என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அரிய வகை நோயால் அவதிப்பட்ட மகளை கொன்று தாய் தற்கொலை
- ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்று சங்கீதா சிகிச்சை அளித்து வந்தார்.
- தினமும் தங்களின் மகள் படும் கஷ்டத்தை பார்த்து ஜெயராஜூம், சங்கீதாவும் வேதனை அடைந்தனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயராஜ். இவரது மனைவி சங்கீதா (வயது 25). இவர்களது 5 வயது மகள் பிரகன்யா.
சிறுமி பிரகன்யா பிறக்கும் போதே ஆசனவாய் துவாரம் இல்லாமல் இருந்தது. இதனால் அவளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குணப்படுத்த முடியவில்லை. மேலும் நாட்கள் செல்லச்செல்ல சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது.
ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்று சங்கீதா சிகிச்சை அளித்து வந்தார். அதற்கு செலவு அதிகமாக ஆகியுள்ளது. ஆனாலும் பிரகன்யாவின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.
தினமும் தங்களின் மகள் படும் கஷ்டத்தை பார்த்து ஜெயராஜூம், சங்கீதாவும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சங்கீதா தனது மகளை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார்.
அப்போதிருந்தே அவர் யாருடனும் பேசாமல் கவலையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெயராஜ் வேலைக்கு சென்றிருந்ததால் சங்கீதாவும், சிறுமி பிரகன்யாவும் வீட்டில் தனியாக இருந்தனர்.
இந்த நிலையில் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு ஜெயராஜ் வந்தார். அவர் வீட்டு கதவை தட்டிய போதிலும் சங்கீதா திறக்கவில்லை. நீண்ட நேரமாக தட்டியும் கதவை மனைவி திறக்காததால் சந்தேகமடைந்த ஜெயராஜ், கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அவரது மனைவி சங்கீதா தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் மகள் பிரகன்யா துண்டால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய் மற்றும் மகள் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரிய வகை நோயால் அவதிப்பட்ட மகள் பிரகன்யாவை, தாய் சங்கீதா துண்டால் கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியவகை நோயால் அவதிப்பட்ட 5 வயது மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கம்புணரி பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்