என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fact check"

    • அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது.
    • குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம்.

    நரேந்திர மோடி 'இலவச ரீசார்ஜ் திட்டம்' பற்றிய தகவல்கள் தவறானவை என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.

    "SaoudKiTech" என்ற யூடியூப் சேனலில் பரவும் ஒரு வீடியோ, இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மொபைல் பயனர்களும் ஒரு வருட இலவச ரீசார்ஜ் பெறுவார்கள் என்று தெரிவிக்கிறது. இந்த கூற்று முற்றிலும் போலியானது என்பதை பத்திரிகை தகவல் பணியகம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது.

    அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது. கூடுதலாக, மத்திய அரசுத் திட்டங்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செய்திகள், படங்கள் அல்லது வீடியோக்களை எக்ஸ் வழியாகவோ அல்லது +918799711259 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ நேரடியாக பத்திரிகை தகவல் பணியகத்துக்கு புகார் அளிக்கலாம்.

    குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம் என்றும், சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை ஆன்லைனில் பகிர வேண்டாம் என்றும் பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்தி உள்ளது.

    • 2024ஆம் அண்டு 21,404 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன.
    • இதில் 583 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    பிஐபி-யின் (Press Information Bureau) உண்மை கண்டறியும் பிரிவு கடந்த 2025ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 19ஆம் தேதி வரை போலி செய்திகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவலை வெளியிடுதல் தொடர்பாக 1575 செய்திகளை கண்டறிந்துள்ளதாக மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை மந்திரி அஷ்வினி விஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

    2022ஆம் ஆண்டு 25,626 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 8,107 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 338 செய்திகள் போலியானது என கண்டறியப்பட்டது.

    2023ஆம் அண்டு 20,684 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,623 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 557 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    2024ஆம் அண்டு 21,404 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன. இதில் 6,320 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 583 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    தற்போது மார்ச் 19ஆம் தேதி வரை 6,320 செய்திகள் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்றன இதில் 1,811 செய்திகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடியது என கண்டறியப்பட்டது. இதில் 97 போலிச் செய்திகள் என கண்டறியப்பட்டது.

    • வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவி வரும் குறுந்தகவலில் மத்திய அரசு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    • வைரல் குறுந்தகவல் பற்றி PIB தமிழ்நாடு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதள பயன்பாடு பெருமளவு அதிகரித்து விட்டதை போன்றே இதன் மூலம் ஏற்படும் அபாயங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமூக வலைதளங்களில் வலம்வரும் போலி செய்திகள் மக்களை ஏமாற்றுவதோடு அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடவும் செய்கின்றன.

    அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவி வரும் குறுந்தகவல் ஒன்றில், "மத்திய அரசு இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ. 239-க்கு இலவச ரிசார்ஜ் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் இலவச ரீசார்ஜ் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், "நான் எனக்கான 28 நாட்கள் இலவச ரீசார்ஜ்-ஐ பெற்றுக் கொண்டேன், நீங்களும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜை கீழே உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 30," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறுந்தகவலை யாரும் நம்ப வேண்டாம் என PIB தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசு இவ்வாறு எந்த விதமான இலவச ரீசார்ஜ் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரிவித்து இருக்கிறது. 

    • இணைய முகவரியை கிளிக் செய்யும் பட்சத்தில் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.
    • இணைய முகவரியில் உள்ள வலைதளம் பார்க்க பஞ்சாப் நேஷனல் வங்கி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது.

    பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) சார்பில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறும் தகவல் வாட்ஸ்அப்-இல் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆண்டு விழா கொண்டாட்டங்களின் அங்கமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

    வைரல் தகவலில் உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யும் பட்சத்தில் பயனர்கள் தங்களின் டேட்டா, பணம் அல்லது மிகமுக்கிய தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும். பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ சார்பில் வைரல் தகவலில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    வாட்ஸ்அப் குறுந்தகவல் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், அதில் துளியும் உண்மையில்லை. முற்றிலும் புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி விளம்பர யுக்தியின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ. 6 ஆயிரம் வரை வென்றிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 130-வது ஆண்டு விழாவை கொண்டாடுவதால், அரசாங்கம் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பபட்டுள்ளது.

