என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் மகள் தற்கொலை"

    • மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார்.
    • மனவிரக்தி அடைந்த தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம், முடக்குளத்தை சேர்ந்தவர் மோகன் நாயர். இவரது மனைவி அம்பிகா (வயது 67). இவரது மகள் மாலினி (40).

    மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு திருச்செந்தூர் வந்து நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அங்கு வைத்து குளிர்பானத்துடன் கலந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர்.

    அப்போது வாந்தி வரவே விடுதி ஊழியரிடம் நடந்ததை கூறி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்று சங்கீதா சிகிச்சை அளித்து வந்தார்.
    • தினமும் தங்களின் மகள் படும் கஷ்டத்தை பார்த்து ஜெயராஜூம், சங்கீதாவும் வேதனை அடைந்தனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயராஜ். இவரது மனைவி சங்கீதா (வயது 25). இவர்களது 5 வயது மகள் பிரகன்யா.

    சிறுமி பிரகன்யா பிறக்கும் போதே ஆசனவாய் துவாரம் இல்லாமல் இருந்தது. இதனால் அவளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குணப்படுத்த முடியவில்லை. மேலும் நாட்கள் செல்லச்செல்ல சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது.

    ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்று சங்கீதா சிகிச்சை அளித்து வந்தார். அதற்கு செலவு அதிகமாக ஆகியுள்ளது. ஆனாலும் பிரகன்யாவின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.

    தினமும் தங்களின் மகள் படும் கஷ்டத்தை பார்த்து ஜெயராஜூம், சங்கீதாவும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சங்கீதா தனது மகளை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போதிருந்தே அவர் யாருடனும் பேசாமல் கவலையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெயராஜ் வேலைக்கு சென்றிருந்ததால் சங்கீதாவும், சிறுமி பிரகன்யாவும் வீட்டில் தனியாக இருந்தனர்.

    இந்த நிலையில் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு ஜெயராஜ் வந்தார். அவர் வீட்டு கதவை தட்டிய போதிலும் சங்கீதா திறக்கவில்லை. நீண்ட நேரமாக தட்டியும் கதவை மனைவி திறக்காததால் சந்தேகமடைந்த ஜெயராஜ், கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது அவரது மனைவி சங்கீதா தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் மகள் பிரகன்யா துண்டால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய் மற்றும் மகள் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரிய வகை நோயால் அவதிப்பட்ட மகள் பிரகன்யாவை, தாய் சங்கீதா துண்டால் கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியவகை நோயால் அவதிப்பட்ட 5 வயது மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கம்புணரி பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இறந்தவர்களில் ஒருவர் 45 வயது மதிக்கத்தக்கவராகவும், மற்றொருவர் 14 வயதுடையவராகவும் இருக்கலாம் என தெரிகிறது.
    • குடும்ப பிரச்சினை காரணமாக திருமுக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசர் விசாரணையில் தெரிய வந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

    மழைநீர் மூலம் இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. வருடத்தில் பெரும்பாலான நாட்களில் குளத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்த குளத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் இந்த குளத்தில் குளிக்க செல்வோர் நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கி இறப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் திருமுக்குளத்துக்கு சென்றனர். அப்போது தண்ணீரில் 2 பெண்களின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து 2 பெண்களின் உடல்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

    இறந்தவர்களில் ஒருவர் 45 வயது மதிக்கத்தக்கவராகவும், மற்றொருவர் 14 வயதுடையவராகவும் இருக்கலாம் என தெரிகிறது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? தாய்-மகளா? குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இறந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாப்பட்டி தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி மகாலட்சுமி (வயது 50), அவரது மகள் அங்காள ஈஸ்வரி (14) என தெரிய வந்தது. இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக திருமுக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசர் விசாரணையில் தெரிய வந்தது.

    ×