search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite plant"

    • சிபிஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிபிஐயின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
    • ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என சிபிஐ-யின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்தது.

    மதுரை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் (மே.2018) போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 15 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தார்கள்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது.

    துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு புகார் மனு அனுப்பினார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதன் அடிப்படையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், சிபிஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

    சிபிஐயின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சிபிஐயின் இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். கொலைகள் மற்றும் குற்றசெயல்களில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் வருவாய் அலுவலர் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதுரையில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ச்சுனன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி சண்முகையா. அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலைகள் வழக்கில், ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளி என சிபிஐ-யின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்தது.

    மீண்டும் இந்த வழக்கில் புலன் விசாரணை செய்து ஆறு மாதத்திற்குள் புதிய இறுதியறிக்கையை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி உள்ளது.
    • தாமதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆணையிடக் கோரி அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 'ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது' என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் இந்நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் என்.எல்.சிக்கும் பொருந்தும். எனவே, இனியும் தாமதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடிப்படையான விதிமுறைகளை கூட அந்நிறுவனம் பின்பற்றியது இல்லை.
    • வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்தது.

    இந்நிலையில் ஸ்டெர் லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதி வழங்க வேண்டும், ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கில், அதனை தமிழக அரசே அகற்றும் எனவும், அதற்கான செலவுகளை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மேற்பார்வையில் சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில பல்வேறு வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த பணிகள் சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு லாரிகள் மூலம் ஆலையில் இருந்து பாதுகாப்புடன் அகற்றப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் 1.65 மில்லியன் மெட்ரிக் டன் ஜிப்சம் கழிவுகள் இருந்தது. இதுவரை அவற்றில் 45 ஆயிரம் மெட்ரிக் ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து கழிவுகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை எவ்வளவு ஜிம்சங்கள் ஆலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்பதை கண்காணிப்பு குழு கண்காணித்து வருகிறது.

    இதற்கிடையே ஆலையை மூடியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய அரசாணைகள், ஆவணங்கள் மற்றும் குறுகிய எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய 2 நாட்களில் விசாரித்து முடிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

    இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமாக 25 பக்க அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

    அதில், கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி உள்ளது. அடிப்படையான விதிமுறைகளை கூட அந்நிறுவனம் பின்பற்றியது இல்லை.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது. எனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க இயலாது.

    எனவே வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவும் தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா , தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

    எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாத்திமா அன்னை ஆலயம் அருகே பொதுமக்கள் திரண்டு உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் சிலர் நேற்று முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனினும் சமூகவலைத்தளங்களில் அங்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் என வதந்தி பரவியதால் முத்துநகர் கடற்கரையில் பூங்கா நேற்று மூடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அதே போன்று பீச் ரோடு முழுவதும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கலவர தடுப்பு வாகனங்கள், தீயணைப்புதுறை வாகனங்கள், அதிவிரைவு படையினர், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    எனினும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    துப்பாக்கி சூட்டின் 5-வது ஆண்டு நினைவு தினமான இன்று போராட்டம் நடைபெற்ற பகுதியான குமாரரெட்டியாபுரத்தில் உயிரிழந்த 13 பேரின் உருவப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பாத்திமா அன்னை ஆலயம் அருகே பொதுமக்கள் திரண்டு உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மடத்தூர், பாத்திமா நகர், தொம்மையா கோவில் தெரு, பூபாலராயபுரம், லயன்ஸ் டவுன், முத்தையாபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நினைவு நாளையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ், ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் என தூத்துக்குடி மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த 2,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    • கடலோரப் பகுதிகளை சேர்ந்த மக்களும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • ஆலை மூடப்பட்டதால் வெளியூர்களில் குறைந்த வருவாயில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சில்லாநத்தம், அய்யனடைப்பு, பண்டாரம் பட்டி, மடத்தூர், தெற்குவீரபாண்டியபுரம், மீளவிடான், சில்வர்புரம், சங்கரப்பேரி, சில்லாநத்தம் நயினார்புரம் தெற்கு சிலுக்கன் பட்டி, ராஜாவின் கோவில், நடுவக்குறிச்சி, குமாரரெட்டியாபுரம், சாமி நத்தம், கல்லூரணி ஆகிய கிராமங்களைச் சார்ந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளான மட்டக்கடை, திரேஸ்புரம், ராஜீவ் காந்தி நகர், சிலுவைபட்டி, பாத்திமா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, அன்னை தெரசா மீனவர் காலனி, லயன்ஸ் டோன், சென்ட் பீட்டர் கோவில் தெரு, அலங்கார தட்டு ஆகிய கடலோரப் பகுதிகளை சேர்ந்த மக்களும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    அதில், எங்கள் ஊரின் வாழ்வாதாரமாக விளங்கிய ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டதால் ஏராள மானோர் வேலையை இழந்துள்ளனர். எங்கள் குடும்பத்தை சேர்ந்த பலர் இங்கு நல்ல வருமானத்தில் வேலை பார்த்தனர். அவர்கள் தற்போது ஆலை மூடப்பட்டதால் வெளியூர்களில் சென்று குறைந்த வருவாயில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை கிடைக்க ஆலை திறக்கப்பட வேண்டும். எங்கள் கிராமத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கிவரும் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படவேண்டும். இந்த ஆலை திறக்கப்பட்டால் எங்கள் சந்ததிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று கூறியிருந்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தொடரப்பட்ட வழக்கை வருகிற ஜூன் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiSterlite

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டம், கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி கலவரமாக வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து அந்த ஆலைக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு மே 28-ந் தேதி ‘சீல்’ வைத்து இழுத்து மூடியது. குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டித்தது.

