search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government services"

    ஊழலை ஒழிக்க டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கொண்டுவந்த அரசின் சேவைகளை வீடுகளுக்கு நேரடியாக வந்து வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் 369 பேர் பயன் அடைந்தனர். #DoorStepDelivery
    புதுடெல்லி:

    சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவும், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்கவும் டெல்லி அரசு முடிவு செய்தது.

    பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் திருமண சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகளை வீட்டுக்கே நேரடியாக சென்று வழங்க மாநில அரசு திட்டமிட்டது.


    இந்த திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு அரசு அலுவலகங்களில் திட்டம் தொடங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது டெல்லியில் சட்டசபை தொகுதிகள் தோறும் ஆம்ஆத்மி கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 58 இடங்களில் பொது மக்கள் பார்த்து அறிய வசதியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    முதல் நாளான நேற்று வீடு தேடி வரும் சேவை திட்டத்தில் பலன் பெற 21 ஆயிரம் பேர் டெலிபோன் செய்தனர். ஆனால் முகவரிகளால் 1286 பேரிடம் மட்டுமே பேச முடிந்தது.

    அவர்களில் 369 பேர் மட்டுமே சேவைகளை பெற அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு ‘1076’ என்ற டெலிபோன் நம்பர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காலை 8 மணி முதல் 10 மணி வரை பேசி தங்களது அரசு சேவை குறித்த தேவைகளை தெரிவிக்கலாம். #DoorStepDelivery #Kejriwal
    ×