    இந்த தகவலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இணைய முகவரியில் உள்ள வலைதளம் பார்க்க பஞ்சாப் நேஷனல் வங்கி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், பயனர் போலி இணைய முகவரியை க்ளிக் செய்யும் பட்சத்தில் பணம், தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப்-இல் நீங்கள் சேமிக்காத எண்ணில் இருந்து வரும் குறுந்தகவல்களை பிளாக் மற்றும் ரிப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றை பிளாக் செய்யும் பட்சத்தில் இதுபோன்ற குறுந்தகவல்கள் இதே எண்ணில் இருந்து மீண்டும் வராது.

    • செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் உண்மையில் பாகிஸ்தானில் எடுக்கப்படவில்லை.
    • இந்த சம்பவம் பற்றிய உண்மை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு கொள்வதால், பெற்றோர் இவ்வாறு செய்வதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியாகி வந்த நிலையில், இந்த சம்பவம் பற்றிய உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு மற்றும் எழுத்தாளர் ஹாரிஸ் சுல்தான் பதிவிட்ட டுவிட்டர் பதிவுகளின் அடிப்படையில் தான் இந்த செய்திகள் வெளியாக துவங்கின. இது பற்றிய செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் உண்மையில் பாகிஸ்தானில் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக வைரலான கல்லறை புகைப்படம் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் ஐதராபாத்தில் கல்லறைகளை தோண்டியெடுத்து, அதே இடத்தில் மற்றவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதை தடுக்கவே கல்லறைகளில் பூட்டு போடப்பட்டுள்ளன.

    இதுதவிர வைரல் புகைப்படத்தில் இருந்த கல்லறை நுழைவு வாயில் அருகிலேயே இருப்பதால், மற்றவர்கள் இதன் மீது ஏறுவதை தடுக்கும் வகையில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் மகன் இவ்வாறு செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக வெளியான மற்றொரு செய்தியில் பாகிஸ்தான் நாட்டில் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் சம்பவம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கராச்சியை அடுத்த வடக்கு நசிம்பாத்தில் நபர் ஒருவர் 48 பெண் சடலங்களுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். 

    • மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
    • மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழ்நாட்டில் மின்சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    அதாவது குளிர்தான பெட்டி (ஃப்ரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), வாட்டர் ஹீட்டர் போன்று அதிக மின்சாரம் பயன்படுத்தும் மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

    தமிழ் நாட்டில் மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சாதன பொருட்கள் பயன்படுத்தும் வீடுகளில் தேவைக்கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இது போன்ற தேவைக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி இருக்கிறது.

    • சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
    • இந்த தகவல் தேர்வு முடிவுக்காக காத்திருப்போர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    சிபிஎஸ்இ மாணவர்கலுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நாளை (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

     

    இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியானதை அடுத்து சிபிஎஸ்இ சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறி வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையும் போலியானது என்று தெரிவித்துள்ளது.

    சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து வெளியான போலி தகவல் காரணமாக தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    • இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து பி.ஐ.பி எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது.

    பாரத ஸ்டேட் வங்கி பயனர்களின் அக்கவுண்ட் முடக்கப்பட்டு விட்டதாக கூறும் குறுந்தகவல் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய பரிமாற்றம் நடைபெற்றதால், வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    அதனை க்ளிக் செய்யும் போது திறக்கும் மற்றொரு வலைதளம் பயனர்களிடம் சில வழிமுறைகளை பின்பற்றி அக்கவுண்ட்-ஐ அன்லாக் செய்யக் கோருகிறது. இந்த தகவல் ஏராளமானோருக்கு பரவி வருவதை அடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் (பி.ஐ.பி) எச்சரிக்கை தகவல் விடுத்துள்ளது. மேலும் அந்த தகவல் போலியான ஒன்று என தெரிவித்து இருக்கிறது.

