என் மலர்
இந்தியா

Zoho-வின் 'அரட்டை' செயலியை பயன்படுத்தலாமே! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
- வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை.
- பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
பெண் மருத்துவர் ஒருவர் தனது வாட்ஸ்-அப் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டு தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், வாட்ஸ்-அப் பயன்பாடு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில்லை எனவும் அதற்கு பதிலாக நமது உள்நாட்டு தயாரிப்பான Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்தும்படியும் பெண் மருத்துவருக்கு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் வாட்ஸ்-அப் பயனாளர்களும் சற்று யோசிக்க தொடங்கியுள்ளனர்.
Next Story






