search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity tariff"

    • வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை 14 பைசா முதல் 21 பைசா வரை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
    • அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழக அரசு சமீபத்தில் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை 14 பைசா முதல் 21 பைசா வரை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    'இந்நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மது கடைகளை மூடுவதாக மக்களிடம் தெரிவித்து மது கடைகளை மூடினால் தமிழக அரசின் வருவாய் பாதிக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல், அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

    • ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.
    • வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாய மாக்கப்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்.

    இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக். குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 09.09.2022 அன்று 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.

    இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப் பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீத்திலிருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த முடிவால்

    அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

    ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

    (இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது-மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்)-தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது.
    • அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்க (சிஸ்வா) ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் சங்க செயலாளர்கள் கோகுல்குமார், ரவிச்சந்திரன், பொருளாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தங்கவேல், சங்க ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது :- தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது. கொரோனா தொற்று, நூல் விலையேற்றம், உலகப் பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் ஏற்கனவே,கடும் நஷ்டத்தில் தொழில் புரிந்து வருகிறோம். இந்த நிலையில் மின் கட்டண உயர்வை மாற்றி அமைக்க வேண்டும் என மின்துறை அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    அரசு அறிவித்த உச்சகட்ட மின் கட்டண குறைப்பு அறிவிப்பு, எந்த விதத்திலும் பாதிப்பை ஈடு செய்யாது. சிறு, குறு தொழில்களின் கீழ் உள்ள நாடா இல்லா தறிகளுக்கு தனியாக மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தனி குழு அமைத்து எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். ஜவுளி உற்பத்தி துறை கடந்த ஓராண்டாக வலுவிழந்ததுடன், அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் இயங்காத நிலையில், ரிசர்வ் வங்கியின் 2 சதவீத வட்டி உயர்வு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையினர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை ஓராண்டு தள்ளி வைக்க வேண்டும். சோலார் வாயிலாக மின் உற்பத்தி செய்ய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டத்தை கூட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஊட்டி

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தி.மு.க அரசைக் கண்டித்தும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ,கூடலூர்சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் குன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, பாசறை மாவட்ட செயலாறர் அக்கீம்பாபு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகரசெயலாளர் நொண்டிமேடு கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.ரமணீதரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ேராட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன்,

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.பொன்னுத்துரை, டாக்டர் பொன்னுசாமி, கே.எஸ். பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ்,

    அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சோமு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் மாதையன் என்கிற எம்.ஜி. நாத், இளைஞர் அணி செயலாளர் கரேத்தா பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் வாத்தியார் குப்புசாமி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன்,

    ஐ.டி. பிரிவு பிரகாஷ் உட்பட ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • மின் கட்டண உயர்வால் தி.மு.க. அரசு மீது கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேசினார்.
    • தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன, 20 லட்சம் வணிக நிறுவனங்கள் உள்ளது இந்த மின்சார கட்டண உயர்வால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து டி.கல்லுப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    மின் கட்டணத்தை உயர்த்தி திமுக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது, பஞ்சாப் மாநிலத்தில் 15,000 கோடியளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது, உத்தப்பிரதேசத்தில் 22,000 கோடி அளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் கடந்த 8ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, தற்போது திமுகஅரசு மானியம் வழங்காமல் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது,

    இந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்குதான் வாக்களித்தோம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்று தான் நினைத்தோம் என்றுமக்கள் கூறினார்கள், ஆனால் பெட்டியை மாற்றி விட்டார்களா? என்று தெரியவில்லை, ஆனாலும் நாங்கள் சோர்ந்து விடவில்லை இன்றைக்கு மக்களுக்காக வீதியில் இறங்கி குரல் கொடுத்து வருகிறோம்,

    முதலமைச்சர் தொடர்ந்து 10 நாட்களாக மதுரைக்கு வருகிறார் அண்ணன் கோட்டையை பிடித்து விடுவோமா என்று நினைக்கிறார், தென் மாவட்டத்தை விட்டு விடுங்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள்,

    தென் மண்டல சிறு குறு தொழில் நிறுவனங்களில் மாநாடு முதலமைச்சர் தலைமையில் இன்று மதுரையில் நடைபெ ற்றுள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன, 20 லட்சம் வணிக நிறுவனங்கள் உள்ளது. இந்த மின்சார கட்டண உயர்வால் பாதிப்பு அடைந்துள்ளனர்,

    மின்கட்டணம் உயரால் மக்கள் கொந்தளித்து உள்ளனர் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதலமைச்சராக அதிமுக வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பேரவை மாவட்டச் செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், செல்லம்பட்டி ராஜா, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், திருமங்கலம் நகரச் செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்ட ணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட அ.தி. மு.க. சார்பில் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதில் செல்லூர் ராஜூ அப்போது அவர் பேசியதாவது-

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. விபத்தில் ஜெயித்துவிட்டது. 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மாறிவிட்டது.தி.மு.க ஆட்சியில் கட்சியும் கண்ட்ரோல் இல்லை, ஆட்சியும் கண்ட்ரோல் இல்லை. இந்துக்கள் குறித்து ஆ.ராஜா எம்பி தரக்குறைவாக பேசி உள்ளார். இவ்வாறு அவர் பேசியதற்கு கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும்.ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது முதல மைச்சரின் இயலாமை யை காட்டுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டன உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் மு க ஸ்டாலின். 8 வழி சாலை வேண்டாம் என்று கூறி மக்களை திசை திருப்பியவர் மு. க. ஸ்டாலின். ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்ததும் இரட்டை வேடம் போடுகிறார். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வருகிறார்கள். இப்போது மின்கட்டண உயர்வை ஏற்றி மேலும் சுமையை அதிகரித்து உள்ளனர். இதனால் மக்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளனர். மக்களுக்காக போராடும் இயக்கம் அ.தி.மு.க. தான். மின் கட்டன உயர்வை ரத்து செய்யும் வரை