     

    "எஸ்பிஐ சார்பில் அனுப்பப்பட்டதாக கூறும் குறுந்தகவல், பயனரின் அக்கவுண்ட் தற்காலிகமாக லாக் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபோன்று வங்கி கணக்கு விவரங்களை கேட்கும் மின்னஞ்சல் / எஸ்எம்எஸ்-களுக்கு பதில் அனுப்ப வேண்டாம். இது போன்ற குறுந்தகவல்களை உடனடியாக report.phishing@sbi.co.in முகவரியில் தெரிவிக்க வேண்டும்," என்று பிஐபி டுவிட்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது போன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது உங்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கான வசதியை ஹேக்கர்கள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போகவும், தனிப்பட்ட விவரங்களை இழக்கவும் நேரிடும். இதுபோன்ற வலைதள முகவரிகளை க்ளிக் செய்யும் போது, ஹேக்கர் உங்களது அக்கவுண்டை இயக்குவதற்கான வசதியை பெற்றிடுவர். 

    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
    • சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல்.

    கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும் சித்தராமையா நடனம் ஆடுவதில் விருப்பம் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் சித்தராமையா மைசூருவில் உள்ள தனது கிராமத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் திருவிழாவில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, சித்தராமையா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 38 நொடிகள் ஓடும் வீடியோவில் நடனம் ஆடும் நபர் பார்க்க சித்தராமையா போன்றே காட்சியளிக்கிறார்.

    பிரபல கன்னடா மொழி பாடலுக்கு நடனம் ஆடும் நபரை, அங்கு கூடியிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர். இதுபற்றிய இணைய தேடல்களில், வீடியோவில் நடனம் ஆடிய நபர் கர்நாடக முதல்வர் சித்தராமையா இல்லை என்று தெரியவந்துள்ளது. இதே வீடியோ கடந்த 2018 ஆண்டிலும் வைரல் ஆனதும் தெரியவந்துள்ளது. 

    • விமானத்தில் சென்ற டோனி, கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
    • இதனால் டுவிட்டரில் கேண்டி க்ரஷ் கேம் இன்று காலையில் இருந்து டிரெண்ட் ஆனது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனியின் வீடியோ ஒன்று நேற்று வைரலானது. அதில் அவர் விமானத்தில் பயணம் செய்த போது அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த ஒருவர் டோனிக்கு பரிசு கொடுப்பது போன்று இருந்தது. இந்த வீடியோ நேற்றில் இருந்து வைரலானது.

    அந்த வீடியோவில் டோனி, கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் டுவிட்டரில் கேண்டி க்ரஷ் கேம் இன்று காலையில் இருந்து டிரெண்ட் ஆனது.

    இந்நிலையில் 3 மணி நேரத்தில் 3 மில்லியன் வரை இந்த கேம் டவுன்லோட் ஆனதாக தகவல் வெளியானது. கேண்டி க்ரஷ் கேம் என்ற பெயரிலான டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியான அந்த தகவலில், டோனிக்கு நன்றி தெரிவிக்கபட்டிருந்தது. ஆனால் அந்த டுவிட்டர் கணக்கு கேண்டி கிரஷ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்குதானா? என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே, கேண்டி க்ரஷ் அந்த அளவுக்கு டவுன்லோடு ஆனதா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    எனினும், டோனியின் பெயருடன் இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

    • நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. விசாரணையில், அந்தச் சிலை போலி என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், விராட் கோலியின் உருவச் சிலை டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்படவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நன்றாக விளையாடக் கோரி சிலை அமைத்துள்ளோம் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோவில் விராட் கோலியின் நல்ல உறக்கத்துக்கு டுயூரோபிளக்ஸ் மெத்தை என விளம்பரமும் செய்திருந்தது.

    கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் விராட் கோலியின் சிலை உருவாக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
    • காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்தக் கொடூர சம்பவத்தை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவுக்கும் ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    சமூக வலைதளங்களில் பரவும் இந்த வைரல் வீடியோ, உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள கோவிலில் இருந்து மார்ச் 17-ம் தேதி அன்று ஹோலிக்கு முந்தைய நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலைக் காட்டுகிறது. இதில் 6 பேர் சுயநினைவை இழந்து காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    எனவே, சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் சம்பவத்தை காட்டும் வீடியோ போலி என தெரிய வந்துள்ளது.

    ×