search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demanding"

    • நிர்வாகிகள் கலை, கமல், சுரேஷ், தமிழரசி, கிருஷ்ணவேணி, அய்யப்பன், சிவசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    • புதுத்தெருவில் சைடு வாய்க்கால் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

    புதுச்சேரி:

    சுசி கம்யூனிஸ்ட் மடுகரை கிளை சார்பில் மந்தைவெளி திடலில் நெட்டப்பாக்கம் தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.

    மடுகரை கிளை செயலாளர் ஜமாலுதீன் தலைமை வகித்தார். ஆனந்தன் முன்னிலை வகித்தார். கையெழுத்து இயக்கத்தை மாநில செயலாளர் லெனின்துரை தொடங்கி வைத்தார். ஏ.ஐ.யூ.டி.யூ.சி மாநில செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் கலை, கமல், சுரேஷ், தமிழரசி, கிருஷ்ணவேணி, அய்யப்பன், சிவசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மடுகரை பட்டாம்பாக்கம் சாலைபயில் கோழிக்கறி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். சிறு வந்தாடு மெயின் ரோட்டில் பெரிய வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். புதுத்தெருவில் சைடு வாய்க்கால் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

    • கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்கள் அதிகரித்துள்ளனர்.
    • மேலும் வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் முகமதியாபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் ஒத்தக்கடையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார்.

    மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள கட்டப்பட்டி பகுதியில் வந்தபோது மற்றொரு மோட்டார் வந்த வாலிபர் ஒருவர் வழிகேட்பதுபோல் பேச்சு கொடுத்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென அந்த நபர் ஷேக் அப்துல்லாவை மறித்தார். அப்போது அவரது கூட்டாளிகள் 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். தொடர்ந்து 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல் ஷேக் அப்துல்லா விடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் கையில் வெட்டி செல்போன், பணத்தை பறித்து சென்றது.

    இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் என்பவரிடம் இதே கும்பல் கத்திமுனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது. குற்றவாளிகள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

    இதுதொடர்பாக 2 பேரும் மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ேஜாதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை ேதடி வருகின்றனர்.

    மேலூர் 4 வழிச்சாலையில் இரவு நேரங்களில் தனியாக செல்வோரை குறிவைத்து அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட கும்பல் நோட்டமிட்டு இதனை செயல்படுத்தி வருகின்றனர். எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சேவேரிக்கொட்டாய், சோழியானூர், மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கரடு சார்ந்த பகுதியில், விவசாய நிலங்கள்,

    கிராமப்புற வீடுகள் நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சூதாட்ட த்தில் ஈடுபடுவது போன்று, சிமெண்ட் அட்டை குடில்கள் அமைத்து, மதுவிருந்து மற்றும் கறி விருந்தோடு இரவு-பகலாக லட்சகணக்கில் பகிரங்கமாக சூதாட்டத்தை கும்பல் நடத்தி வருகிறது.

    இந்த சூதாட்டத்தில் தருமபுரி, சேலம், நாமக்கல், பெங்களூர் ஆகிய பல்வேறு பகுதிகளை சேர்ந்த சூதாட்ட பித்துக்கள் கலந்து கொண்டு, பல லட்சங்களை, சூதாட்டத்தில் இழந்து வருகின்றனர்.

    நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

    ஒரு கட்டத்தில் அதிகளவு பணம் இழந்தவர்கள் மற்றும் சூதாட்ட கும்பலுக்கிடையே சண்டை ஏற்படும் போது, அடியாட்கள் கொண்டு பணம் இழந்தவர்களை அங்கிருந்து மிரட்டி வெளியேற்றும் சம்பவமும் அவ்வப்போது நடைபெறுகிறது.

    இந்த சூதாட்டத்தால் விவசாய பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மாணவிகள் முதல் நாள்தோறும் அச்ச நிலையில் இருந்து வருகின்றனர்.

    பல குடும்பங்கள் சீரழிய காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதுடன், அடியாட்களோடு லட்ச கணக்கில் நடக்கும் சூதாட்டத்தை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபிராமம் கண்மாய் நிரம்பாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் வைகை பாசன பகுதிகள் அதிகமுள்ள பகுதியாகும். வைகை அணை நிரம்பியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    இதனால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

    வைகை ஆற்றில் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து அபிராமம் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் தூர் வாரப்படாததால் சுமார் 7 கி.மீட்டர் தூரத்துக்கு மேல் கருவேல மரங்கள் வளர்ந்து மண்மேடாக காட்சி அளிக்கிறது.

    கால் வாய் தூர்வாரப்படாததாலும், முட்செடிகளை அகற்றாததாலும் அபிராமம், மற்றும் அதனை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு இன்று வரை தண்ணீர் நிரம்பாத நிலை உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    அபிராமம் கண்மாயை சார்ந்துள்ள விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நெல் பயிரிட முடியாத நிலை உள்ளது.

