search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRAI"

    • அழைப்பவர் பெயரை செல்போனில் காட்டுங்கள் என நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.
    • டிராய் அமைப்பின் இந்தப் பரிந்துரையை ட்ரூ காலர் நிறுவனம் வரவேற்றுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு நெட்வொர்க் நிறுவனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். புதிய நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரும்போது பெயர் வருவதில்லை, நம்பர் மட்டுமே வரும். இதனால் பலர் ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    ட்ரூ காலர் செயலி இருந்தால் புதிய நம்பரில் இருந்து அழைப்புகள் வரும்போது அதில் பெயரும் சேர்ந்து காண்பிக்கும். இது செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பேருதவியாக இருப்பதால் பலரும் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தொலைபேசி அழைப்புகளின்போது அழைப்பாளர்களின் பெயரையும் காண்பிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.

    டிராய் அமைப்பின் பரிந்துரையை ட்ரூ காலர் நிறுவனம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக ட்ரூ காலர் நிறுவனம் கூறுகையில், இந்தப் புதிய வசதியை அரசு அமல்படுத்தினால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது.

    • இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாட்டின் முக்கிய பகுதிகளில் 5ஜி சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

    மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் 4ஜி தொழில்நுட்பம் ஐந்து முதல் ஏழு மாதங்களுக்குள் 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க பிஎஸ்என்எல் வைத்திருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் இதே போன்ற அப்கிரேடு செய்யப்பட இருப்பதாக மத்திய டெலிகாம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார்.

    தற்சார்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் டெலிகாம் துறை வளர்ச்சி நிதியை ஆண்டிற்கு ரூ. 500 கோடியில் இருந்து ரூ. 4 ஆயிரம் கோடியாக உயரத்த அரசு திட்டமிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். கோடக் வங்கி தலைமை செயல் அதிகாரி உதய் கோடக், இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் பங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்து இருந்தார்.

    அதில் பிஎஸ்என்எல் இந்திய டெலிகாம் துறையில் பிஎஸ்என்எல் உறுதியான நிறுவனமாக மாறழும் என தெரிவித்தார். இதோடு நாடு முழுக்க பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் கிராமபுறங்களில் 1 லட்சத்து 35 ஆயிரம் மொபைல் டவர்களை வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் முழுமையாக களமிறங்காத நிலையே தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    "டெலிகாம் தொழில்நுட்ப ஸ்டாக் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இது 4ஜி தொழில்நுட்ப ஸ்டாக் ஆகும். அடுத்த ஐந்து முதல் ஆறு மாத காலத்திற்குள் இவை 5ஜி-க்கு அப்கிரேடு செய்யப்பட இருக்கிறது. நாடு முழுக்க உள்ள 1 லட்சத்து 35 ஆயிரம் டெலிகாம் டவர்களிலும் தொழில்நுட்ப ஸ்டாக் வெளியிடப்படும்," என அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.

    5ஜி டெஸ்டிங் செய்வதற்கான உபகரணங்களை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ்-இடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவைகளை துவங்க முடியும்.

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
    • பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன் ஐடியா) என இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் நாட்டில் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மிக விரைவில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னமும் 4ஜி சேவையை நாடு முழுக்க வெளியிட திண்டாடி வருகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் வெளியிடப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலின் படி பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.


    திடீரென 4ஜி வெளியீடு தாமதமாக என்ன காரணம் என்றும் டெலிகாம் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிட விசேஷ உபகரணங்களை வாங்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்து இருக்கிறார். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த உபகரணங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

    உபகரணங்களை வாங்கும் பணிகளை பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு தான் நிறைவு செய்யும். 4ஜி அப்கிரேடு பணிகளில் பிஎஸ்என்எல் உள்நாட்டு தயாரிப்புகளையே பயன்படுத்தும், இதுவே வெளியீட்டு தாமதமாக காரணம் ஆகும். இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் போதே பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளையும் வெளியிட முடியும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    • இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
    • 5ஜி சேவையை வெளியீடு அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என மத்திய மந்திரி தெரிவித்து இருக்கிறார்.

    இந்தியாவில் விரைவில் வர்த்தக ரீதியிலான 5ஜி சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறும் போது, இந்தியாவில் 5ஜி சேவைகள் அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார்.

    முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் எப்போது 5ஜி சேவைகள் வெளியாகும் என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது.


    5ஜி சேவையை வெளியிடுவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட டெலிகாம் வட்டாரங்களில் சேவையை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளன. அந்த வகையில், அரசு திட்டம் சரியாக இருப்பின் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் வழங்கும் நகரங்கள் பட்டியலை கீழே காணலாம்.

