search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SIM card"

    • தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு.
    • 10 சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் பல சிம் கார்டுகளை வைத்திருப்பது இயல்பாகி விட்டது. ஆனால் அதிக சிம் கார்டுகளை ஒருவர் வைத்திருப்பது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

    2023 ஆம் ஆண்டின் இந்தியத் தொலைத்தொடர்பு சட்டம் ஒரு நபர் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்ற விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு. ஆனால் அதற்கு மேல் சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒரு நபர் 6 சிம் வைத்திருக்க மட்டுமே அனுமதி உண்டு.

    உங்கள் பெயரில் உள்ள சிம் எண்களைத் தெரிந்துகொள்ள TAFCOP இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவுசெய்து, உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும். மேலும், அதில் உள்ள எண்களை நீக்கவும், தொடரவும் முடியும்.

    • புதிய சிம்கார்டு, இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம்.
    • அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    புதிய தொலைத் தொடர்பு சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதி தி ஒப்புதலை பெற்றது.

    138 ஆண்டுகள் பழமை வாய்ந்த டெலிகிராம் சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நிறைவேற்றப்படுகிறது. இந்த புதிய தொலைத்தொடர்பு சட்டமானது அவசர காலங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் அல்லது நெட்வொர்க்குகளின் கட்டுப்பாட்டை ஏற்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் விதிகளை உள்ளடக்கியது.

    2023-ன் தொலைத் தொடர்பு சட்டம் இந்திய தந்தி சட்டம் (1885) மற்றும் 1933-ன் இந்திய வயர்லெஸ் டெலிகிராப் சட்டம் ஆகிய இரண்டையும் மாற்றும் புதிய சட்டம் தொலைத் தொடர்பு துறையில் கணிசமான தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு வரும்.

    1, 2, 10 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் உள்பட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் நாளை (26-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சட்டப்பிரிவுகள் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 வரையிலான விதிகள் நடைமுறைக்கு வரும்.

    ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் ஒதுக்கீடு குறிப்பிட்ட விதிமீறல்களை தீர்ப்பது மற்றும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய சட்டம் 1997-ல் திருத்தங்கள் ஆகியவை நாளை முதல் நடைமுறைக்கு வராது.

    தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களை மேம்படுத்துவதற்கும் தொலைத் தொடர்பு சேவைகள், நெட்வொர்க்குகள், பாதுகாப்பு போன்றவற்றிற்கான தர நிலைகள் அமைக்கும் அதிகாரங்ளை இந்த சட்டம் வகுத்துள்ளது.

    இந்த சட்டத்தில் புதிய சிம்கார்டு, இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர்.
    • குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார்.

    இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

    • சிம் வாங்கும் வாடிக்கையாளர் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்கப்படும்.
    • ஏற்க மறுத்தால் ரூ. 10 லட்சம் வரை அபராதம்.

    இந்தியாவில் நாளை (டிசம்பர் 1) முதல் சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என மாற்றப்பட்டது.

    புதிய விதிமுறைகள் இந்தியாவில் நடைபெற்று வரும் சைபர் குற்றங்களை பெருமளவுக்கு குறைக்கவோ அல்லது குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. புதிய விதிமுறைகள் குடிமக்கள் பாதுகாப்பு கருதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சிம் கார்டுகளை அதிகளவில் விற்பனை செய்வது, யார் விற்பனை செய்ய முடியும் என்பது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன.

    விதிமுறை விவரங்கள்:

    இந்த விதிமுறைகளின் கீழ் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

    ஏற்கனவே உள்ள நம்பர்களுக்கு சிம் கார்டுகளை வாங்கும் போது, உங்களின் ஆதார் மற்றும் அடையாள விவரங்களை சமர்பிக்க வேண்டும். இதேபோன்று சிம் கார்டை விற்பனை செய்வோரும் வெரிஃபிகேஷனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிம் டீலர்கள் விற்பனை செய்யும் சிம் கார்டுகளை ரெஜிஸ்டர் செய்வதோடு, அவர்களையும் வெரிஃபை செய்ய வேண்டும்.

    புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்தால், அரசாங்கம் சார்பில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும். ஒரு நபர் அதிக சிம் கார்டுகளை வாங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன் படி தனிநபர் பயன்பாட்டுக்கு ஒருவர் தனது அடையாள சான்றினை பயன்படுத்தி அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்க முடியும்.

    ஒருவரின் சிம் கார்டு செயலிழந்து போனால், அந்த நம்பர் அடுத்த 90 நாட்கள் வரை வேறு யாருக்கும் நிர்ணயம் செய்யப்படாது. இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் அந்த நம்பருடன் ஒருங்கிணைந்த தகவல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இன்றுக்குள் (நவம்பர் 30) சிம் விற்பனையாளர்கள் பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

    • செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் முக அங்கீகாரம் செய்யும் மென்பொருள் மூலம் சிம்கார்டு மோசடியை கண்டறிந்தனர்.
    • யார் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என விசாரணை நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், சத்திய நாராயணபுரத்தை சேர்ந்தவர் நவீன். இவர் ஒரே போட்டோவை வைத்து போலி ஆவணங்கள் மூலம் 658 சிம் கார்டுகளை வாங்கி உள்ளார்.

    நவீன் ஒரே போட்டோ மூலம் 658 சிம் கார்டு வாங்கியது தொலை தொடர்பு துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

    இதுகுறித்து தொலை தொடர்பு துறை செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் முக அங்கீகாரம் செய்யும் மென்பொருள் மூலம் சிம்கார்டு மோசடியை கண்டறிந்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நவீன் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சிம் கார்டுகளை வாங்கியது தெரியவந்தது.

    இதேபோல் வேறு ஒரு வாலிபர் அஜித் சிங் நகர், விஷ்னா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் 150 சிம் கார்டுகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் அடையாளம் கண்டு சிம் கார்டுகளை செயலிழக்க வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சிம்கார்டுகள் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி இருந்தால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் தற்போது எங்கே யாரிடம் உள்ளது.

    யார் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என விசாரணை நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தனர். ஒரே போட்டோ மூலம் வாலிபர் ஒருவர் 658 சிம் கார்டுகள் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×