என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்
குளச்சலில் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
குளச்சலில் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி, ஜூன்.1-
குளச்சல் நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் கட்டணம், வீட்டு வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குளச்சல் நகர கிளைகள் சார்பில் காமராஜர் பஸ் ஸ்டாண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளச்சல் கிளை செயலாளர் யூசுப் தலைமை தாங்கினார்.
மாவட்ட முன்னாள் செயலாளர் முருகேசன், கிளை செயலாளர்கள் லெனின்குமார், தைபீக் அகமது, கேசவலால் மது, வட்டாரக்குழு உறுப்பினர் சசி, முன்னாள் கவுன்சிலர் குமரேசன், ஒன்றிய செயலாளர் புஷ்பதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சாகுல் அமீது, பால் ஞானசேகரன், சுரேஷ், ஹரிக்குமார், மரிய வின்சென்ட், ஜோசப், ஜேம்ஸ், வெங்கடேஷ், வில்பிரட், செல்வராஜ், வப்புசன், கிரிஜா, கீதா, ஜெனோ, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






