என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வெட்டு"

    • ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    • மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் மின்சார விநியோகம் முறையாக இல்லாமல் ½ மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் இரவு சுமார் 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தேனி துணை மின் நிலையத்தில் போடி விநியோகப் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் போடி சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலும் போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான போடி மெட்டு, கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், பிச்சாங்கரை போன்ற பகுதிகளிலும் சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

    நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக சாலையில் படுக்கை விரித்து படுத்து உறங்கினர்.

    மேலும் வீட்டு வாசலில் பொது மக்கள் கொசுக்கடி காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தேனி பகுதியில் மில் வேலைக்கு சென்று இரவு பணி முடித்து திரும்பி வரும் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக அவர்களுடைய தாய்மார்கள் இருளில் காத்திருந்தனர்.

    போடி அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் நடைபெற்றது. ஆனால் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டரில் டீசல் தீர்ந்து நின்று விட்டது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் ஏற்பட்ட மின்தடை காரணமாக வேலைக்கு செல்பவர்கள் குழந்தைகள் தூக்கம் பாதிக்கப்பட்டதால் காலையில் வேலைக்கு செல்வதிலும் பள்ளிக்கு செல்வதிலும் மிகுந்த சிரமம் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    இரவு 11 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2½ மணியளவில் சரி செய்யப்பட்டது.

    கடந்த சில வாரங்களாகவே இதுபோன்று மின்தடை ஏற்பட்டுவரும் நிலையில் உரிய பராமரிப்பு மேற்கொண்டு மின்விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்தன.
    • வால்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள், துணை மின் நிலையத்தில் தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரெவாசா கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததால், ஆத்திரமடைந்த சிலர் துணை மின் நிலைய அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.

    அங்கும் எந்த பதிலும் இல்லாததால், அலுவலக மேசைக்கு தீ வைத்து, அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் தளபாடங்களை எரித்து சேதப்படுத்தினர். மேலும் அதிகாரிகளையும் தாக்க முயன்றுள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வல்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவவோம் என போலீஸ் தெரிவித்தனர்.

    • எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும்.
    • இயல்பான மழைப்பொழிவுதான் இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (19.05.2025) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தள கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தின் தொடக்கத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.

    பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நான்கு ஆண்டுகளில் பல பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டு நாம் கடந்து வந்திருக்கின்றோம். அதற்குக் காரணம் மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை நம்முடைய முதல் கடமையாக நினைத்துச் செயல்படுவதுதான்.

    இப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக புயல், வெள்ளம், கனமழை போன்ற பேரிடர்கள் எல்லாக் காலங்களிலும் ஏற்படுகின்றன. ஆனால், அந்த இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளான உங்களுக்கும்தான் இருக்கிறது. இப்போது, நாம் தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ளவிருக்கிறோம்.

    இதில் இயல்பான மழைப்பொழிவுதான் இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    என்னதான் நிலத்தடி நீர்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மை உள்ளிட்டவற்றுக்கு இந்த மழை துணையாக இருந்தாலும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீர் வெள்ளம், நீலகிரி மலைப் பகுதிகளில் ஏற்படுகிற நிலச்சரிவு போன்ற பாதிப்புகளையும் இதனால் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, அதிக கனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதையும், தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்திடவேண்டும்.

    பேரிடர் மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற வசதிகளோடும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல; பேரிடர் மேலாண்மைத் திட்டம் – தகவல் தொடர்புத் திட்டம் – முதல்நிலை மீட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்கள் அனைத்தையும் சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடந்து, நாம் ப்ரோ-ஆக்டிவாகச் செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பல பாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதற்காக நான் சில ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

    பேரிடர் காலங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டும், தங்களுடைய குறைகளைச் சொல்லியும் குரல் எழுப்புவது ஊடகங்களிலேயும், சமூக வலைதளங்களிலேயும்தான்.

