என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WhatsApp"

    • சைபர் குற்றவாளிகளை கட்டுப்படுத்தவே இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
    • வாட்சப் வெப் இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே Logout ஆகும்

    மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    இந்த விதிமுறை இது டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

    மொபைலில் உள்ள சிம் கார்டு, அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட செயலி உறுதி செய்ய வேண்டும் என்றும் அதேபோல வாட்ஸ் அப் வெப் இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே Logout ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயலற்ற சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகளை கட்டுப்படுத்தவே இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை.
    • பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    பெண் மருத்துவர் ஒருவர் தனது வாட்ஸ்-அப் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை எனவும் அதற்கு பதிலாக நமது உள்நாட்டு தயாரிப்பான Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்தும்படியும் பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் வாட்ஸ்-அப் பயனாளர்களும் சற்று யோசிக்க தொடங்கியுள்ளனர்.

    • அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தனிப்பட்ட தரவை பாதுகாக்கும் தொழில்நுட்ப அம்சமாகும்.

    வாட்சப் செயலுக்கு மாற்றாக ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி என்பதால் பலரும் அரட்டை செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அரட்டை செயலியில் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்று இணையத்தில் கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த அளித்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "எங்கள் முழு வணிகமும் நாங்கள் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டோம் மற்றும் அவர்களின் தரவை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். அது விரைவில் வரப்போகிறது. அனால் அதைவிட நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது. மேலும் உலக சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம்.

    எல்லா இடங்களிலும் எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையையும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அதற்கு அடுத்த பதிவில், "எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இப்போது சோதனையில் உள்ளது. நாங்கள் அதை நவம்பரில் வெளியிடப் போகிறோம்" என்று தெரிவித்தார்.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இல்லாதது மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அரட்டை செயலி செயல்படுகிறது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

    • இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.
    • இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டது.

    ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் பென் டிரைவ்கள் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டது.

    அரசாங்க தகவல்களைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    இதன் மூலம், பென் டிரைவ்களை இனி அரசாங்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களை வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடக தளங்களில் பகிரக்கூடாது.

    பதிலாக தரவு பகிர்வுக்கு கிளவுட் அடிப்படையிலான GovDrive தளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.

    மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீரில் மின் துறை தொடர்பான பல அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் சைபர் தாக்குதல்களுக்கு ஆளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    முன்னதாக மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார், இந்தியா முழுவதும் மின்சாரத் துறை சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • வாட்ஸ் ஆப் மூலம் அரசின் 50 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
    • இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சென்னை:

    வாட்ஸ் ஆப் மூலம் அரசின் 50 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் 50 அத்தியாவசிய அரசு சேவைகளை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் 'வாட்ஸ்-அப்' மூலம் பெறலாம்.

    • ஆவணத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டவுடன், வாட்ஸ்அப் ஒரு PDF-ஐ உருவாக்கும்.
    • இன்ஸ்டால் செய்யப்பட்ட கூகுள் டிரைவ் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் அம்சத்தை தனது செயலியில் அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியின் ஐஓஎஸ் வெர்ஷனில் கிடைக்கிறது. மேலும் இது செயலியில் இருந்து வெளியேறாமல் ஒரு ஆவணத்தை ஸ்கேன் செய்து, அவற்றை மற்ற பயனர்களுக்கு மீடியா இணைப்பாக அனுப்ப அனுமதிக்கிறது.

    கடந்த வாரம், வாட்ஸ்அப் ஒரு புதிய ஏஐ அம்சத்தை சோதிக்கத் தொடங்கியது, இது ஆண்ட்ராய்டில் சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சாட்களில் ஏஐ சார்ந்து இயங்கும் செய்தி சுருக்கங்களை பார்க்க அனுமதிக்கிறது.