    அ.தி. மு.க. தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்து தனி நீதிபதி, உத்தரவிட்டிருந்தார்.
    • இடைக்கால தடையை நீக்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

    தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நூற்பாலைகள் சங்கம் உள்பட பல நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மின் கட்டண உயர்வுக்கு எதிரான இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இரு நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • குஜராத்தை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு.
    • 100 யூனிட்டிற்குள் மின்சாரத்தை உபயோகிப்பவர்களுக்கு கட்டண உயர்வு இல்லை.

    மின் கட்டண உயர்வு குறித்து கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் 100 யூனிட்டிற்குள்ளாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர் வரை உள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒருநாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டண உயர்வாகும்.

    201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 36 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகளுக்கு 72 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 82 ஆயிரம் பேர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 147 ரூபாய் 50 பைசா என்ற அளவில் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது.

    வீட்டு உபயோக மின் கட்டணத்தைப் பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட மிக குறைந்த மின் கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. குறு சிறு நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை, 2 லட்சத்து 26 ஆயிரம் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு 50 பைசா கட்டணம் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிலையில் உள்ள 19 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வணிக நுகர்வு மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இவர்களுக்கும் 50 பைசா மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆட்சிக் காலங்களில் விட்டுச் சென்ற கடன் சுமை காரணமாக மின்சார வாரியம் இழுத்து மூடக்கூடிய சூழ்நிலை இருந்தது. திமுக அரசு ரூ.9 ஆயிரம் கோடி அளவிற்கு வழங்கப்பட்ட நிதி ஆதாரத்தின் காரணமாகவே மின்சார வாரியம் இயங்கி வருகிறது. மின் நுகர்வோர்கள் தமிழக அரசிற்கும், மின்சார வாரியத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
    • இந்த தடை உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

    தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க கோரி, நூற்பாலைகள் சங்கம் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக மின்வாரியம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிர், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது என்றும், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் மின்கட்டண அறிவிப்பு வெளியிடும் நேரத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்றும் தெரிவித்தார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும், என்று அவர் குறிப்பிட்டார்.

    இதையடுத்து மின்கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மேல்முறையீட்டு மனு குறித்து எதிர்தரப்பினர் அனைவரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    இந்த உத்தரவு மூலம் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுப்பதற்கான தடை தற்காலிகமாக நீங்கி இருக்கிறது.

    • மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
    • மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை தெரிவிக்க ஒருவாரம் அவகாசம்.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்கள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டும் உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட உறுப்பினராக வெங்கிடசாமி, கடந்த 17.2.2019 அன்று நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 5.5.2022 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். தொழில்நுட்ப உறுப்பினராக இருந்தவர் கடந்த மார்ச் 17-ந் தேதி ராஜினாமா செய்துள்ளார்.

    இந்த உறுப்பினர் பதவிக்கு மட்டும் தகுதியான நபரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, 2 பேரை பரிந்துரைத்திருக்கிறது. இதில் வெங்கடேசனை தொழில்நுட்ப உறுப்பினராக மாநில அரசு தேர்வு செய்தது. அவர் கடந்த மாதம் 18-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர், மின்வாரியத்தின் மின் கட்டண உயர்வு தொடர்பான மனுக்களை ஏற்றுக்கொண்டனர். அதன்படி கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

    மனுதாரர்கள் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள், சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் இல்லாமல் மின் கட்டண உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது என தெரிவித்தனர்.

    மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் தொழில்நுட்ப உறுப்பினரை தேர்வு செய்து நியமித்த அதே நேரத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரையும் அந்த பதவியில் நியமித்து இருக்கலாம் என்று வாதிட்டுள்ளனர்.

    ஆனால் அரசு தரப்பில், பல ஆண்டுகளாக மின் கட்டண உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை தாமதப்படுத்துவது ஆபத்தில் முடியும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை பின்பற்றுவது உயர்நீதிமன்றங்களின் கடமையாகும். அந்த வகையில் ஒரு ஆணையத்தில் சட்ட உறுப்பினர் இருப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது. அப்படி இருக்கும்போது, அந்த பதவிக்குரிய நபரை நியமிக்காதது நியாயம் இல்லை. மேற்கண்ட 2 பதவிகளுக்கான நபர்களை ஒரே நேரத்தில் நியமிப்பதற்கு மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதை செய்யவில்லை.

    இந்த காரணத்திற்காகவே, தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மேற்கூறிய கட்டண உயர்வு அனுமதி கோரும் மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க தடை விதிக்கிறேன். மின் கட்டண உயர்வு தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளை தொடரலாம்.

    ஆனால் சட்ட உறுப்பினரை நியமித்த உடனேயே, இந்த தடை உத்தரவு காலாவதியாகி விடும். மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை உரிய ஆணையத்தில் தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

    • மின் கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை.
    • கோவையில் 16ந் தேதியும், மதுரையில் 18ந் தேதியும் கூட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும் அளவு மின் கட்டணம் உயர உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதையடுத்து மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் 16-ந்தேதியும், மதுரையில் 18-ந்தேதியும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.

    மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வு குறித்த தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×