    எனவே, சோஷியல் மீடியாக்களில், செய்திகளில் வருகிற புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படி எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேருகிறதா என்பதைத் திரும்பவும் நீங்கள் ஃபாலோ-அப் செய்ய வேண்டும்.

    குறைகளைச் சொல்கின்ற மக்களிடையேயும், உதவி கேட்கின்ற மக்களிடையேயும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நம்மை நம்பிதான் உதவி கேட்கின்றார்கள் என்ற பொறுப்போடு நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

    பேரிடர் காலங்களில் ஏற்படுகிற திடீர் மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் குறித்த தகவல்கள் நுகர்வோருடைய செல்போனுக்கு SMS-ஆ அனுப்ப வேண்டும்.

    அதுமட்டுமல்ல, அவர்கள் பகுதியில் எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும். அடுத்து, சாலைப் பணிகள் நடைபெறுகிற காரணங்களினால், சில அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    எனவே, தமிழ்நாடு முழுவதும் அப்படி இருக்கின்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கே தகுந்த தடுப்புச் சுவர்கள், தடுப்பு வேலிகள், போதிய வெளிச்சம், ஒளிரும் டைவெர்ஷன் போர்டுகள் போன்றவற்றை வைத்து விபத்துகளைத் தடுக்க வேண்டும்.

    அடுத்து, மழைக்காலங்களில், நெல் மூட்டைகள் மற்றும் உணவு தானியங்கள் மழையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சேமிப்பு கிடங்குகள் மற்றும் கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரைக்கும், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மழைநீர் வடிகால், நீர் வழிகால்வாய்கள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    பருவமழை காலத்துக்குத் தேவையான எல்லா ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

    அடுத்து, நீர்வள ஆதாரத் துறையைப் பொறுத்தவரைக்கும் 17.05.2025 தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடி உயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது.

    எனவே, வரும் ஜூன் 12-ம் நாள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்குப் போதுமான நீர் இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத் தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவை சாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அடுத்து, வேளாண்மை-உழவர் நலத்துறையைப் பொறுத்தவரையில், தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ள பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் திறப்பு ஆகியவற்றால் குறுவை சாகுபடி அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதால், வேளாண் பெருமக்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட எல்லா இடு பொருட்களும் உரிய காலத்தில் கிடைப்பதையும், குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தினுடைய பயன்கள் முழுமையாக விவசாயிகளைச் சென்றடைவதையும் உறுதி செய்திட, வேளாண் களஅலுவலர்கள் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்று கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.

    எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, பொருள் மற்றும் உட்கட்டமைப்பு சேதம் எதுவும் இல்லாமல், நல்ல முறையில் பருவமழை காலத்தைக் கடந்து செல்ல அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின்சாரம் இல்லாததால் மாட்ரிட் டென்னிஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
    • இரவு வரை நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக நாடு இருளில் மூழ்கியது.

    மாட்ரிட்:

    ஸ்பெயினில் இரு தினங்களுக்கு முன் வரலாறு காணாத அளவில் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த திடீர் மின்வெட்டு காரணமாக தலைநகர் மாட்ரிட் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள மின்சார ரெயில் சேவை, செல்போன் சேவைகள், விமான சேவைகள் உள்பட போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள் முடங்கின.

    மின்சாரம் இல்லாததால் மாட்ரிட் டென்னிஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இரவு வரை நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக நாடு இருளில் மூழ்கியது.

    மின் வெட்டு பாதிப்பு அண்டை நாடுகளான பிரான்ஸ், போர்ச்சுகலிலும் உணரப்பட்டது. சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு அங்கு மின்வெட்டு சீரமைக்கப்பட்டது.

