search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maintenance work"

    • இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
    • மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பணிகள் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அவர்கள் மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதனால் அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு காலை 10 மணி முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். இன்று இரவு 8 மணி வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. பின்னர் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    • ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
    • நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கத்தில் ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் புறநகர் மின்சார பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நேற்று விடுமுறை நாளில் குறைவான அளவில் சேவை இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்சார ரெயில் வழித் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 22-ந் தேதி வரை இரவு 11.45 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை சென்னை கடற்கரை-முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
    • இன்று 10.30 மணி முதல் மதியம் 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

    ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று 10.30 மணி முதல் மதியம் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

    அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, மதியம் 12, மதியம் 12.15, மதியம் 12.45, மதியம் 1.30 மணி, மதியம் 1.45, மதியம் 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, காலை 10.55, காலை 11.30, மதியம் 12, மதியம் 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்களும், காஞ்சிபுரம்- கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர்- கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார ரெயில்களும் என மொத்தம் 44 மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

    அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் (செங்கல்பட்டு- தாம்பரம்) காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது.

    அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50, மதியம் 1, மதியம் 1.15, மதியம் 1.30, மதியம் 1.45, மதியம் 2, மதியம் 2.15, மதியம் 2.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு (காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, மதியம் 12, மதியம் 12.15, மதியம் 12.45, மதியம் 1.30 மணி, மதியம் 1.45, மதியம் 2.15, மாலை 4.30) ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு (காலை 9.40, காலை 10.55, காலை 11.30, மதியம் 12, மதியம் 1) ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்களும், காஞ்சிபுரம்- கடற்கரை (காலை 9.30 மணி), திருமால்பூர்- கடற்கரை (காலை 11.05) ஆகிய மின்சார ரெயில்களும் என மொத்தம் 44 மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

    அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, மதியம் 1.45 மதியம் 2.20, மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் (செங்கல்பட்டு- தாம்பரம்) காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
    • தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
    • செயற்பொறியாளர்கள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம். சி.காலனி, எல்.ஐ.சி.காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்ப டுகிறது.

    அதேபோல வடுகந்தாங்கல் பகுதியிலும் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணி கள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பி.கே.புரம், கே.வி.குப்பம், செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய அற்புதராஜ், பரிமளா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது.
    • நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    சென்னை - மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ெரயில், இருமார்க்கத்திலும் வருகிற 8-ந்தேதி வரை தாமதமாக பயணத்தை துவங்கும் என, சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் ெரயில்வே கேட் மாற்றி அமைத்தல், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் போன்றவை நடக்கிறது. இதனால், மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:22638) இரவு 11.45 மணிக்கு பதிலாக 2 மணி நேரம், 50 நிமிடம் தாமதமாக அதிகாலை 2.35 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும். இதேபோல், மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து மங்களூருக்கு புறப்படும் ெரயில் (எண்: 22637) மதியம், 1.25 மணிக்கு பதில், 3 மணி நேரம் தாமதமாக மாலை 4.25 மணிக்கு புறப்படும். வருகிற 5, 6, 8-ந்தேதிகளில் ெரயில் இயக்கம் தாமதமாகும். அடுத்தடுத்த நிலையங்களுக்கு அட்டவணையில் உள்ள நேரத்துக்கு செல்லாமல் கால தாமதமாகவே ெரயில் சென்று சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டுகோள்
    • ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை

    அரக்கோணம்:

    அரக்கோணம் - ஓச்சேரி பிரதான சாலையில் மேல்பாக்கம் பகுதியில் உள்ள அரக்கோணம் - காஞ்சீபுரம் ரெயில் மார்கத்தின் ரெயில்வே கேட் பகுதியில் இன்று (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே, அத்தியாவசிய தேவைக்கு பொது மக்கள் மற்றும் வாகனங் களில் செல்வோர் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களின் இரவில் ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்த்து பருத் திபுத்தூர் வழியாககும்பினிபேட்டை செல்லும் சாலையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரக்கோணம் தாசில் தார் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • அன்றைய தினத்தில் மேலே குறிப்பிட்ட நேரத்தில் மின்விநி யோகம் இருக்காது.

    கடலூர்:

    பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்தி ரன் வெளியீட்டு விழா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பண்ருட்டி பூங்குணம் துணை மின் நிலையத்தில் வரும் (12-ந் தேதி) வியாழ க்கிழமை அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெ றஉள்ளதால் அன்றுகாலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதனால், அங்குசெட்டிப்பாளையம். சேமக்கோட்டை, விசூர், கருக்கை, மணலூர், கண்டர க்கோட்டை, கனி சப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம், பக்கிரிப்பாளையம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஏரிப்பா ளையம், தட்டா ம்பாளையம், மாளிகை மேடு, புதுப்பே ட்டை, பண்டரக்கோட்டை, கொண்டா ரெட்டிப் பாளையம், வவுசி நகர், ஆர்.எஸ்.மணி நகர், பாரதி நகர், ெரயில்வே காலனி, சாமியார் தர்கா மற்றும் புதுநகர் ஆகிய ஊர்களுக்கும், அதை சுற்றியுள்ள கிராம ங்களு க்கும் அன்றைய தினத்தில் மேலே குறிப்பிட்ட நேரத்தில் மின்விநி யோகம் இருக்காது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்

    • கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    • சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்- விஜயவாடா, சென்ட்ரல்- அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரெயில் (12712) சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

    விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரெயில் (12711), கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இதே போல் சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்- விஜயவாடா, சென்ட்ரல்- அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    • துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • டவுன் மேலரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்புற மின் விநியோக செயற்பொறியாளர் காளிதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை பழையப்பேட்டை, டவுன் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை ( செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை அங்கிருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான

    டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் ,எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத் துறை மற்றும் கருப்பன் துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்கெட், ஏ.பி.மாட தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமக்கோட்டை நாளை மின்பாராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மின் வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி( வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமக்கோட்டை, மேலநத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள் கோவில் நத்தம், மான் கோட்டை நத்தம்,

    வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×