என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power outage"

    • நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
    • விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

    அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்நிலையில், நாகையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரைப் பயணம் செல்லும் வழியில் மின்சாரத்தை நிறுத்தம் செய்ய அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், மின் வாரியத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    விஜய் வரும் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் அல்லது, மின் ஊழியர்களை நியமித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய், பிரசாரம் மேற்கொள்ள செல்லும் பகுதிகள் மற்றும் உரையாற்றும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    நாகூர், புத்தூர் பகுதியில் விஜய் செல்லும்போது மின் விநியோகம் இருக்காது என மின்துறை தெரிவித்துள்ளது.

    • அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்தன.
    • வால்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள், துணை மின் நிலையத்தில் தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரெவாசா கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததால், ஆத்திரமடைந்த சிலர் துணை மின் நிலைய அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.

    அங்கும் எந்த பதிலும் இல்லாததால், அலுவலக மேசைக்கு தீ வைத்து, அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் தளபாடங்களை எரித்து சேதப்படுத்தினர். மேலும் அதிகாரிகளையும் தாக்க முயன்றுள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வல்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவவோம் என போலீஸ் தெரிவித்தனர்.

    • வேம்படிதாளம் சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
    • பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் (18-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இளம்பிள்ளை, சித்தர் கோவில், இடங்கணசாலை,

    கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, ெபாதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு, தப்பக்குட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
    • மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து ஆசனூர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வந்தது.

    நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதிப்பட்டு வந்தனர்.

    மூன்றாவது நாளாக இன்றும் மின்சாரம் இன்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கேர்மாளம், திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடட்டி, சுஜில் கரை, கோட்டமாளம், பூதாளபுரம், தொட்டி என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

    மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமலும் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு மின்சாரம் இல்லாததால் இயக்கப்படாததால் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின்கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறுகின்றனர்.

    எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரியலூர் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    அரியலூர்

    அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜ நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன் ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி.தேளூர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கர்பாளையம், மைல்லாண்டகோட்டை.நடுவலூர் துணைமின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி.செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லபாங்கி தெரிவித்துள்ளார்.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.
    • மேலூர், எரவார், பொற்படாகுறிச்சி, விளம்பவூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். இதன் காரணமாக சின்ன சேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல் எலியத்தூர், பங்காரம், வினை தீர்த்தாபுரம், தச்சூர், தென்கீரனூர், உலககாத்தான், மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், ராயர்பாளையம் பெத்தானூர், ஈசந்தை, நாட்டார்மங்கலம், இந்தலி, லட்சியம், காட்டநத்தல், மேலூர், எரவார், பொற்படாகுறிச்சி, விளம்பவூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    • பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

    பவானி:

    பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் பவானி நகர் முழுவதும் மற்றும் மூன்ரோடு, ஊராட்சி கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்ப நாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி, ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்டகாட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

    • மதுரையில் வருகிற 8-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
    • எல்லீஸ்நகர், சமயநல்லூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை எல்லீஸ்நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை எல்லீஸ் நகர் மெயின்ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், (எம்.எச்.டி, ஆர்.எச். பிளாக்குகள்), குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் (ஏ. முதல் எச். பிளாக்குகள்).

    போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெருக்கள், டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள்.

    சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி.ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியரம் போலீஸ் நிலையம் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுதரா அபார்ட்மெண்டஸ், பெரியார் பஸ் நிலையம்.

    ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்காதோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் உள்ள கழிவுநீரேற்று நிலைய உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன்காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பாப்பாகுடி, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம்,பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், தபால்துறை பயிற்சி நிலையம், காவலர் குடியிருப்பு, சின்ன உடப்பு, விமான நிலைய குடியிருப்பு, குரங்குத்தோப்பு, ஆண்டவர்நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயநல்லூர், தேனூர், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, பரவை மெயின்ரோடு, பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, சிறுவாலை, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • விராலிமலை பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள்

    புதுக்கோட்டை

    விராலிமலை, வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், விராலிமலை நகர்பகுதி, கோமங்கலம், கல்குடி, பொருவாய், நம்பம்பட்டி, ராஜாளிபட்டி, பொய்யாமணி, செட்டியபட்டி, தேன்கனியூர், கொடும்பாளூர், மாதுராபட்டி, ராமகவுண்டம்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பாவயல், வடுகப்பட்டியில் உள்ள அனைத்து கம்பெனிகள், வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்."

    • குரும்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூா் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்."

    • துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

      விழுப்புரம்:   

       மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (15-ந் தேதி)நடைபெற உள்ளது. எனவே அவலூர்பேட்டை, ரவணாம்பட்டு, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பறையம்பட்டு, தாழங்குணம், கப்ளாம்பாடி, குந்தலம்பட்டு,நொச்சலூர், கோவில்புரையூர், ஆதிகான்புரவடை, மேக்களூர், செவரப்பூண்டி, கீக்களூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என செஞ்சி செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

    • தேவகோட்டையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    தேவகோட்டை,

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக தேவகோட்டை டவுன், ராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    ×