என் மலர்
நீங்கள் தேடியது "Telecom"
இந்திய டெலிகாம் சந்தையின் போக்கு பற்றி சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கைகளில் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RelianceJio
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் நாட்டின் முதல் டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும் என பென்ஸ்டெயின் மற்றும் கிரெடிட் சூசி வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் 2016 ஆம் ஆண்டு கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை டேட்டா வழங்கி, குறுகிய காலத்தில் பிரபல நிறுவனமாக மாறியிருக்கிறது. இதற்கென ஜியோ செய்த முதலீடுகளை கடந்து, தற்சமயம் லாபம் ஈட்டி வருவதாக பென்ஸ்டெயின் தெரிவித்திருக்கிறது.
முதலீடுகளின் மீதான லாபத்திற்கு நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகள் மற்றும் ஜியோபோன்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. ஜியோ நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகளை பின்பற்றி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

நீண்ட கால முதலீடுகளில் லாபத்தை ஈட்ட ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயனரிடம் இருந்து பெறும் வருவாயினை அதிகப்படுத்த வேண்டியிருக்கும் என பெயின்ஸ்டெயின் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் 12 மாதங்களில் ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சேவைகளுக்கான வருவாய் உள்ளிட்டவற்றில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போதைய நிதியாண்டின் படி மூன்றாவது காலாண்டின் இறுதியில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 38.7 கோடியாகவும், பாரதி ஏர்டெல் 28.4 கோடியாக இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 28 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்கள் இணைப்பு நிறைவுற்றது. இதைத்தொடர்ந்து நாட்டின் முன்னணி நிறுவனமாக வோடபோன் ஐடியா உருவெடுத்துள்ளது. #vodafoneidea
ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்களின் இணைப்பு இன்று நிறைவுற்றது. இதன் மூலம் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் உருவெடுத்துள்ளது.
ஒன்றிணைந்த புதிய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுக்கு சம அளவு போட்டியளிக்கும் நிறுவனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைய முடிவு செய்தன.
அதன்படி பிப்ரவரி மாதத்தில் இருநிறுவனங்களும் இதற்கான பணிகளை துவங்கின. இந்தியாவில் இவ்விரு நிறுவனங்கள் இணைப்பு மதிப்பு 2300 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.6 லட்சம் கோடி) என கணக்கிடப்பட்டது.
ஒன்றிணைந்திருக்கும் புதிய நிறுவனம் டெலிகாம் சந்தையின் வருவாயில் 40% பங்குகளை கொண்டிருக்கும் என் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 40 கோடியை எட்டியுள்ளது. புதிய நிறுவனத்தின் நிர்வாக தலைவராக குமார் மங்கலம் பிர்லாவும் புதிய தலைமை செயல் அதிகாரியாக பலேஷ் ஷர்மா செயல்படுகின்றனர்.