என் மலர்
நீங்கள் தேடியது "ஜியோ"
- அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.
- டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தனியார் தகவல் தொலைதொடர்பு நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல், வி.ஐ. உள்ளன. இந்தநிலையில் அடுத்த மாதமான டிசம்பாில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களுடைய செல்போன் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்தாண்டு ஜூலையில் விலை உயர்த்தப்பட்டிருந்தநிலையில் 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த காரணம்: 5G சேவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் தங்கள் வருவாயை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமல்படுத்தப்படும் தேதி: டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வு குறித்து கவலை தெரிவித்த நிலையில், இது அவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும்.
- மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் நிபுணர்களை அதிநவீன கருவிகளை பயன்படுத்தி நிபுணத்துவம் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஜெமினி ஏஐ ப்ரோ திட்டம் பிரீமியம் அம்சங்களின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுளுடன் இணைந்து நம்ப முடியாத சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயனர்களுக்கு 18 மாதங்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை பயன்படுத்த முடியும். இந்திய இளைஞர்களை ஏஐ சார்ந்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, கூகுளின் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சேவைகளை இலவசமாக அணுகக்கூடியதாக மாற்றுகிறது.
18 மாத காலத்தில் தோராயமாக ரூ. 35,100 மதிப்புள்ள ஜெமினி ஏஐ ப்ரோ சேவை, ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட பயனர் தளத்திற்கு (18 முதல் 25 ஆண்டுகள் வரை) விரிவுபடுத்தப்பட்டு பின்னர் நாடு தழுவிய அளவில் விரிவடையும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனம் பெர்ப்ளெக்ஸிட்டியுடன் இணைந்து ஒரு வருட இலவச பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சந்தாவை வழங்கிய நிலையில், தற்போது ஜியோ இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சலுகை விவரங்கள்
சலுகை - 18 மாத கூகிள் ஜெமினி AI ப்ரோ திட்டம் — இலவசம்
தொடக்க தேதி - 30 அக்டோபர் 2025
இலக்கு - 18 முதல் 25 வயதுடைய ஜியோ பயனர்கள்
தேவை - ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஜியோவின் அன்லிமிடெட் 5G திட்டங்களில் வாடிக்கையாளர்கள் (ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு)
சலுகையை பெறுவது எப்படி?
மைஜியோ செயலி வழியாக (முகப்புப் பக்கத்தின் மேலே உள்ள "இப்போது உரிமை கோருங்கள்" என்ற பேனரைப் பாருங்கள்)
இந்த சலுகை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் நிபுணர்களை அதிநவீன கருவிகளை பயன்படுத்தி நிபுணத்துவம் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெமினி ஏஐ ப்ரோ திட்டம் பிரீமியம் அம்சங்களின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.
ஜெமினி 2.5 ப்ரோ: சிக்கலான பகுத்தறிவு, குறியீட்டு முறை மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான ஏஐ மாடலை அணுகுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற முடியும்.
கிளவுட் ஸ்டோரேஜ்: கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயில் முழுவதும் 2TB வரை ஒருங்கிணைந்த கிளவுட் ஸ்டோரேஜை அனுபவிக்கலாம்.

மேம்பட்ட ஏஐ உள்ளடக்க உருவாக்கம்: ஊடகங்களை உருவாக்குவதற்கு சக்திவாய்ந்த மாடல்களைப் பயன்படுத்துங்கள். இதில் Veo 3.1, Nano Banana போன்ற மாடல்களைப் பயன்படுத்தி ஏஐ வீடியோ, புகைப்படங்கள் உருவாக்கலாம்.
கூகுள் பணியிடத்தில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன்: ஜிமெயில், டாக்ஸ் மற்றும் விட்ஸ் போன்ற பிரபலமான கூகுள் பயன்பாடுகளுடன் ஜெமினியை நேரடியாக ஒருங்கிணைத்து, மின்னஞ்சல்களை வரைதல், ஆவணங்களைச் சுருக்குதல் மற்றும் வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் உடனடி உதவியை வழங்குவதை அனுபவிக்க முடியும்.
ஏஐ கிரெடிட்: வளம் மிகுந்த பணிகளுக்குப் பயன்படுத்த மாதாந்திர 1,000 ஏஐ கிரெடிட்களைப் பெறலாம்.
- அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.
- பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.
இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2025 நிகழ்வில், ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபாரத் மொபைல் போன்களுக்கான புதிய சேஃப்டி-ஃபர்ஸ்ட் (Safety First) திறனை அறிமுகப்படுத்தியது. இது குடும்ப தகவல் தொடர்பை மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் ஜியோவின் மலிவு விலை 4ஜி தொலைபேசி தளத்திற்குள் ஸ்மார்ட் இணைப்பு மற்றும் டிஜிட்டல் பராமரிப்பை இணைத்து குடும்பங்கள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட உதவுகிறது.
ஜியோபாரத் சேஃப்டி ஃபர்ஸ்ட் தீர்வு, குடும்பங்கள் குழந்தைகள், வயதான பெற்றோர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்க எளிய, பாதுகாப்பான வழியை வழங்குகிறது, இவை அனைத்தும் அவர்கள் தூரத்திலிருந்து கூட. ஜியோ இந்த பாதுகாப்பு தொகுப்பை "பாதுகாப்பு கேடயம்" என்று குறிப்பிடுகிறது.
முக்கிய அம்சங்கள்:
இருப்பிட கண்காணிப்பு: அன்புக்குரியவரின் இருப்பிடம் குறித்த நிகழ்நேர அப்டேட்களை வழங்குகிறது.
யூசேஜ் மேனேஜர்: யார் அழைக்கலாம் அல்லது செய்தி அனுப்பலாம், தெரியாத எண்களைத் தடுக்கலாம் மற்றும் கவனச் சிதறல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தலாம்.
சேவை ஆரோக்கியம்: நிலையான இணைப்பை உறுதி செய்வதற்காக பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் வலிமை குறித்த நேரடி விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.
எப்போதும் கிடைக்கும்: அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குவதால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தடையற்ற அணுகலை உறுதி செய்கிறது.
இந்திய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது
குழந்தைகளுக்காக: அழைப்பு மற்றும் இருப்பிடக் கட்டுப்பாட்டுடன், சமூக ஊடக வெளிப்பாடு இல்லாமல் பாதுகாப்பான தகவல்தொடர்பை செயல்படுத்துகிறது.
வயதான பெற்றோருக்கு: மன உறுதிக்காக ஆரோக்கியம் மற்றும் லொகேஷன் அப்டேட்களுடன் கூடிய எளிய இன்டர்ஃபேஸ் வழங்குகிறது.
பெண்களுக்கு: பாதுகாப்பு மற்றும் இணைப்பை உறுதி செய்யும் நம்பகமான துணையாக செயல்படுகிறது.
IMC25 இல், ஜியோ இந்த அம்சங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் மன அமைதியை எவ்வாறு வழங்குகின்றன என்பதைக் காட்டும் நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளை நிரூபித்தது - ஒவ்வொரு இந்தியருக்கும் தொழில்நுட்பம் என்ற அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
ஜியோபாரத் சேஃப்டி-ஃபர்ஸ்ட் போன்கள் ரூ. 799 விலையில் கிடைக்கின்றன.
- தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.249 ரீசார்ஜ் இருந்தது.
- ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது ஜியோ, ஏர்டெல்-ன் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
ஜியோவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஏர்டெலும் குறைந்தபட்ச மாதாந்திர பேக்கை நிறுத்தியுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.249 மாதாந்திர பேக் திட்டத்தை ஏர்டெல் நீக்கியுள்ளது. இனிமேல் ரூ.299 (1.5GB/Day) குறைந்தபட்ச மாதாந்திர பேக்காக இருக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தினசரி 1ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் முடிவில் தலையிட இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இரு நிறுவனங்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.249 ரீசார்ஜ் இருந்தது.
- ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
இந்நிலையில், ஜியோவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஏர்டெலும் குறைந்தபட்ச மாதாந்திர பேக்கை நிறுத்தியுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.249 மாதாந்திர பேக் திட்டத்தை ஏர்டெல் நீக்கியுள்ளது. இனிமேல் ரூ.299 (1.5GB/Day) குறைந்தபட்ச மாதாந்திர பேக்காக இருக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
- தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ.249 ரீசார்ஜ் ஆகத்தான் இருந்தது.
- ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ.249 ரீசார்ஜ் ஆகத்தான் இருந்தது. இனிமேல் இது ரீசார்ஜ் செய்ய முடியாது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஜியோ நிறுவனம் 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
இருப்பினும் ஜியோவின் ரூ.249 திட்டத்தை விட மலிவான திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அதாவது ரூ.189, ரூ.198 மற்றும் ரூ.239 ஆகிய திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஆனால் இந்த திட்டங்கள் ரூ.249 திட்டத்தை விட கணிசமாக குறைவான வேலிடிட்டியை வழங்குகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் திடீரென நீக்கியது ஜியோ பயனார்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
- இலவச சலுகை இன்றுடன் (மார்ச் 31) முடியவுள்ளது.
- புதிய ரீசாஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை பயனர்களுக்காக ஜியோ வழங்கியிருந்தது. இந்தச் சலுகை இன்றுடன் (மார்ச் 31) முடியவுள்ளது.
இதனிடையே இந்தச் சலுகையை நீட்டிப்பது குறித்த எந்தவித அறிவிப்பையும் ஜியோ வெளியிடாததால், இன்றுடன் இச்சலுகை முடிகிறது.
ஜியோ சலுகை முடிந்த நிலையில், பயனர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் உள்ள வீடியோக்கள் மற்றும் ஐபிஎல் நேரலையைக் காண வேண்டுமென்றால், புதிய ரீசாஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில், ரூ. 949, ரூ. 195, மற்றும் ரூ. 100 ஆகிய திட்டங்களை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படும்.
ரூ,949 திட்டத்தில் ஐபிஎல் பார்ப்பது மட்டுமில்லாமல் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா உடன் இதில் ஹை ஸ்பீட் 4 G டேட்டா வழங்குகிறது. ஆகமொத்தம் இதில் 168 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதில் ஜியோ டிவி, JioCloud போன்ற நன்மைகள் வழங்குகிறது.
ரூ. 195 திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது. இந்த திட்டத்தில் 15 ஜிபி யின் மொத்தம் டேட்டா வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது. இதேபோல ரூ. 100 திட்டத்தில் 5ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டங்களிலும் 90 நாள்களுக்கு இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டாரை காணலாம்.
அதாவது, ஜியோ சிம்கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்தாலே அதனுடன் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை ஜியோ வழங்கியுள்ளது.
- தேசிய பாதுகாப்பு கோரும்போது இணைப்பை இயக்க அல்லது முடக்க யாருக்கு அதிகாரம் இருக்கும்?.
- அது ஸ்டார்லிங்காக இருக்குமா அல்லது அதன் இந்திய கூட்டாளிகளாக இருக்குமா?.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவிரைவு இணைய சேவை வழங்கி வருகிறது. நகரம் மற்றும் கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள குக்கிராமங்களில் கூட ஸ்டார்லிங்கால் இணைய சேவை வழங்க முடியும்.
இந்தியாவில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் நெட்வொர்க் சேவையில் முன்னணியாக திகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில்தான் அதிகவேக இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் உடன் ஏர்டெல் மற்றும் ஜியோ ஒப்பந்தம் செய்துள்ளன. மத்திய அரசு அனுமதி கிடைத்த உடன் ஸ்டார்லிங்க் இந்தியாவில் கால்பதிக்கும்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் நல்லெண்ணத்தை பெற பிரதமர் மோடியால் கூட்டாண்மை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் விமரம்சித்துள்ளது.
ஸ்டார்லிங்கின் உரிமையாளர் எலான் மஸ்க் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் நல்லெண்ணத்தை பெற இந்த கூட்டாண்மைகள் பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், "இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் உள்ளன. ஒருவேளை மிக முக்கியமான ஒன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். தேசிய பாதுகாப்பு கோரும்போது இணைப்பை இயக்க அல்லது முடக்க யாருக்கு அதிகாரம் இருக்கும்?. அது ஸ்டார்லிங்காக இருக்குமா அல்லது அதன் இந்திய கூட்டாளிகளாக இருக்குமா?. செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைப்பு வழங்கும் மற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படுமா?. அப்படி என்றால் எந்த அடிப்படையில்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்கும்.
- மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதை ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிக்கை மூலம் அறிவித்தது.
"இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது. ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்வோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏர்டெல்லை தொடர்ந்து அதன் போட்டியாளரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஷடார்லிங்க் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களை ஸ்பேஸ்எக்ஸ் பெறுவதற்கு உட்பட்டது இந்த ஒப்பந்தம்.
ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ், ஜியோவின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார்லிங்க் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், ஸ்டார்லிங்க் சேவைகளை நேரடியாக நுகர்வோர் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டுக்கு கொண்டுசேர்க்க முடியும் என்பதையும் ஆராய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு சேவையை நிறுவித் தந்து அதனை செயல்படுத்துவதை உறுதி செய்ய ஒரு கட்டமைப்பு நிறுவப்படும்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு நம்பகமான இணையம் முழுமையாக அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஜியோவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஸ்பேஸ்எக்ஸ் உடனான ஒப்பந்தம் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல், ஜியோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
- நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கப்பட்டு விட்டதாக நிறுவனங்கள் தினந்தோரும் அறிவித்து வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பூனேவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறது. இந்த பகுதியில் 5ஜி சேவை வழங்கிய முதல் நிறுவனம் ஜியோ தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்டாண்ட்அலோன் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் மட்டுமே ட்ரூ 5ஜி நெட்வொர்க்கில் பீட்டா டெஸ்டிங் துவங்கப்படுகிறது என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
முன்னதாக டெல்லி-NCR பகுதிகளான- டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன. இவை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரனாசி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கடந்த மாதம் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன.

பூனே அதிக மாணவர்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதோடு முன்னணி தகவல் தொழில்நுட்ப பகுதியாகவும் விளங்குகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியின் பெரும்பாலான பகுதிகள் பூனே சுற்றுவட்டார பகுதிகளிலேயே நடைபெறுகிறது. அந்த வகையில், ஜியோ 5ஜி வெளியீடு இந்த பகுதிவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சேவைகள் வழங்கப்பட்டதை அடுத்து பூனேவில் வசிக்கும் ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு இன்வைட் செய்யப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 1Gbps+ வேகத்தில் மொபைல் டேட்டா பயன்படுத்த முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புது சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புது சலுகையின் விலை ரூ. 749 ஆகும். இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகையில் மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஜியோ ரூ. 719 சலுகையும் இதே போன்ற பலன்களை வழங்கி வருகிறது. எனினும், இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இவை தவிர ரூ. 249 - 23 நாட்கள், ரூ. 299 - 28 நாட்கள், ரூ. 533 - 56 நாட்கள், ரூ. 2 ஆயிரத்து 879 - 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் அனைத்திலும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

மற்ற சலுகைகளை போன்றே புது சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் என ஏராளமான ஜியோ சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. புது சலுகை மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. எனினும், இந்த சலுகை ரூ. 239 அல்லது அதற்கும் அதிக சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய ரூ. 749 விலை சலுகை ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், மைஜியோ செயலி உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது. இதுதவிர மூன்றாம் தரப்பு செக்பாயிண்ட்களிலும் இந்த சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் புது சலுகையை அறிவித்து இருக்கிறது.
- புதிய ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 630 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
2023 புத்தாண்டை கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2023 விலையில் புது சலுகையை அறிவித்து இருக்கிறது. புத்தாண்டை குறிக்கும் ரூ. 2023 விலையில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ரூ. 2023 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா 252 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.
பலன்களை பொருத்தவரை புதிய ரூ. 2023 விலை சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா (மொத்தத்தில் 630 ஜிபி), தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

மற்றொரு சிறப்பு சலுகையாக ஜியோ ஏற்கனவே வழங்கி வரும் ரூ. 2999 விலை சலுகையின் வேலிடிட்டியை 23 நாட்கள் நீட்டித்து இருக்கிறது. அதன்படி ரூ. 2999 விலையில் கிடைக்கும் ஜியோ சலுகையில் தற்போது 388 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 912.5 ஜிபி டேட்டா (தினமும் 2.5 ஜிபி), 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு அன்லிமிடெட் 5 ஜி டேட்டா வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. இதற்கு பயனர்கள் குறைந்த பட்சம் ரூ. 239 விலை சலுகை அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.