    ஆமதாபாத்

    பெங்களூரு

    சண்டிகர்

    சென்னை

    டெல்லி

    காந்திநகர்

    குருகிராம்

    ஐதராபாத்

    ஜாம்நகர்

    கொல்கத்தா

    லக்னோ

    மும்பை

    பூனே

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நகரங்களில் 5ஜி சேவை முதற்கட்டமாக வெளியிடப்படும் என எதிர்பாக்கலாம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் வெளியிடும் என தெரிகிறது. வி நிறுவனம் முதலில் டெல்லி பகுதியில் 5ஜி சேவைகளை வழங்க இருப்பதாக தனது பயனர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் 5ஜி சேவைகளை வழங்கும் வகையிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி உள்ளது.

    • 5ஜி சேவை முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் வழங்கப்பட உள்ளது.
    • உலக சந்தைகளைவிட இந்தியாவில் 5ஜி டேட்டா சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

    5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியது. வருகிற ஜூலை மாதத்திற்குள் இந்த ஏலத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 20 ஆண்டு கால அளவிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்து 5ஜி சேவையை வழங்க முடியும்.


    இந்நிலையில், 5ஜி சேவை முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    அதில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், லக்னோ, பூனே, சென்னை, காந்திநகர், ஜாம் நகர், மும்பை, அகமதாபாத், சண்டீகர் உள்பட 13 நகரங்களுக்கு வழங்கப்படும் என்றும் பின்னர் இதர நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலக சந்தைகளைவிட இந்தியாவில் 5ஜி டேட்டா சேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். 4ஜி டேட்டா பேக்குகளுக்கு இணையாகவே 5ஜி டேட்டா பேக்குகளின் விலையும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    • நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது.
    • அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், வெளியிட்டுள்ள அறிக்கையின் படி. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 16.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் புதிதாக 8.1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

    அதேபோல் மற்றொரு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய்யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. 35.5 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்திலும், 31.61 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 22.68 சதவீதத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.


    ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.3 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.

    புதிதாக 16.82 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 40.5 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணியில் உள்ளது. புதிதாக 8.1 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ஏர்டெல் நிறுவனம் 36.11 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மறுபுறம் 15.68 லட்சம் பயனர்களை இழந்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 25.9 கோடியாக குறைந்துள்ளது.

    பிராட்பேண்ட் சேவைகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 3.31 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 71 ஆயிரத்து 297 பிராட்பேண்ட் பயனர்களை பெற்றுள்ளது. பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 25.85 சதவீதமாகவும், ஏர்டெல் 23.54 சதவீதமாகவும் உள்ளது. ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லைன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.51 கோடி அதிகரித்துள்ளது. 

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த மாதத்தில் இந்த நிறுவனங்கள் தான் டாப் என தெரியவந்துள்ளது. #TRAI



    இந்திய டெலிகாம் சந்தையில் பிப்ரவரி 2019 மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் மட்டுமே புதிதாக வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 29.72 கோடியாக இருந்தது. இது ஜனவரியில் இருந்ததை விட 77.93 லட்சம் அதிகம் ஆகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் இதே காலக்கட்டத்தில் 8.99 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்திருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவோர் எண்ணிக்கை 11.62 கோடியாக இருக்கிறது.



    சமீபத்தில் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை 118.36 கோடியாக இருக்கிறது. பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 57.87 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அந்த வகையில் வோடபோன் ஐடியா பயனர் எண்ணிக்கை தற்சமயம் 40.93 கோடியாகும்.

    இதேபோன்று பாரதி ஏர்டெல் நிறுவனமும் 49,896 வாடிக்கையாளர்களை இழந்து, பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் 34.03 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் இணைந்திருக்கின்றனர். #RelianceJio



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில், 2019 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையை சுமார் 29 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியா முழுக்க வயர்லெஸ் சந்தாததாரர்கள் எண்ணிக்கை 118.19 கோடியாக இருக்கிறது.

    டிசம்பர் 2018 வரை வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 117.6 கோடியில் இருந்து ஜனவரி 2019 இல் 118.19 கோடியாக அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் ஒரே மாதத்தில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 0.51 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருப்பதாக டிராய் தெரிவித்திருக்கிறது.



    மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களில் 102.25 கோடி பேர் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதாக டிராய் தெரிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஜனவரியில் 9.83 லட்சம் புதிய இணைப்புகளை பெற்றிருக்கிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 11.53 கோடியாக அதிகரித்துள்ளது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் 1.03 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஜனவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஏர்டெல் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.04 கோடியாக இருக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவன சேவையை 41.52 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக டிராய் அறிவித்துள்ளது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்திருக்கிறது. மற்ற முன்னணி நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இதே காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.

    ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 85.6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 

    ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ. மற்றும் எல்.டி.இ. என மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நவம்பர் மாத இறுதியில் 117.17 கோடியில் இருந்து டிசம்பர் மாத இறுதியில் 117.6  கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 0.36 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.87 கோடியாக இருக்கிறது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34.03 கோடியாக இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

    பகுதிவாரியாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாடு முழுக்க தொடர்ந்து அதிகரித்து இருப்பதாக டிராய் அறிவித்திருக்கிறது. வடகிழக்கு தவிர மற்ற பகுதிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமான வளர்ச்சி பெற்றிருந்தது. டிசம்பர் 2018 இல் மட்டும் 47.6 லட்சம் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையை பயன்படுத்தி இருக்கின்றனர் என டிராய் தெரிவித்துள்ளது.
    வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் அறிவித்துள்ளது. #TRAI #CableTV
    புதுடெல்லி:

    கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டு இருந்தது.

    இந்நிலையில், கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் இன்று அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி அவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #TRAI #CableTV
    விரும்பிய சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் கேபிள் டிவி சேவை, திட்டமிட்டபடி நாளை அமலுக்கு வருகிறது. டிடிஹெச்சில் நீண்ட கால சேவைக்கு முன்கூட்டியே பணம் செலுத்தியவர்கள் நிலை குறித்து டிராய் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.#TRAI #Channel
    புதுடெல்லி:

    டி.டி.ஹெச். சேவையிலும், கேபிள் டி.வி. சேவையிலும் நாம் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, பார்வையாளர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்து, அதற்கு மட்டும் பணம் செலுத்தும் புதிய முறையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்தது.

    கடந்த மாத இறுதியிலேயே இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், பார்வையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்வகையில், இத்திட்டம் பிப்ரவரி 1-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த புதிய நடைமுறை, நாளை (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி அமலுக்கு வருகிறது. இத்தகவலை ‘டிராய்’ அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா நேற்று தெரிவித்தார்.

    டி.டி.ஹெச். நிறுவனங்களில் 6 மாதம், ஒரு வருடம் என நீண்ட கால ‘பேக்’குகள் உள்ளன. அவற்றுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தியவர்களின் நிலை என்ன ஆகும் என்பது பற்றியும் ஆர்.எஸ்.சர்மா விளக்கம் அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    புதிய நடைமுறை, திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ந் தேதி அமலுக்கு வரும். அதில் மாற்றம் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு எவ்வித அசவுகரியமும் இல்லாமல், சுமுகமாக இந்த நடைமுறை மாற்றம் நடந்தேறும் என்று நம்புகிறேன்.

    டி.டி.ஹெச். சேவையில் நீண்ட கால ‘பேக்’குகளை தேர்வு செய்து முன்கூட்டியே பணம் செலுத்தியவர்களுக்கு அவர்களது பணத்துக்கான உத்தரவாதத்தை டி.டி.ஹெச். நிறுவனங்கள் மதித்து நடக்க வேண்டும்.

    அவர்கள் பழைய முறையிலேயே நீடிக்க விரும்பினால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள், விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் பார்க்க விரும்பினால், அதற்குரிய பணத்தை மட்டும் வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து முறையாக கழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TRAI #Channel
    மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.டி.ஹெச். மற்றும் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை வெளியிட்டுள்ளது. #TRAI #Channel



    மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.டி.ஹெச். மற்றும் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. புதிய செயலியை கொண்டு பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து, அவற்றுக்கான கட்டணத்தை அறிந்துகொள்ள முடியும்.

    டிராய் உருவாக்கி இருக்கும் பிரத்யேக வலைதளத்தில் ஐந்து வழிமுறைகளை கடந்து, அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதோடு அவற்றுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ள முடியும். 

    புதிய வலைதளத்தில் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வசிக்கும் மாநிலம், விரும்பும் சேனல் வகை அதன் பின் திரையில் சேனல்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து மாதாந்திர கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். 



    விரும்பிய சேனல்களை தேர்வு செய்த பின் அதற்கான கட்டணத்தில் இலவச சேனல்கள், கட்டண சேனல்கள், கட்டண சேனல்களுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம், ஜி.எஸ்.டி. வரி மற்றும் டி.டி.ஹெச். சேவை வழங்கும் நிறுவனத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய நெட்வொர்க் கட்டணம் உள்ளிட்டவை தனித்தனியே பட்டியலிடப்பட்டிருக்கும். 

    இவற்றின் கீழ் மொத்தமாக மாதாந்திர அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை இடம்பெற்றிருக்கும். புதிய விதிமுறையின் படி இலவச சேனல்களை கட்டாயம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சேனல் செலக்டர் வலைதளத்தில் ஹெச்.டி. மற்றும் எஸ்.டி. சேனல்களை, சேனல் வகைகள், ஒளிபரப்பும் நிறுவனம் மற்றும் மொழி உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம்.

    புதிய விதிமுறைகளின் படி இலவச சேனல்களுக்கான கட்டணம் ரூ.130 (வரி உள்ளிட்டவற்றை சேர்த்து ரூ.153.40) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.
    ×