    இதை எதிர்த்தும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஓய்வுப் பெற்ற நீதிபதியை கொண்டு ஆய்வு செய்து அறிக்கையை பெற்றது. பின்னர், ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

     


    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்தும், ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகும்படியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சென்னை ஐகோர்ட்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், இந்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் உள்பட பலர் ஆஜராகிவாதிட்டனர்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘ஏற்கனவே இந்த வழக்கில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், மத்திய வனத்துறை அமைச்சகம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றையும் உறுப்பினர்களாக சேர்க்கின்றோம்.

    மேலும், இந்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் 40 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை எல்லாம் விசாரணைக்கு ஏற்பது குறித்து முடிவு செய்த பின்னரே, பிரதான வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். எனவே, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘ஆலையை மூடி ஓர் ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க வில்லை.

    இதைதொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய ஒரு தனிக்குழுவை அமைக்க வேண்டும் என்று மூத்த வக்கீல் மற்றொரு கோரிக்கையை விடுத்தார். ஆனால், இந்த வழக்கை பொருத்தவரை எந்த ஒரு புதிய உத்தரவையும் தற்போது பிறப்பிக்க முடியாது’ என்று நீதிபதிகள் கூறினர். #ThoothukudiSterlite

    பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #SupremeCourt #SterliteCopperPlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

    அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.



    இதற்கிடையே, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், இயந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதனை மீறி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். #SupremeCourt #SterliteCopperPlant 
    மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. #Sterlite #SterliteCase #MadrasHighCourt
    சென்னை:

    தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி உத்தரவிடும் அதிகாரம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லை என்றும், இது குறித்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆலையை மூடியது சட்டவிரோதம் என்றும், ஆலைக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு கடந்த 1-ம்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறப்பதற்கோ, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கோ, எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. விசாரணை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பராமரிப்பு பணிக்காக ஆலையை அனுமதிக்கும்படி வேதாந்தா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இவ்வழக்கில் வைகோவை சேர்க்கக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.



    ஆனால், வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது. மேலும், ஆலையை மூடிய பின்னர் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் குடிநீரின் தரம் உயர்ந்துள்ளதா? என ஆய்வு செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #Sterlite #SterliteCase #MadrasHighCourt

    சமூக செயற்பாட்டாளர் முகிலன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் பொறுப்பு என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறியுள்ளார். #mansooralikhan #mukilan #sterliteplant

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதே நாடு முழுவதும் எதிரொலிக்கும் குரலாக உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கும் தோல்வியே கிடைக்கும். தற்போது மத்திய அரசை குறைகூறும் காங்கிரஸ் அரசும் ஆள்வதற்கு தகுதியற்ற அரசுதான்.

    தமிழகத்தில் சீமான் தலைமையிலான எங்களது அணிக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மாற்றத்தை எங்களிடம் இருந்து கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்தில் காலூன்ற வைத்து நீராதாரத்தை மத்திய- மாநில அரசுகள் அழித்துவிட்டன. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை உள்பட தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளுக்காக போராடி வந்தவர் முகிலன். தற்போது அவரை காணவில்லை. உயிரோடு உள்ளாரா? என்று கூட தெரியவில்லை. தொழில் நுட்பவசதி பெருகி உள்ள இந்த காலகட்டத்தில் மாயமான ஒருவரை கண்டுபிடிப்பது எளிதான காரியம்தான்.


    ஆனால் போலீசார் அக்கறை காட்டாமல் உள்ளனர். அவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் கடத்தி கொலை செய்து இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் பொறுப்பு. எனவே போலீசார் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #mansooralikhan #mukilan #sterliteplant

    13 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கிடைத்திட தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். #kanimozhi #mkstalin #sterliteplant

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக் நகரில் தி.மு.க. காரியாலயத்தை திறந்து வைத்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    ஜனநாயகத்தை காக்க இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில் நான் வேட்பாளராக நிற்கிறேன். எனக்கு மக்கள் அமோக ஆதரவளித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    நீட் தேர்வை கொண்டு வந்த அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு நீதி கிடைத்திட தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழிற் சாலைகள், தொழில்வளங்கள் பெருக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார். #kanimozhi #mkstalin #sterliteplant

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. #SterliteProtest

    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, நோய்களை பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    இதையடுத்து, ‘ஸ்டெர்லைட்’ ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் 28ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

    குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

    அதை விசாரித்த தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ‘ஸ்டெர்லைட்’ ஆலையில் நேரடி ஆய்வு செய்தது. ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15ந்தேதி பிறப்பித்த தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும், ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது என்றும், மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது என்றும் கூறி தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை நாடலாம் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

    வேதாந்தா நிறுவன சட்டபிரிவு பொது மேலாளர் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மின்சார வாரியம் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #SterliteProtest

    ×