    இந்த பகுதியில் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் கண்மாய்க்கு வைகை பாசனம் மூலம் நீர் கிடைத்தால் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் செழித்து நல்ல பலனை தரும். இதனால் விவசாயிகள் பயனடைவார்கள்.

    அபிராமம் பகுதி விவசாயிகள் தண்ணீரு க்காக கண்ணீருடன் ஏங்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு அபிராமம் பகுதி விவசாயிகளும், தன்னார்வலர்களும் கொடுத்த பணத்தால் கால்வாயை தூர்வாரி துப்புரவு பணி செய்தோம்.

    இப்போதும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் அவர்கள் அபிராமம் கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய் முட்செடிகளை அகற்றவும் இல்லை. தூர்வாரவும் இல்லை.

    தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் நிரந்தர தீர்வுகாண பொதுப்பணி துறையினரும் கலெக்டரும் இணைந்து நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்டம் ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4-ம் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
    • ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

    திருப்பூர்

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் திருப்பூர் மாவட்டம் சார்பில் 4-ம் மாவட்ட மாநாடு திருப்பூர் கே.ஆர்.எஸ். நினைவு வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், மாதந்தோறும் மருத்துவப்படி ரூ. 1000 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   

    அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு  கட்சி  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். 

    மாவட்ட செயற்குழு  உறுப்பினர் உமாமகேஸ்வ ரன், ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    மாநில குழு உறுப்பினர் பொண்ணுத்தாய் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட முடுவார்பட்டி ஊராட்சியில் வடக்கு பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும்,  தினசரி பழ மார்கெட்டில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். 

    அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் நியமனம், குடிநீர் வசதி, நிழற்குடை மற்றும் சுற்றுச்சுவர் வசதி செய்து தர வேண்டும். பழுதடைந்த பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பித்து தர வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் பிச்சை நன்றி கூறினார்.
    திண்டுக்கல் அருகே சாலை அமைக்க கோரி கிராம மக்கள் மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியே செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் கோட்டைபட்டியில் திடீர் என மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

    பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், 5.1.98 முதல் 2008 வரை பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) விழுப்புரம் கிளை சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.

    இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமார், திட்ட தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சிவசங்கரன், இணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 142 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வட்ட தலைவர் சலீம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 187 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான 329 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 
    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குரும்பலூரில் அரசு உறுப்பு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உறுப்பு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளை சார்பில் நேற்று குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் கிளையின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நீலவேணி, பொருளாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில்குமார், 10 அம்ச கோரிக்கைகளை விரிவாக எடுத்து கூறி பேசினார்.

    முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 1.6.2018 அன்று 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அந்த அரசு ஆணையை விரைவாக வெளியிட்டு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை அரசு கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை தகுதி அடிப்படையில் சிறப்பு தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட உள்ள நிலையில், அதில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த தகுதியான கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வில் அரசு இணைத்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆசிரியர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். மற்றும் மகளிர் பேறுகால விடுப்பு போன்ற நலத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பெரம்பலூர் கிளையின் துணைத் தலைவர் அரங்கவளவன் வரவேற்றார். முடிவில் துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். 
    தர்மபுரி புதிய கோர்ட்டு வளாகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு வளாகம் தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ட்டு வளாகம் கடந்த சில மாதங்களாக செயல்பட தொடங்கி உள்ளது. இந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் எழில்சுந்தரம், பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். புதிய கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கான சேம்பர் அமைக்க வேண்டும். அந்த வளாக பகுதியில் செல்போன்கள் தங்குதடையின்றி செயல்பட வசதியாக புதிய செல்போன் கோபுரத்தை அமைக்க வேண்டும்.

    கோர்ட்டு வளாகத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் தார்சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களையும், நீதித்துறை பணியாளர் காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 2 புதிய கோர்ட்டுகளை உடனடியாக திறக்க வேண்டும்.

    கோர்ட்டுக்கு செல்லும் சாலையை பென்னாகரம் சாலையுடன் இணைக்க வேண்டும்.

    வக்கீல் சங்கத்தினர் கேன்டீன் அமைக்க கோர்ட்டு வளாகத்தில் இலவசமாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. 
    திருவாலங்காடு கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
    திருத்தணி:

    திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமி விலாசபுரம், கொசஸ்தலை ஆற்றில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 1-ந் தேதி முதல் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

    மணல் குவாரியை தடை செய்யக் கோரி, கடந்த 2-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். எனினும், கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் லட்சுமி விலாசபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 4-ம் தேதி காலை கொசஸ்தலை ஆற்றில் இறங்கி குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மணல் குவாரி தொடர்பாக, கடந்த 5-ம் தேதி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மணல் குவாரியை மூடக்கோரி லட்சுமிவிலாசபுரம் கிராமத்தில் நேற்று முதல் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

    தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்து வருகிறது. இதில் லட்சுமி விலாசபுரம், பொன்னாங்குளம், பாக சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    ×