search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Thermal Power Plant"

    • அனல் மின் நிலையத்தில் உள்ள 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ளது.
    • உடனடியாக மின்உற்பத்தி எந்திரத்தில் பழுதுநீக்கும் பணியில் அனல்மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின்நிலைத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் உள்ள 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ளது. மற்ற 4 மின்உற்பத்தி எந்திரங்களும் இயங்கி வந்தன. நேற்று காலையில் 3-வது மின்உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலனில் திடீரென ஓட்டை விழுந்தது. இதையடுத்து அந்த மின்உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது.

    இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக மின்உற்பத்தி எந்திரத்தில் பழுதுநீக்கும் பணியில் அனல்மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இரவில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதலாவது யூனிட் பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiPowerPlant #Boilerrepair

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இங்குள்ள யூனிட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் அவை சமீபகாலமாக அடிக்கடி பழுதாகி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

    இங்குள்ள யூனிட்டுகள் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்காக சில நாட்கள் நிறுத்தப்படுவது வழக்கம். 

    இந்நிலையில் இன்று முதலாவது யூனிட் எந்திரத்தின் கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதனால் 1-வது யூனிட்டில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த 4-ம் தேதி முதலாவது யூனிட்டின் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக நிறுத்தப்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiPowerPlant #Boilerrepair
    ×