search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வால் தி.மு.க. அரசு மீது கொந்தளிப்பு
    X

    திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    மின் கட்டண உயர்வால் தி.மு.க. அரசு மீது கொந்தளிப்பு

    • மின் கட்டண உயர்வால் தி.மு.க. அரசு மீது கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேசினார்.
    • தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன, 20 லட்சம் வணிக நிறுவனங்கள் உள்ளது இந்த மின்சார கட்டண உயர்வால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து டி.கல்லுப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    மின் கட்டணத்தை உயர்த்தி திமுக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது, பஞ்சாப் மாநிலத்தில் 15,000 கோடியளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது, உத்தப்பிரதேசத்தில் 22,000 கோடி அளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் கடந்த 8ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, தற்போது திமுகஅரசு மானியம் வழங்காமல் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது,

    இந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்குதான் வாக்களித்தோம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்று தான் நினைத்தோம் என்றுமக்கள் கூறினார்கள், ஆனால் பெட்டியை மாற்றி விட்டார்களா? என்று தெரியவில்லை, ஆனாலும் நாங்கள் சோர்ந்து விடவில்லை இன்றைக்கு மக்களுக்காக வீதியில் இறங்கி குரல் கொடுத்து வருகிறோம்,

    முதலமைச்சர் தொடர்ந்து 10 நாட்களாக மதுரைக்கு வருகிறார் அண்ணன் கோட்டையை பிடித்து விடுவோமா என்று நினைக்கிறார், தென் மாவட்டத்தை விட்டு விடுங்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள்,

    தென் மண்டல சிறு குறு தொழில் நிறுவனங்களில் மாநாடு முதலமைச்சர் தலைமையில் இன்று மதுரையில் நடைபெ ற்றுள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன, 20 லட்சம் வணிக நிறுவனங்கள் உள்ளது. இந்த மின்சார கட்டண உயர்வால் பாதிப்பு அடைந்துள்ளனர்,

    மின்கட்டணம் உயரால் மக்கள் கொந்தளித்து உள்ளனர் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதலமைச்சராக அதிமுக வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பேரவை மாவட்டச் செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், செல்லம்பட்டி ராஜா, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், திருமங்கலம் நகரச் செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×