search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SMS"

    • ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.
    • ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டையிலுள்ள மகளிர்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உதவி மைய எண் 1100-ல் தொடர்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்ட இணைய முகவரியான kmut.tn.gov.in/login.html யில் பொதுமக்கள் உள்நுழைவு என்ற மெனுவை தேர்வு செய்து அதில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்திட்டத்திற்கென பிரத்யேகமாக செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தினை அணுகி விண்ணப்ப த்தின் நிலையினை தெரிந்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொகை ரூ.1000-ஐ தங்களின் விருப்பப்படி வங்கியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தொகை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளாவிடில் வங்கியிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்வார்கள் என அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
    • விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32-வது சுற்று கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 2,448 மையங்களில் நடைபெற்றது.

    இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தி யவர்கள் மூன்றாவதாக முன்னெ ச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டு பய ன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு குழுவினர் மூலம் மாவட்ட முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 270 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5,870 பேருக்கும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 25 ஆயிரத்து 95 பேருக்கும், ஆக மொத்தம் 31, 235 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் தங்களுடைய செல்போனில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ். மூலம் குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் எவ்வாறு எஸ்.எம்.எஸ்.வந்தது. சுகாதாரத்துறை பணி யாளர்கள் அலட்சி யமாக செயல்படுகிறார்களா? அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்துவ தற்கான இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் சுகாதாரப் பணியாளர்கள் முறை கேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    எஸ்.எம்.எஸ். கொடுத்தால் ஆவின் பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #AavinMilk #MinisterKadamburRaju
    தூத்துக்குடி:

    ஆவின் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    பால் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தில் குஜராத் இருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகளை வழங்கினார். அதன்பேரில் தற்போது தமிழ்நாடு பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெண்மை புரட்சி ஏற்பட்டு உள்ளது. பால் உற்பத்தியை பெருக்குவதற்காக கால்நடைகளுக்கு அரசு தீவனம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    சைக்கிள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கு சற்றும் குறைவு இல்லாமல் ஊக்கத்தொகை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் 100 சதவீதம் சுத்தமான பால் ஆகும். ஆவின் பால் பூத்களுக்கு தேவையான பொருட்கள் உடனடியாக வழங்கப்படும். எஸ்.எம்.எஸ். கொடுத்தாலே பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.


    பால் கொள்முதல் விலை உயர்த்துவது தொடர்பாக முதல்அமைச்சர் நல்ல அறிவிப்பை தருவார். ஆவின் பால் பூத்களில் ஆவின் தவிர மற்ற பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சத்துணவில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Aavin #MinisterKadamburRaju
    மதுரையில் விடுமுறை என்று சகமாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியதை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டான்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சேர்ந்தவன் நவீன் பாரதி (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நவீன் பாரதியின் தந்தை இளங்கோவன் ‘கொரியர்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தாயார் தேவி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நவீன் பாரதி கடந்த வெள்ளிக்கிழமை “இன்று பள்ளிக்கு விடுமுறை” என்று சக மாணவர்களுக்கு செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உள்ளார். இதனை நம்பிய பலரும் அந்த செய்தியை பார்வேர்டு செய்து உள்ளனர். இதனால் அன்றைய தினம் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வரவில்லை.

    பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்த போது நவீன்பாரதி குறுஞ்செய்தி அனுப்பிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற நவீன் பாரதியை ஆசிரியர்கள் மட்டுமின்றி சக மாணவர்களும் திட்டினர். இதனால் மனவேதனை அடைந்த நவீன்பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    இது குறித்து அவனது தந்தை இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    தமிழக அரசின் பத்திர பதிவுத்துறையில், பதிவுப்பணி முடிந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வருகிற 3-ந் தேதி தொடங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பதிவுத்துறையில் ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் மூலம் https://tnreginet.gov.in என்ற இணையதளம் வழியாக பத்திரங்களை தயாரிக்கலாம் அல்லது தாங்களே சொந்தமாக பத்திரம் தயாரிக்கும் நிலையில் இணையதளத்தில் ஆவணச்சுருக்கத்தை உட்புகுத்தலாம். இதில் புதிதாக பத்திரம் பதிவு செய்பவர்களின் செல்போன் எண்ணை சேர்த்தால், அதனை சரிபார்த்து பதிவுத்துறை ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் ஆவணதாரர்கள் பல்வேறு வசதிகளை பெற முடியும்.

    பதிவுப்பணி முடிந்தவுடன் பத்திரத்தை திரும்பபெற்று செல்ல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) ஆவணதாரருக்கு அனுப்பப்படும். பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட தேதியில் ஆவணம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்ட விவரம் உறுதி செய்யப்படும். நிலுவையில் இருக்கும் பத்திரங்களின் நிலை குறித்து ஆவணதாரருக்கு அனுப்பப்படும். இழப்பீடு தொகை கட்ட வேண்டும் என்றால் அது குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். சந்தை மதிப்பு நிர்ணய ஆணை பிறப்பிக்கப்பட்ட விவரங்களும், செலுத்த வேண்டிய குறைவு முத்திரை தீர்வை, குறைவு பதிவு கட்டணம் போன்ற விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்த திட்டம் வருகிற 3-ந் தேதி தொடங்கப்படுகிறது.

    பதிவு அலுவலர் பதிவு மறுப்பு சீட்டு வழங்காமல் வாய்மொழியாக பதிவை மறுக்கும் நிகழ்வுகளில் பதிவுத்துறை தலைவர் அலுவலக கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 102 5174 தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ், செல்போன் இணையதள சேவை இலவசமாக வழங்கப்படும் 

    மேலும், கொச்சி விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த விமான ஓடுதளத்துக்கு பதிலாக கொச்சி கடற்படை விமான ஓடுதளம் பயன்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    வெள்ளம் சூழ்ந்ததால் கொச்சி விமான நிலையம் 26-ம் தேதி வரை மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaRain
    ×