என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WhatsApp"

    • அரசு உருவாக்கி உள்ள மேக்ஸ் என்ற சூப்பர் ஆப்-ஐ மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சி.
    • உள்நாட்டு சமூக வலைதளங்களை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை.

    ரஷியாவில் வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் டெலிகிராம் செயலியும் முடக்கப்பட்டுள்ளது. ரஷிய அரசு உருவாக்கி உள்ள மேக்ஸ் என்ற சூப்பர் ஆப்-ஐ மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷியாவில் வாட்ஸ்அப் செயலியை முழுமையாக முடக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளதாக தெரிகிறது.

    மேலும் டெலிகிராம் செயலிக்கு ரஷிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ரோஸ்கோம் நாட்சோர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரஷிய சட்டங்களுக்கு புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான தகவல்களை பகிர மறுப்பது ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் வீசாட் போன்று உருவாக்கப்பட்ட மேக்ஸ் செயலி மூலம் அரசாங்க சேவைகளையும் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷிய அரசின் இந்த நடவடிக்கைக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப்-ஐ ரஷியாவில் முழுமையாக தடுக்க அந்நாட்டு அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். உள்நாட்டு தளங்களை ஊக்குவிப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பயனர்களை அரசுக்குச் சொந்தமான கண்காணிப்பு செயலிக்கு நகர்த்த இந்த தடை முயற்சி செய்யப்படுகிறது. இது 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை தனிமைப்படுத்தும். மக்களுக்கான பாதுகாப்பைக் குறைக்கும். பாதுகாப்பான தகவல்களில் இருந்து மக்களைப் பிரிக்கும் பிற்போக்கு செயலாகும். பயனர்களை தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என்றார்.

    ரஷியாவின் இந்த நடவடிக்கையை டெலிகிராம் நிறுவனர் பவெல் துரோவ் கடுமையாக விமர்சித்து உள்ளார். இதற்கிடையே ரஷிய அரசின் மேக்ஸ் செயலி மக்களை கண்காணிப்பதற்காக கொண்டுவரப்பட்ட செயலி ஆகும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    • நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் குற்றம் சாட்டியது.
    • மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

    பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

    கடந்த 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை, பேஸ்புக்கிடம் கொடுத்து சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியது.

    இதனால் மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக மெட்டா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், "நுகர்வோர் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் நுகர்வோரின் தனியுரிமையுடன் நீங்கள் எப்படி விளையாட முடியும்.

    தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும். எங்கள் நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது எங்கள் தரவின் ஒரு இலக்கத்தை கூட நீங்கள் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் மேலும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் உங்கள் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து இந்த வழக்கில் பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    • கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சனை நடந்தபடியே இருந்திருக்கிறது.
    • இறுதிச் சடங்கில் கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூந்துறை ஆரியன்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி சஜிதா(வயது54). இவர்களது மகள் கிரேஷ்மா(30).

    கிரேஷ்மாவுக்கும், பழஞ்சிரா பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டபடி இருந்துள்ளது.

    இதனால் திருமணமான 29 நாட்களிலேயே கணவன்-மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். கிரேஷ்மா தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிட்டார். அவரது கணவர் உன்னி கிருஷ்ணன் வெளிநாட்டில் வேலைபார்த்ததால், அவர் அங்கு சென்றுவிட்டார்.

    கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சனை நடந்தபடியே இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரேஷ்மாவின் தந்தை ராஜீவ் இதயக்கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

    அதன்பிறகு அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். மகளை, அவரது கணவருடன் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று சஜிதா விரும்பினார். இந்தநிலையில் உன்னி கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில் கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

    அங்கு வந்திருந்த உன்னிகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் இருவரும் பேசியுள்ளனர். அப்போது கிரேஷ்மா மற்றும் அவரது தாயை, உன்னிகிருஷ்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதனைக்கேட்டு கிரேஷ்மாவின் தாய் சஜிதா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.

    இதனால் துக்க வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தியதால் சிறிது நேரத்திற்கு பிறகு சஜிதா விழித்தெழுந்தார். அதன்பிறகு தாய்-மகள் இருவரும் தங்களின் வீட்டுக்கு வந்துவிட்டனர். துக்க வீட்டில் உன்னி கிருஷ்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியது கிரேஷ்மா மற்றும் அவரது தாய்க்கு மனவேதனையை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

    இதனால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து கிரேஷ்மா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தங்களின் குடும்ப வாட்ஸ்-அப் குழுவில் தகவல் பதிவிட்டனர்.