    ஐஓஎஸ் வெர்ஷனுக்கான வாட்ஸ்அப் செயலியில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.25.18.29 பீட்டாவிற்குப் புதுப்பித்த பிறகு, இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்து இருக்கிறது. இருப்பினும், இந்த அம்சம் இன்னும் உருவாக்கத்தில் உள்ளது. மேலும் பீட்டா சேனலில் இன்னும் இயக்கப்படவில்லை.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின் படி, வாட்ஸ்அப்பில் ஆவணங்கள் இணைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஆவணங்களை பிரவுஸ் செய்வது மற்றும் கேலரியில் இருந்து தேர்வு செய்யக்கோரும் ஆப்ஷனின் கீழ் தோன்றும் புதிய ஸ்கேன் செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது.

    வாட்ஸ்அப் ஐஓஎஸ் வெர்ஷனில் உள்ள இந்த அம்சத்தின் அடிப்படையில், ஸ்கேன் ஆப்ஷன் ஐகானை தட்டும்போது இந்த அம்சம் கேமராவைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் படங்களை கைமுறையாகப் பிடிக்க தேர்வு செய்யலாம் அல்லது ஒரு ஆவணத்தைக் கண்டறியும்போது செயலி தானாகவே படங்களைப் பிடிக்க அனுமதிக்கலாம்.




    ஆவணத்தில் உள்ள அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டவுடன், வாட்ஸ்அப் ஒரு PDF-ஐ உருவாக்கும், அதை வேறொரு பயனருக்கு அனுப்பலாம் அல்லது உங்களுக்கே கூட அனுப்பிக் கொள்ளலாம். இந்த PDF-ஐ ஸ்மார்ட்போனில் கூட சேமிக்கலாம்.

    வாட்ஸ்அப் அதன் ஸ்கேன் டாக்யூமென்ட்ஸ் அம்சத்தை உங்கள் ஸ்மார்ட்போனில் கொண்டு வரும் வரை, பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட கூகுள் டிரைவ் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    செயலியிலின் ஸ்டான்டர்டு வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, ஸ்கேன் டாக்யூமென்ட்ஸ் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கான வாட்ஸ்அப் வெர்ஷனில் வெளியிடப்படும்.

    • பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.

    பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 27 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.

    இதனிடையே போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

    இந்நிலையில், இந்திய ராணுவத்திற்கு நிதி அளிக்கக் கோரி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களது பணத்தை அளிக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் விளங்குகிறது.
    • இந்தியா மட்டுமின்றி உலகளவில் வாட்ஸ்அப் சேவை நீண்ட நேரம் முடங்கிய சம்பவம் அரங்கேறியது.

    இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை நேற்று (அக்டோபர் 25) மதியம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் செயல்பாட்டு வந்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கி போனது. இந்த செயலி சுமார் இரண்டு மணி நேரம் முடங்கி போனது.

    வாட்ஸ்அப் வரலாற்றில் இத்தனை மணி நேரம் செயலி முடங்கியது இதுவே முதல் முறை ஆகும். சேவை முடங்கியதால் பயனர்களால் புகைப்படம், வீடியோ, குறுந்தகவல் உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப்-இல் அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து டவுன்டிடெக்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நாடு முழுக்க சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் சேவையை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    திடீரென முடங்கிய நிலையில், வாட்ஸ்அப் சேவைகள் மதியம் 2 மணி அளவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. எனினும், செயலியில் அவ்வப்போது சில இடர்பாடுகள் ஏற்பட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்தே வாட்ஸ்அப் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

    முந்தைய தகவல்களில் வாட்ஸ்அப் சர்வெர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேவை முடங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. எனினும், வாட்ஸ்அப் சேவை தொழில்நுட்ப குறைபாடு காரணமாக முடங்கியது என மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • புது அம்சம் பற்றிய விவரங்கள் செயலியின் பீட்டா வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன் 2.22.23.14/15 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புது அப்டேட்டில் மல்டி டிவைஸ்-க்கான லாக்-அவுட் ஸ்கிரீன், புகைப்படம், வீடியோ, ஜிஃப் மற்றும் டாக்யுமெண்ட் உள்ளிட்டவைகளை கேப்ஷனுடன் ஃபார்வேர்டு செய்யும் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    லாக்-அவுட் ஸ்கிரீனை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. புதிய லாக்-அவுட் பகுதி வாட்ஸ்அப்-இல் இருந்து லாக்-அவுட் செய்ததும் காண்பிக்கும். செயலியின் செட்டிங்ஸ்-இல் இருந்தபடி இரண்டாவது சாதனத்தில் இருந்து லாக்-அவுட் செய்ய முடியும்.

    வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- லின்க்டு டிவைசஸ் ஆப்ஷன் மூலம் பிரைமரி போனில் இருந்து டேப்லெட் செஷனை விட்டு வெளியேற முடியும். மேலும் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் ஆப்ஷன்களில் இருந்து நம்பரை மாற்றுவதற்கான "சேஞ்ச் நம்பர்" அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் புகைப்படம், ஜிஃப், வீடியோ உள்ளிட்டவைகளை ஃபார்வேர்டு செய்யும் போது அவற்றுக்கு தலைப்பிடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தரவுகளை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் தலைப்பை பார்க்க முடியும். இதே வசதி டாக்யுமெண்ட்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு அம்சங்களில் லாக்-அவுட் ஸ்கிரீன் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான வெர்ஷனில் வெளியாகும் முன் இந்த அம்சம் தொடர் சோதனை செய்யப்படும். ஃபார்வேர்டு மீடியா வித் கேப்ஷன் அம்சம் பீட்டா பயனர்களில் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் பீட்டா செயலியில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் இரண்டு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 அப்டேட்டில் புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பயனர்கள் தங்களுக்கு தாங்காளாகவே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதுதவிர ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் எனும் புது வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த இரு அம்சங்களும் சோதனை முறையில் மிக சிறிய பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) - அம்சம் கொண்டு பயனர்கள் அவர்களின் சொந்த மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதற்கான வசதியை வாட்ஸ்அப் தனித்து காண்பிக்கிறது. சில பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வேறு விதமான சின்க் வசதியை வழங்கி இருக்கிறது. அதாவது அவர்களின் சொந்த நம்பருக்கு குறுந்தகவல் அனுப்பும் போது, இவை ஏற்கனவே லின்க் செய்யப்பட்ட சாதனங்களுடன் சின்க் செய்யப்பட்டு விடும்.

    ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் - க்ரூப் சாட்களுக்குள் க்ரூப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ப்ரோபைல் படத்தை வெளியிடுகிறது. இந்த வசதியை செயல்படுத்த முதலில் க்ரூப் ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஒரே பெயரில் க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றவர்களை ப்ரோபைல் போட்டோவை வைத்து எளிதில் கண்டறிந்து விட முடியும்.

    ஒருவேளை யாரேனும் ப்ரோபைல் போட்டோ வைக்காமல் இருந்தாலோ அல்லது பிரைவசி செட்டிங்கில் அதனை மறைத்து வைத்தாலோ, போட்டோ இல்லாமல் காலியாக உள்ள படம் செட் செய்யப்படும். இதில் குறிப்பிட்ட காண்டாக்டின் முதல் எழுத்து ப்ரோபைல் போட்டோவாக வைக்கப்படும்.

    தற்போது மெசேஜ் யுவர்செல்ஃப் மற்றும் ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் அம்சங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 வெர்ஷனிலும் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 22.23.0.70 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர் சோதனைக்கு பின் இரு அம்சங்களும் அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்களை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது.
    • இந்த அப்டேட்டில் கம்யுனிடிஸ், இன்-சாட் போல்ஸ் என புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் புதிய அம்சம் வரும் மாதங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்படும் என மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தஉ இருந்தார். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் அம்சம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்த அம்சம் வாட்ஸ்அப் க்ரூப்களை ஒருங்கிணைக்கும் புது வசதியை செயல்படுத்துகிறது.

