search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "closure"

    • களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது.
    • தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. வனத்துறை யினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்க ப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடையே பராமரிப்பு பணிகளுக்காக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

    • மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும்

     கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அன்று ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். அன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார்உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டள்ளது.
    • விதிமுறைகளை மீறி, மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டள்ளது.

    இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபா

    னக்கடைகள் மற்றும் பார்களை 5-ந் தேதி முழுமையாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி, மதுக்கடைகள் மற்றும்

    பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை

    செய்தாலோ சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள்(9-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

    சேலம்:

    மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள்(9-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • சின்னசேலம் வன்முறை சம்பவத்தை கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மூடினார்கள்.
    • குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இன்டர்நேசனல் பள்ளி வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது. குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் பள்ளி முன்பு நிறுத்தியிருந்த காவல் துறையின் பஸ்சை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தடுக்க முயன்ற டி.ஐ.ஜி.பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபிநவ் (சேலம்), செல்வகுமார் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 55 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவித்துள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.பள்ளிகள், இன்டர்நேசனல் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இதில் சேலம் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. அதுபோல் சேலம் புறநகர் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், வீரபாண்டி, ஏற்காடு, கெங்கவல்லி, நங்கவள்ளி, தலைவாசல், பொத்தநாயக்கன் பாளையம், மேச்சேரி, தாரமங்கலம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், காகாபாளையம், இடங்கணசாலை, ஓமலூர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    அதுபோல் நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், குமாரபாளையம், பாண்டமங்கலம், மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    பள்ளிக் கூடங்கள் திறக்கப்படாது என்பது பற்றிய தகவல் முன்கூட்டியே பள்ளி நிர்வாகம் சார்பில் எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அளிக்கப்படாத, தகவல் கிடைக்காத பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளி முன்பகுதி கேட் மூடப்பட்டு, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படாது என நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது. இதனால் பெற்றோர், மாணவ- மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. அதுபோல் ஒரு சில தனியார் பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலை வகுப்புக்காக பள்ளிகள் திறந்திருந்தனர்.

    பல தனியார் பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் பள்ளின்கூட்டங்களை சுற்றிலும் கண்காணித்து வருகின்றன.

    • மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    பரமத்திவேலூர்:

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா, மாநில செயலாளர் இளங்கோவன்,மாநில பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் விடுத்துள்ள செய்தில் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதில் தங்கி பயின்று வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாதுகாப்புக்கு வந்த போலீசாரை கல்வீசி தாக்கியும், பள்ளி மற்றும் காவல்துறையினரின் வாகனங்களுக்கும், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்த கும்பல் பள்ளி வளாகத்திற்கு புகுந்து பள்ளியின் உடமைகளை சேதப்படுத்தியும் உள்ளனர். பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கும்,பள்ளி உடைமைகளுக்கும்,

    ஆசிரியர்கள்,ஊழியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தனியார் பள்ளியின் கூட்டமைப்பின் சார்பில் மேற்கண்ட பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இன்று கருப்பு வண்ண பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். எனவே இன்று தனியார் பள்ளிகள் இயங்காது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என அனைத்து பள்ளிகளையும் தனியார் பள்ளி நிர்வாகிகள் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளை மூடி சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அன்னவாசல் அருகே தனியார் நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே ஆரீயூரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கரும் புகைகள் மற்றும் தூசிகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடு உருவாகிறது எனவும், சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறி அந்த நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த தனியார் நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டனர். 

    இதையடுத்து அந்த நிறுவன அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. திருச்சியிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் 15-ந்தேதி மூடப்படும் என கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இடையூறாக அமைந்து உள்ள 27 ஓட்டல்களுக்கு உடனே ‘சீல்’ வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #ElephantCorridors
    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.

    மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீடு வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான வக்கீல் யானை ராஜேந்திரன், “நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது” என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன, அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அதே நேரத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ யானைகள் மிகுந்த பெருமை வாய்ந்த விலங்குகள். அவை நம் நாட்டின் சொத்துக்கள், அவற்றை நாம் அழித்து கொண்டிருக்கிறோம்” என்று வேதனை தெரிவித்தனர்.

    யானைகள் வழித்தடத்தில் விதிமுறை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.  #SupremeCourt #ElephantCorridors
    அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
    கம்பம்:

    மத்திய மாநில அரசுகளின் கொள்ளை விரோத செயல்களை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கடமலைக் குண்டு, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பிரசார இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். போராட்டக் காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். புதிதாக யாரையும் கைது செய்யக் கூடாது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இது கருத்து சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சியாகும். அரசாங்கத்தை எதிர்த்து பேசினாலே கைது செய்யப்படுவது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. இதனை அரசு கைவிட வேண்டும்.

    மத்திய  அரசின் உத்தரவுக்கு பயந்து தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதனை கைவிட வேண்டும். மத்திய  அரசு விவசாய விளை பொருட்களுக்கான விற்பனை விலையை உற்பத்தி செலவுடன் 1 மடங்கு கூடுதலாக சேர்த்து நிர்ணயிக்க வேண்டும். நலிந்து வரும் சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவாலங்காடு கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
    திருத்தணி:

    திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமி விலாசபுரம், கொசஸ்தலை ஆற்றில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 1-ந் தேதி முதல் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

    மணல் குவாரியை தடை செய்யக் கோரி, கடந்த 2-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். எனினும், கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் லட்சுமி விலாசபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 4-ம் தேதி காலை கொசஸ்தலை ஆற்றில் இறங்கி குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மணல் குவாரி தொடர்பாக, கடந்த 5-ம் தேதி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மணல் குவாரியை மூடக்கோரி லட்சுமிவிலாசபுரம் கிராமத்தில் நேற்று முதல் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

    தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்து வருகிறது. இதில் லட்சுமி விலாசபுரம், பொன்னாங்குளம், பாக சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசின் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டி உள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோயும், தொற்றுநோயும் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகி உள்ளனர்.



    தற்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு நாடகம்.

    ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றம் மூலம் ஆலையை திறக்க அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது. எனவே தமிழக அரசு மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.

    தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலை மூடப்பட்டால் முழுமையான பலன் இருக்கும்.

    துப்பாக்கி சூடு குறித்து ஹென்றி டிபேன் தலைமையிலும், மனித உரிமைகள் கழகம் சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் தேர்வு பாதிப்பால் தமிழகத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ ஆகியோர் இறந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    சாதாரண மக்கள் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் சதியாக உள்ளது. தமிழகத்தில் கல்வி பயின்றவர்கள் சிறந்த மருத்துவர்களாக விளங்கி வருகின்றனர்.

    அடுத்த ஆண்டு மே மாதம் மத்திய அரசின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மோடி ஆட்சிக்கு வரமுடியாது. அதற்குள் மக்களுக்கு என்னென்ன கெடுதல்களை செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நிறைவேற்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MDMK #Vaiko #SterlitePlant

    ×