    மேலும் தங்களின் சாவுக்கு காரணம் உன்னி கிருஷ்ணன் தான் எனவும், அவர் கிரேஷ்மாவை துன்புறுத்தியதன் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர், சஜிதாவின் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது அங்கு தாய்-மகள் இருவரும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பூந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவனந்தபுரம் மருத்துக்வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். கிரேஷ்மாவின் கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக வழக்கு பதிந்து தொடர்ந்து வசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கிரேஷ்மாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துகின்றனர். 

    • அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம்.
    • மீறினால் போலீசார் நோட்டீசு அனுப்புவதோடு, தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தொழில்நுட்ப வளர்ச்சியால் வாட்ஸ்அப் செயலியை தங்களது செல்போன்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு விடுக்கும் தகவல் தொடர்பு விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

    அதில், வாட்ஸ்அப்பில் செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் கண்காணிக்கப்படும். ஒவ்வொருவரின் செல்போன் எண்களும், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தோடு இணைக்கப்படும். எனவே அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம். அதை மீறினால் போலீசார் நோட்டீசு அனுப்புவதோடு, தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது தவறான தகவல். மத்திய அரசு இதுபோன்ற ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை" என்று கூறப்பட்டு உள்ளது.

    • சைபர் குற்றவாளிகளை கட்டுப்படுத்தவே இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
    • வாட்சப் வெப் இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே Logout ஆகும்

    மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    இந்த விதிமுறை இது டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

    மொபைலில் உள்ள சிம் கார்டு, அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட செயலி உறுதி செய்ய வேண்டும் என்றும் அதேபோல வாட்ஸ் அப் வெப் இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே Logout ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயலற்ற சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகளை கட்டுப்படுத்தவே இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை.
    • பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    பெண் மருத்துவர் ஒருவர் தனது வாட்ஸ்-அப் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை எனவும் அதற்கு பதிலாக நமது உள்நாட்டு தயாரிப்பான Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்தும்படியும் பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் வாட்ஸ்-அப் பயனாளர்களும் சற்று யோசிக்க தொடங்கியுள்ளனர்.

    • அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தனிப்பட்ட தரவை பாதுகாக்கும் தொழில்நுட்ப அம்சமாகும்.

    வாட்சப் செயலுக்கு மாற்றாக ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி என்பதால் பலரும் அரட்டை செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அரட்டை செயலியில் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்று இணையத்தில் கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த அளித்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "எங்கள் முழு வணிகமும் நாங்கள் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டோம் மற்றும் அவர்களின் தரவை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். அது விரைவில் வரப்போகிறது. அனால் அதைவிட நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது. மேலும் உலக சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம்.

    எல்லா இடங்களிலும் எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையையும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அதற்கு அடுத்த பதிவில், "எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இப்போது சோதனையில் உள்ளது. நாங்கள் அதை நவம்பரில் வெளியிடப் போகிறோம்" என்று தெரிவித்தார்.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இல்லாதது மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அரட்டை செயலி செயல்படுகிறது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

    • இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.
    • இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டது.

    ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டது.

    அரசாங்க தகவல்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    இதன் மூலம், பென் டிரைவ்களை இனி அரசாங்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களை வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடக தளங்களில் பகிரக்கூடாது.

    பதிலாக தரவு பகிர்வுக்கு கிளவுட் அடிப்படையிலான GovDrive தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.

    மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீரில் மின் துறை தொடர்பான பல அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    முன்னதாக மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார், இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • வாட்ஸ் ஆப் மூலம் அரசின் 50 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
    • இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சென்னை:

    வாட்ஸ் ஆப் மூலம் அரசின் 50 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் 50 அத்தியாவசிய அரசு சேவைகளை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் 'வாட்ஸ்-அப்' மூலம் பெறலாம்.