    கம்யுனிடிஸ் அம்சத்தின் கீழ் பயனர்கள் பல்வேறு வாட்ஸ்அப் க்ரூப்களை ஒற்றை குடையின் கீழ் கொண்டுவர முடியும். கம்யுனிடிஸ் அம்சம் மூலம் வியாபாரங்கள் உரையாடும் போது மற்ற தளங்கள் வழங்குவதை விட அதிகளவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்க முடிவு செய்துள்ளது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் வாட்ஸ்அப்-இல் அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய கம்யுனிடிஸ் அம்சத்தை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது சாட்-இன் மேல்புறத்திலும், ஐஒஎஸ் பயனர்கள் சாட்-இன் கீழ்புறத்திலும் காண முடியும்.

    இங்கிருந்து ஏற்கனவே உள்ள க்ரூப்களை ஒரு கம்யுனிடியின் கீழ் ஒருங்கிணைக்க முடியும். இதுதவிர புது கம்யுனிடியையும் உருவாக்க முடியும்.

    கம்யுனிடியில் சேர்ந்த பின் பயனர்கள் க்ரூப்களின் இடையே தங்களுக்கு தேவையான விவரங்களை மிக எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். அட்மின்களும் மிக முக்கிய அப்டேட்களை கம்யுனிடியில் உள்ள அனைவருக்கும் அனுப்ப முடியும்.

    புதிய கம்யுனிடிஸ் அம்சம் தவிர இன்-சாட் போலிங் மற்றும் 32 நபர்களுடன் வீடியோ காலிங் வசதி, க்ரூப் பயனர்கள் எண்ணிக்கை 1024 உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எமோஜி ரியாக்‌ஷன், அதிக ஃபைல் ஷேரிங் மற்றும் அட்மின் ரிமுவல் போன்ற அம்சங்களை க்ரூப்களிலும் பயன்படுகத்த முடியும். இந்த வசதி கம்யுனிடி அம்சத்திற்கு பெருமளவு உதவியாக இருக்கும்.

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அம்சங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. வரும் மாதங்களில் உலகம் முழுக்க இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் இருக்கிறது.
    • பயனர்களுக்கு தொடர்ந்து புதுப்பது அம்சங்களை வழங்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் "Polls" உருவாக்கும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் மட்டும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. வரும் நாட்களில் வாட்ஸ்அப் வெப் தளத்திலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    முதற்கட்டமாக வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட் மற்றும் தனிநபர் உரையாடல்களில் Polls அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப் Polls-இல் கேட்கும் கேள்வியில் அதிகபட்சம் 12 பதில்களை ஆப்ஷனாக வழங்க முடியும். மேலும் ஒரே பதிலை இரு ஆப்ஷனாக வழங்க முற்பட்டால், வாட்ஸ்அப் அதனை எச்சரிக்கை செய்யும்.

    ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வாட்ஸ்அப் Polls பயன்படுத்துவது எப்படி?

    முதலில் உங்களின் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் வாட்ஸ்அப் செயலி அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின் தனிநபர் அல்லது க்ரூப் சாட் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஐஒஎஸ்-இல் வழக்கமாக குறுந்தகவல்களை டைப் செய்யும் இடத்தின் அருகில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டில் சாட் பாக்ஸ்-இன் அங்கமாக இருக்கும் "பேப்பர்-கிளிப்" ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

    ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு தளங்களிலும் மெனு ஆப்ஷன் திறக்கும். அந்த மெனுவின் இறுதியில் Polls ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். இனி Poll ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மற்றொரு மெனு திறக்கும். அதில் Poll கேள்வி மற்றும் பதில்களை சேர்க்கக் கோரும். இவ்வாறு செய்து முடித்ததும் அதனை அனுப்பலாம்.

    நீங்கள் Poll அனுப்பியவர்கள், அதற்கான பதிலை கிளிக் செய்ய முடியும். Poll-இன் இறுதியில் அதற்கு கிடைத்த பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு Poll-க்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தன. எந்த பதிலை அதிகம் பேர் தேர்வு செய்தனர் என்ற விவரங்களை பார்க்க முடியும்.

    ×