    இந்நிலையில், வரலாறு காணாத இந்த மின்வெட்டு காரணமாக ஸ்பெயின் அரசுக்கு ரூ.15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் ஆகும்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைெபறுவதையொட்டி நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட் டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை நகரம், வாலாஜா, ஒழுகூர் மற்றும் முசிறிதுணை மின்நிலையங்களில் அத்தி யாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்ப தால் நாளை (வியாழக்கி ழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரைராணிப் பேட்டை நகரம், முத்துக் கடை, ஆட்டோ நகர், வி.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந் திநகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்னத கரகுப்பம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லி யப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, ஒழுகூர், வாங் கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப் பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு, கன்னி காபுரம், எடையகுப்பம், படி யம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ராணிப் பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் குமரேசன் தெரி வித்துள்ளார்.

    இதேபோல ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த ஆற்காடு, திமிரி, கத் தியவாடி, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி ஆகிய துணை மின் நிலையங் களில் அத்தியாவசிய மின்சா தன பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம், அவுசிங்போர்டு, வேப்பூர்,

    விஷாரம், நந்தியாலம், தாழ னூர், ராமநாதபுரம், கூராம் பாடி,உப்புப்பேட்டை, கிருஷ் ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்திய வாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், திமிரி, விளாப் பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத் தூர் (ஒருபகுதி), மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது இந்த தகவலை செயற்பொறியள விஜயகுமார் தெரிவித்துள்ளார்

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின்கோட் டத்தை சேர்ந்த கொரட்டி, குனிச்சி, மிட்டூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராம ரிப்பு பணிகள் நடைபெறு கிறது.

    இதன் காரணமாக பச்சூர், தோரணம்பதி, குமா ரம்பட்டி, காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு,சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்ப னூர், காக்கங்கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்ற பள்ளி, பெரியகரம், கசிநாயக் கன்ப்ட்டி, லக்கிநாயக்கன் பட்டி, கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத் தூர், எலவம்பட்டி, பஞ்சனம் பட்டி, புதூர், மிட்டூர், ஆண்டியப்பனூர், லாலாபேட்டை, ஓமகுப்பம், நாச்சியார்குப்பம், இருணாபட்டு, பாப்பானூர், பூங்குளம், பலப்பநத்தம், ஜல்தி,பள்ளத்தூர், ரெட்டிவ லசை, குண்டுரெட்டியூர், நஞ் சப்பனேரி, டேம் வட்டம், ராணி வட்டம் உள்பட 38 கிராமங்களில் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளது.
    • புஷ்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3 வது மைல், புதுக்குடி,

    டைமண்ட் காலனி, இ.பி. காலனி, ஏழுமலையான் நகர் , மில்லர்புரம் , ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தி நாதபுரம், சங்கர் காலனி, எப்.சி.ஏ. குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ் புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர், பாலையாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

    அதேபோல் வி. எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டி.எம்.பி. காலனி, அண்ணா நகர் 2- வது மற்றும் 3 -வதுதெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர்,அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போதுமான நிலக்கரி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • எரிவாயு மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

    புதுடெல்லி :

    கோடை காலம் தொடங்குவதால் வெயில் அதிகரித்துள்ளது. அதனால், மின்சார தேவையும் உயர்ந்துள்ளது.

    இதை கருத்தில்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மின்சாரம், நிலக்கரி, ரெயில்வே ஆகிய அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில், கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாதவகையில் பார்த்துக்கொள்ளுமாறு மின் உற்பத்தி நிறுவனங்களை ஆர்.கே.சிங் கேட்டுக்கொண்டார்.

    கோடை காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தினார்.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வதில் ஒளிவுமறைவற்ற அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு மத்திய மின்சார ஆணையத்தை கேட்டுக்கொண்டார்.

    மத்திய மின்சார ஆணையத்தின் கணக்குப்படி, ஏப்ரல் மாதம், உச்சபட்ச மின்சார தேவை 229 ஜிகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை பூர்த்தி செய்ய பன்முனை வியூகம் ஒன்றை மத்திய மின்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.

