை எழுப்பியுள்ளார்" என்று தெரிவித்தார்.
- சனாதனம், தேசியவாதம், உலகம் ஒரு குடும்பம் என்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாம் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறோம்.
- 2014ம் ஆண்டுக்கு முன் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுத்தீவன ஊழல் உள்பட ஏராளமான ஊழல்கள் நடைபெற்றன.
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியில் மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவர் மண்டியில் உள்ள ஜரோல் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது "சனாதனம், தேசியவாதம், உலகம் ஒரு குடும்பம் என்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாம் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறோம்.
2014ம் ஆண்டுக்கு முன் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுத்தீவன ஊழல் உள்பட ஏராளமான ஊழல்கள் நடைபெற்றன. ஆனால், பிரதமர் மோடி மீது ஒரு கறை கூட கிடையாது" என்றார்.
முன்னதாக இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் அமைச்சர் விக்ரமாதித்ய சிங், "மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தை பார்க்க முடிவதில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கு கங்கனா ரனாவத், "பாராளுமன்ற தோல்வி அதிர்ச்சியில் விக்ரமாத்திய சிங் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார். நான் தினசரி பாராளுமன்றத்திற்கு செல்கிறேன். கண்ணுக்கு தெரியாமல் இருக்க நான் மிஸ்டர் இந்தியா இல்லை" எனத் தெரிவித்தார்.
மிஸ் இந்தியா என்ற பாலிவுட் படம் 1987ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அனில் கபூர், தான் மறையும் வகையில் ஒரு கருவியை கண்டுபிடிப்பார். இதை குறிப்பிட்டு கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்தார்.
- பா.ஜ.க. டிக்கெட் தந்தால் நான் போட்டி போடுவேன்.
- பிரதமர் மோடி மாபெரும் தலைவர்.
புதுடெல்லி :
பிரபல இந்தி நடிகை கங்கணா ரனாவத் (வயது 35), இமாசல பிரதேச மாநிலத்தின் மணாலியைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க. ஆதரவு முகம் காட்டி வருகிற நடிகை கங்கணா ரனாவத், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
எனது சொந்த மாநிலத்தின் மக்களின் முன்னேற்றத்துக்காக நான் உழைக்கிற வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு பெருமை.
என்ன நிலைமை என்றாலும், அரசு எனது பங்களிப்பை விரும்பினால், எல்லா விதத்திலும் நான் பங்கேற்பதற்கு தயாராக திறந்த மனதுடன் இருக்கிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் இருந்து நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பி, பா.ஜ.க. டிக்கெட் தந்தால் நான் போட்டி போடுவேன்.
இமாசலபிரதேச மக்கள், அவர்களுக்கு சேவை ஆற்றுகிற வாய்ப்பினை எனக்கு தந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். எனவே நிச்சயமாக அது எனது அதிர்ஷ்டம்தான்.
ஆம் ஆத்மியின் போலியான வாக்குறுதிகளுக்கு இமாசலபிரதேச மாநிலம் இரையாகாது. இந்த மாநில மக்கள் தங்கள் சொந்த சூரிய மின்சக்தியை கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தமாக காய்கறிகளை சாகுபடி செய்கிறார்கள்.
எனவே இலவச திட்டங்கள், அறிவிப்புகள் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது.
பிரதமர் மோடி மாபெரும் தலைவர். ஆனால் அவரும், ராகுல் காந்தியும் போட்டியாளர்கள் என்பது வருத்தம் அளிக்கும் விஷயம்.
மீண்டும் டுவிட்டர் சமூக ஊடகத்துக்கு வருவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் அதில் ஓராண்டு காலம் இருந்தேன். டுவிட்டரால் அந்த ஓராண்டு காலம்கூட என்னை சகித்துக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராமில் சேர்ந்து ஓராண்டாகி விட்டது. நான் ஏற்கனவே 3 எச்சரிக்கைகளை பெற்றிருக்கிறேன். எனவே நான் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த மாட்டேன் என்று கூறினேன். இந்த பிரச்சினையை எனது குழு கையாண்டது. இப்போது எல்லாமே சரியாகி விட்டது.
நான் மீண்டும் டுவிட்டருக்கு வந்தால், மக்களின் வாழ்க்கை சுவாரசியமாகி விடும். என் வாழ்க்கையோ பிரச்சினைக்குள்ளாகி விடும். நான் டுவிட்டரில் இல்லாததால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கணக்குக்கு புத்துயிரூட்டினால், நிச்சயமாக உங்களுக்கு நிறைய 'மசாலா' கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் 'டுவிட்டர் புளூ' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
- ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் 'டுவிட்டர் புளூ' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மாதம் 8 டாலர்கள் கட்டணத்துடன் 'டுவிட்டர் புளூ' வசதி பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறப்பு அம்சங்களை கொண்ட 'டுவிட்டர் புளூ' வசதி தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

கங்கனா ரணாவத்
இந்தியாவில் 'டுவிட்டர் புளூ' வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என இந்திய பயனாளர்கள் டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்கை டேக் செய்து டுவிட்டரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், 'ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் டுவிட்டர் புளூ வசதி அறிமுகமாகும் என தெரிவித்தார். விளம்பரம் இல்லாத கட்டுரைகள், டுவிட்டர் செயலியின் நிறம், 'தீம்களை' மாற்றும் வசதி, டுவிட் செய்யப்படும்போது சிறிது கால அவகாசம் எடுத்து பயனாளர்கள் பகிரும் கருத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் வசதி, நீண்ட மற்றும் அதிக தரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதிகளையும் 'டுவிட்டர் புளூ'வின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

கங்கனா ரணாவத் பதிவு
இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்த முடிவை நடிகை கங்கனா ரணாவத் ஆதரவளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' -வசதி அளிக்கப்பட வேண்டும். இப்போது இருக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக டுவிட்டர் திகழ்கிறது. இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை. ஆகவே டுவிட்டர் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம், டுவிட்டர் விதிகளை தொடர்ந்து மீறியதற்காக கங்கனாவின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'.
- இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

சந்திரமுகி 2
தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கங்கனா ரனாவத்
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'சந்திரமுகி 2'-ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.