    • ஆவணத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டவுடன், வாட்ஸ்அப் ஒரு PDF-ஐ உருவாக்கும்.
    • இன்ஸ்டால் செய்யப்பட்ட கூகுள் டிரைவ் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் அம்சத்தை தனது செயலியில் அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியின் ஐஓஎஸ் வெர்ஷனில் கிடைக்கிறது. மேலும் இது செயலியில் இருந்து வெளியேறாமல் ஒரு ஆவணத்தை ஸ்கேன் செய்து, அவற்றை மற்ற பயனர்களுக்கு மீடியா இணைப்பாக அனுப்ப அனுமதிக்கிறது.

    கடந்த வாரம், வாட்ஸ்அப் ஒரு புதிய ஏஐ அம்சத்தை சோதிக்கத் தொடங்கியது, இது ஆண்ட்ராய்டில் சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சாட்களில் ஏஐ சார்ந்து இயங்கும் செய்தி சுருக்கங்களை பார்க்க அனுமதிக்கிறது.



    ஐஓஎஸ் வெர்ஷனுக்கான வாட்ஸ்அப் செயலியில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.25.18.29 பீட்டாவிற்குப் புதுப்பித்த பிறகு, இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்து இருக்கிறது. இருப்பினும், இந்த அம்சம் இன்னும் உருவாக்கத்தில் உள்ளது. மேலும் பீட்டா சேனலில் இன்னும் இயக்கப்படவில்லை.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின் படி, வாட்ஸ்அப்பில் ஆவணங்கள் இணைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஆவணங்களை பிரவுஸ் செய்வது மற்றும் கேலரியில் இருந்து தேர்வு செய்யக்கோரும் ஆப்ஷனின் கீழ் தோன்றும் புதிய ஸ்கேன் செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது.

    வாட்ஸ்அப் ஐஓஎஸ் வெர்ஷனில் உள்ள இந்த அம்சத்தின் அடிப்படையில், ஸ்கேன் ஆப்ஷன் ஐகானை தட்டும்போது இந்த அம்சம் கேமராவைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் படங்களை கைமுறையாகப் பிடிக்க தேர்வு செய்யலாம் அல்லது ஒரு ஆவணத்தைக் கண்டறியும்போது செயலி தானாகவே படங்களைப் பிடிக்க அனுமதிக்கலாம்.




    ஆவணத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டவுடன், வாட்ஸ்அப் ஒரு PDF-ஐ உருவாக்கும், அதை வேறொரு பயனருக்கு அனுப்பலாம் அல்லது உங்களுக்கே கூட அனுப்பிக் கொள்ளலாம். இந்த PDF-ஐ ஸ்மார்ட்போனில் கூட சேமிக்கலாம்.

    வாட்ஸ்அப் அதன் ஸ்கேன் டாக்யூமென்ட்ஸ் அம்சத்தை உங்கள் ஸ்மார்ட்போனில் கொண்டு வரும் வரை, பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட கூகுள் டிரைவ் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    செயலியிலின் ஸ்டான்டர்டு வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, ஸ்கேன் டாக்யூமென்ட்ஸ் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கான வாட்ஸ்அப் வெர்ஷனில் வெளியிடப்படும்.

    • பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.

    பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 27 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.

    இதனிடையே போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

    இந்நிலையில், இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை அளிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் விளங்குகிறது.
    • இந்தியா மட்டுமின்றி உலகளவில் வாட்ஸ்அப் சேவை நீண்ட நேரம் முடங்கிய சம்பவம் அரங்கேறியது.

    இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை நேற்று (அக்டோபர் 25) மதியம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் செயல்பாட்டு வந்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கி போனது. இந்த செயலி சுமார் இரண்டு மணி நேரம் முடங்கி போனது.

    வாட்ஸ்அப் வரலாற்றில் இத்தனை மணி நேரம் செயலி முடங்கியது இதுவே முதல் முறை ஆகும். சேவை முடங்கியதால் பயனர்களால் புகைப்படம், வீடியோ, குறுந்தகவல் உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப்-இல் அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து டவுன்டிடெக்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நாடு முழுக்க சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் சேவையை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    திடீரென முடங்கிய நிலையில், வாட்ஸ்அப் சேவைகள் மதியம் 2 மணி அளவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. எனினும், செயலியில் அவ்வப்போது சில இடர்பாடுகள் ஏற்பட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்தே வாட்ஸ்அப் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

    முந்தைய தகவல்களில் வாட்ஸ்அப் சர்வெர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேவை முடங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. எனினும், வாட்ஸ்அப் சேவை தொழில்நுட்ப குறைபாடு காரணமாக முடங்கியது என மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×