    அதன்படி, நிலக்கரியால் இயங்கும் மின்உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளுமாறு மின்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு இறக்குமதி நிலக்கரியை பயன்படுத்தும் மின்உற்பத்தி நிலையங்கள், இம்மாதம் 16-ந் தேதியில் இருந்து தங்களது முழுதிறனை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    போதுமான நிலக்கரி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கொண்டு செல்ல 418 பெட்டிகளை அளிக்க ரெயில்வே அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

    இதுதவிர, கோடை காலத்தில் ஏற்படும் அதிகபட்ச மின்சார தேவையை பூர்த்தி செய்ய எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. எரிவாயு மூலம் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். போதிய எரிவாயு வினியோகம் செய்வதாக 'கெயில்' நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

    இம்மாத இறுதியில் உற்பத்தியை தொடங்கும் புதிய நிலக்கரி மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் 2 ஆயிரத்து 920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

    இந்த நடவடிக்கைகள் மூலம், கோடைகால மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தொடரும் மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர்.
    • கடைகளில் வியாபாரிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வியாபாரம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி கடும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தினமும் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்த படி இருக்கிறது. மேலும் வெயிலின் உக்கிரம் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.

    இந்தநிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தினமும் பலமணி நேரம் அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் வீட்டில் உள்ள நோயாளிகள், வயதானோர், குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இரவு நேரத்தில் தொடரும் மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். கடைகளில் வியாபாரிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வியாபாரம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. காலை முதல் இரவு வரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின் தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஊத்துக்கோட்டையில் இன்று காலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் காலை 8.30 மணிக்கு மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

    மீண்டும் இரவு வரை மின்தடை விட்டு விட்டு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து சரியான காரணத்தை அதிகாரிகள் கூறுவதில்லை. திருவள்ளூர் பகுதியில் மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது மின்தடைக்கான காரணத்தை கூற மறுத்துவிட்டனர்.

    • ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
    • மின்வெட்டால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

    திருநின்றவூர்:

    சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதனால் பெரும்பாலானவர்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள். எனினும் வீட்டுக்குள் இருக்கும்போது கூட வெப்பத்தின் தாக்கம் காரணமாக புழுக்கத்தால் மக்கள் தவிக்கிறார்கள். கடந்த 3 நாட்களாக கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் மற்றும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

    நேற்று இரவும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் இருளில் தவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேரம் வரை மின்தடைக்கு பின்னர் மீண்டும் மின்வினியோகம் சீரானது.

    பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. மாடர்ன் சிட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு தடை பட்ட மின்சாரம் இரவு 8 மணிக்கு சீரானது. இதே போல் கோபாலபுரம் பகுதியிலும் மின் வினியோகம் தடைபட்டது.

    ஆவடி பகுதியில் காமராஜர் புதிய ராணுவ சாலை, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களிலும் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டது. இன்று காலையும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் புழுக்கத்தால் தவித்தனர். திருமுல்லைவாயல் பகுதியில் தினமும் இரண்டு மணி நேரம் தொடர் மின் தடை ஏற்படுவதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மின்தடை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறுவதில்லை என்று ஆதங்கத்துடன் கூறினர்.

    இதேபோல் திருநின்றவூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்க தலைவர் சாலமன் தலைமையில் வியாபாரிகள் மின்வாரிய அதிகாரியை சந்தித்து முறையிட்டனர்.

    • நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது.
    • இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது. இதனால் ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டது. மேலும் வாகையூரில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். லேசான மழை பெய்தால் இந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர். இதனையடுத்து அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் நாள் கணக்கில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து மின்சார துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • ஆலங்குடியில் பகுதியில் 5 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்
    • மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    ஆலங்குடி:

    ஆலங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வந்தது. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென கடும் சூறாவளி காற்று வீசியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் வாகனங்களை ஓட்ட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனை தொடர்ந்து திடீரென மழை பெய்தது. சூறாவளி காற்றால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு 7 மணி அளவில் ஆலங்குடி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்தில் மழை நின்று விட்ட நிலையில் 5 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இதனை தொடர்ந்து சுமார் 12 மணி அளவில் மின்சாரம் மீண்டும் வந்தது.

    ×