search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,டிச.6-

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட த.மு.மு.க. சார்பில் இன்று பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபேதார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜனாப் ஹமீது, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, இக்பால், மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், சி.பி.ஐ.எம் மாவட்ட செயலாளர் குமார், சமூக நல்லிணக்க மேடை இணை ஒருங்கிணைப்பாளர் பொ.மு. நந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.கு. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 450 ஆண்டுகால வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி டிசம்பர் 6. 1992 அன்று பயங்கரவாத கும்பலால் பட்டம் பகலில் இடித்து தள்ளப்பட்டது. அந்த நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடைப்பிடித்து வருவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேல்மா சிப்காட்டுக்கு எதிராக நடத்தினர்
    • சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை கைது செய்ததை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஐ ரத்து செய்ய வேண்டும். காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழக அரசு பெற்றுத்தர தவறிவிட்டது.

    விவசாயிகள் மீது கைது நடவடிக்கை எடுத்த தி.மு.க. அரசுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு தக்க பாடம் புகட்டுவோம்.

    சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்காக தொடர்ந்து விவசாயிகள் வஞ்சிக்க ப்பட்டால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கிறோம் என தெரிவித்தார்.

    இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கார், வேண், ஆட்டோ, ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் கண்ணன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுத்திடவும், ஆண்லைன் அபராதத்தைதை கைவிடக் வேண்டும். ஆர்.டி.ஓ. காவல்துறை மாமுலை கட்டுபடுத்தி, இனைய வழி சேவையை தொடங்கிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பஜனைமட சந்து ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் விஸ்வநாதன், உரிமைக்குரல் ஓட்டுனர்கள் சங்க மண்டல தலைவர் பாலமுருகன், காளியாகுடி ஓட்டுனர் சங்க சி ஐ டி யு உறுப்பினர் ஜோதிக்கண்ணன் மற்றும். குத்தாலம் மணல்மேடு திருக்கடையூர் தேரிழந்தூர் ஆக்கூர் சீர்காழி திருமலைவாசல் வைத்தீஸ்வரன் கோயில் நீடூர் மயிலாடுதுறை ரயிலடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான, கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.

    பின்னர் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அருப்புக்கோட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆக்கிரமிப்புகளை மீட்க வலியுறுத்தப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டு ரங்கன் தலைமை தாங்கி னார். மாவட்ட பார்வையாளர் வெற்றி வேல் முன்னிலை வகித்தார்.

    அருப்புக்கோட்டையில் உள்ள செவல் கண்மாய் துமைக்குளம் கண்மாய் பெரியகண்மாகளை சூழ்ந் துள்ள ஆகாயத்தாமரை களை அகற்ற வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும், நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட வேண்டும் இந்த தோண்டப்பட்ட குழி களால் பல இடங்களில் விபத்து நடக்கிறது.

    அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.

    சாலை, குடிநீர் வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாமல் வஞ்சிக்கும் அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொது செயலாளர் சீதாராமன், நகர பொதுச்செயலாளர் பாண்டி ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    28-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் படி ரூ.2,500 நிறுத்தியதை கண்டிப்பது, சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக்கு பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டிப்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 7-ந் தேதி தாலுக்கா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்திலும், 19-ந் தேதி ஒரு நாள் விடுப்பு போராட்டத்திலும், 28-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டத்திலுள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.சிற்றம்பலம்,மாவட்டக் குழு உறுப்பினர் பி.துரைசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மலர்கொடி, ஆதிலட்சுமி, மங்கையர்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள், மின்சார வாரிய செயற்பொறியாளரை சந்தித்து,இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    அரியலூர்,  

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட முந்திரிக்கும், படைப்புழுக்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதில் மக்காச்சோள பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட முந்திரி, மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளைநிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்திற்கு மேல்மா விவசாயிகளின் விளைநிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்.

    சிப்காட் வளாகத்தில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயிலடியில் சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பழனிராஜன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை விளக்கி உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம்.

    முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி. பி. எம். எல் மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் விடுதலைகுமரன், மாவட்ட செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஜனநாயக விவசாய சங்க மாநில தலைவர் ராமர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் இடதுசாரிகள் பொதுமேடை பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வட்ட செயலாளர் குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எரிபொருள் படி ரூ. 2500 வழங்க வேண்டும். 1.1.2004 வருடத்துக்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் லாலாஜி, பொருளாளர் முனிவேல், துணைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் குணசேகர், சுரேஷ்குமார், பொன்னேரி வட்ட தலைவர் ரவிக்குமார், வட்ட செயலாளர் குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
    • சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழ்நாடு வருவாய் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பட்டியல் டி-பிரிவில் இணைக்க வேண்டும். 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை திரும்ப வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print