என் மலர்
நீங்கள் தேடியது "செல்போன் ரீசார்ஜ்"
- அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.
- டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தனியார் தகவல் தொலைதொடர்பு நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல், வி.ஐ. உள்ளன. இந்தநிலையில் அடுத்த மாதமான டிசம்பாில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களுடைய செல்போன் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்தாண்டு ஜூலையில் விலை உயர்த்தப்பட்டிருந்தநிலையில் 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த காரணம்: 5G சேவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் தங்கள் வருவாயை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமல்படுத்தப்படும் தேதி: டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வு குறித்து கவலை தெரிவித்த நிலையில், இது அவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும்.
- அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது.
- குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம்.
நரேந்திர மோடி 'இலவச ரீசார்ஜ் திட்டம்' பற்றிய தகவல்கள் தவறானவை என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.
"SaoudKiTech" என்ற யூடியூப் சேனலில் பரவும் ஒரு வீடியோ, இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மொபைல் பயனர்களும் ஒரு வருட இலவச ரீசார்ஜ் பெறுவார்கள் என்று தெரிவிக்கிறது. இந்த கூற்று முற்றிலும் போலியானது என்பதை பத்திரிகை தகவல் பணியகம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது.
அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது. கூடுதலாக, மத்திய அரசுத் திட்டங்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செய்திகள், படங்கள் அல்லது வீடியோக்களை எக்ஸ் வழியாகவோ அல்லது +918799711259 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ நேரடியாக பத்திரிகை தகவல் பணியகத்துக்கு புகார் அளிக்கலாம்.
குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம் என்றும், சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை ஆன்லைனில் பகிர வேண்டாம் என்றும் பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்தி உள்ளது.
- செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.
மாதாந்திர ப்ளான், இரு மாதம், மும்மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணங்களை உயர்த்தி ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அவற்றில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.
அதன்படி, செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189ஆகவும், 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349ஆகவும், ரூ.399 என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டம், வரும் ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன எனவும் ஜியோ அறிவித்துள்ளது.
- நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
- அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஏர்டெல் பிரீபெயிட் மாதாந்திர சலுகை, இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் மற்றும் ஓராண்டு வேலிடிட்டி வழஹ்கும் பிரீபெயிட் சலுகைகளின் கட்டணங்களை ஏர்டெல் உயர்த்துகிறது. அடுத்த வாரம் புதிய விலை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.
இதேபோல், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களின்படி மாதாந்திர கட்டணம் அதிகரிப்பதைக் காண முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 179-ல் இருந்து ரூ. 199-ஆக உயர்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 455-ல் இருந்து ரூ. 509 ஆக உயர்கிறது. அதிகபட்சமாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்ந்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
| பழைய விலை | புதிய விலை | டேட்டா | செல்லுபடியாகும் காலம் (நாட்கள்) |
| 179 | 199 | 2ஜிபி | 28 |
| 455 | 509 | 6ஜிபி | 84 |
| 1799 | 1999 | 24 ஜிபி | 365 |
| 265 | 299 | ஒரு நாளைக்கு 1ஜிபி | 28 |
| 299 | 349 | ஒரு நாளைக்கு 1.5 ஜிபி | 28 |
| 359 | 409 | ஒரு நாளைக்கு 2.5 ஜிபி | 28 |
| 399 | 449 | ஒரு நாளைக்கு 3 ஜிபி | 28 |
| 479 | 579 | ஒரு நாளைக்கு 1.5 ஜிபி | 56 |
| 549 | 649 | ஒரு நாளைக்கு 2 ஜிபி | 56 |
| 719 | 859 | ஒரு நாளைக்கு 1.5 ஜிபி | 84 |
| 839 | 979 | ஒரு நாளைக்கு 2 ஜிபி | 84 |
| 2999 | 3599 | ஒரு நாளைக்கு 2ஜிபி | 365 |
- ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது.
- இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB) ரூ. 349 -ஆக உயர்கிறது.
365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.







