என் மலர்
நீங்கள் தேடியது "Thoothukudi Thermal Power Plant"
- 3-வது யூனிட்டிலும் நேற்று இரவு பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
- 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 5 யூனிட்டுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் அனுப்பப்படுகிறது
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதலாவது மற்றும் 2-வது யூனிட்டுகள் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது.
இந்த நிலையில் 4-வது மற்றும் 5-வது யூனிட் பராமரிப்பு பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு 3-வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 3-வது யூனிட்டிலும் நேற்று இரவு பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் குறைவான அளவில் மின்சாரம் நுகர்வு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியை தொடங்காவிட்டால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகும் என கூறப்படுகிறது.
- அனல் மின் நிலையத்தில் உள்ள 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ளது.
- உடனடியாக மின்உற்பத்தி எந்திரத்தில் பழுதுநீக்கும் பணியில் அனல்மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின்நிலைத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் உள்ள 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ளது. மற்ற 4 மின்உற்பத்தி எந்திரங்களும் இயங்கி வந்தன. நேற்று காலையில் 3-வது மின்உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலனில் திடீரென ஓட்டை விழுந்தது. இதையடுத்து அந்த மின்உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது.
இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக மின்உற்பத்தி எந்திரத்தில் பழுதுநீக்கும் பணியில் அனல்மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இரவில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






