என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajat Patidar"

    • 2022 மெகா ஏலத்தில் எடுப்பதாக அணி நிர்வாகம் கூறியது.
    • ஆனால் ஏலத்தில் எடுக்காமல் காயத்திற்கான மாற்று வீரராக தேர்வு செய்தது.

    ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஆர்சிபி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து விடும்.

    இந்த சீசனில் ரஜத் படிதார் 11 போட்டிகளில் 239 ரன்கள் அடித்துள்ளார். ஆர்சிபி அணி 2022 ஏலத்தின்போது தன்னை ஏலம் எடுப்பதாக உறுதி அளித்தது. ஆனால் ஏலம் எடுக்கவில்லை. காயம் காரணமாக ஒருவர் விலகியதால் மாற்று வீரருக்கு அழைப்பு விடுத்தது. இதனால் வருத்தம் அடைந்தேன். கோபமும் அடைந்தேன் என ரஜத் படிதார் தெரிவித்தார்.

    இது தொடர்பாக ரஜத் படிதார் கூறியதாவது:-

    ஐபிஎல் 2022 ஏலத்தின்போது, ஏலத்தில் உங்களை எடுக்க இருக்கிறோம். தயாராக இருக்கவும் என அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல் வந்தது. இதனால் ஆர்சிபி அணிக்காக விளையாடும் மற்றொரு வாய்ப்பை பெற இருக்கிறோம் என்ற சிறிய நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால் மெகா ஏலத்தில் என்னை ஏலம் எடுக்கவில்லை. இதனால் சற்று வருத்தம் அடைந்தேன்.

    ஏலத்தில் எடுக்காததால், என்னுடைய உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். பின்னர், காயம் காரணமாக லவ்னித் சிசோடியா அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் மாற்று வீரரான உங்களை தேர்வு செய்ய இருக்கிறோம் என என்கு அழைப்பு வந்தது. நான் வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், மாற்று வீரராக செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும். மேலும் வெளியில் உட்கார விருப்பம் இல்லை.

    விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர் அணியில் இருக்கும்போது ஆர்சிபி நிர்வாகம் கேப்டன் பதவியை தந்தபோது எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் விராட் கோலி எனக்கு நம்பிக்கை அளித்தார்.

    இவ்வாறு ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

    • குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் விளாசிய சச்சின், ருதுராஜ் சாதனையை படிதார் முறியடித்துள்ளார்.
    • இந்திய வீரர்களில் குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார்.

    ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய 34-வது லீக் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி 14 ஓவராக குறைக்கப்பட்டது.

    இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 95 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் ரஜத் பட்டிதார் 23 ரன்கள் அடித்திருந்த போது ஒரு மகத்தான சாதனையை முறியடித்து இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் ஆகியோரை ரஜத் பட்டிதார் பின்னுக்கு தள்ளி உள்ளார்.

    சச்சின் டெண்டுல்கரும், ருதுராஜூம் 31 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்தனர். ஆனால் தற்போது ரஜத் 30 இன்னிங்ஸ்லே ஆயிரம் ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார்.

    இந்திய வீரர்களில் குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை குஜராத் அணியின் சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார். சாய் சுதர்சன் 25 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்.

    ஒட்டுமொத்தமான ஐபிஎல் இல் ஆஸ்திரேலிய வீரர் சேன் மார்ஸ் 21 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த ரெக்கார்டை அவர் 2011 ஆம் ஆண்டு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஒரு தனித்துவமான சாதனையை படிதார் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 35-க்கும் மேற்பட்ட சராசரி மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1000 ரன்களை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படிதார் படைத்துள்ளார்.

    • ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்தார்.
    • பெங்களூரு அணிக்காக கோலி, படிக்கலுக்கு அடுத்தபடியாக படிதார் 1000 ரன்களை கடந்தார்.

    ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 28 ரன்கள் அடித்த பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்தார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை படிதார் முறியடித்துள்ளார். 30 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை படிதார் அடைந்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் 31 போட்டிகளில் 1000 ரன்களை அடித்திருந்தார் .

    ஐபிஎல் வரலாற்றில் குறைவான போட்டிகளில் 1000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் தமிழக வீரர் சாய் சுதர்சன் (25 போட்டிகளில்) முதல் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பெங்களூரு அணிக்காக கோலி, படிக்கலுக்கு அடுத்தபடியாக 1000 ரன்களை கடந்த 3 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படிதார் படைத்துள்ளார். 

    • மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதே போல் கொல்கத்தா, சென்னையை ஆர்சிபி வீழ்த்தியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ரஜத் படிதார் ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்த ஒரு கேப்டனும் இதுவரை செய்யாத ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. இது டி20 லீக் வரலாற்றில் வேறு எந்த கேப்டனும் செய்யாத சாதனையாகும்.

    ஒரே ஐபிஎல் சீசனில் ஈடன் கார்டனில் KKR-யும், சேப்பாக்கத்தில் CSK-யும், வான்கடேயில் MI-யும் வீழ்த்திய அணிகள் இரண்டுதான். ஒன்று பஞ்சாப் மற்றொன்று ஆர்சிபி ஆகும்.

     

    பஞ்சாப் கிங்ஸ் 2012-ல் அவ்வாறு செய்தது. ஆனால் அந்த வெற்றிகள் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் வந்தன. ஆடம் கில்கிறிஸ்டின் தலைமையில் ஈடன் கார்டனில் KKR அணியை வீழ்த்திய PBKS, பின்னர் டேவிட் ஹஸ்ஸி தலைமையில் MI மற்றும் CSK அணிகளை வீழ்த்தியது.

    எனவே ஒரே சீசனில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை பட்டிதார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனால் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.

    சென்னை:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது:

    முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

    இந்த பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனவே, ஆரம்ப கட்டத்தில் எனது சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைத்திருந்தேன்.

    குறிப்பாக, லிவிங்ஸ்டோன் 4 ஓவர்கள் பந்து வீசிய விதம் நம்ப முடியாதது.

    இந்தப் போட்டியைப் பற்றிப் பேசினால் இது ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது. ரசிகர்கள் அவர்கள் தங்கள் அணிகளை ஆதரிக்கும் விதம் காரணமாக சேப்பாக்கத்தில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது.

    நாங்கள் 200 ரன்களை இலக்காகக் கொண்டிருந்ததால் அது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனெனில் அதை துரத்துவது எளிதல்ல.

    நான் இருக்கும்வரை ஒவ்வொரு பந்தையும் அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது தெளிவான குறிக்கோளாக இருந்தது என தெரிவித்தார்.

    • ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
    • விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும்.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் விராட் கோலி, பட்டிதாரை அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

    இது குறித்து பிளமிங் கூறியதாவது:-

    விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம். ஆர்சிபி அணியில் விராட் கோலியையும் ரஜத் பட்டிதாரையும் அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுமே கடந்த ஆண்டை விட தற்போது வித்தியாசமாக இருக்கிறது.

    விராட் கோலியை தவிர இம்முறை அவர்கள் பல பலமான வீரர்களை சேர்த்து இருக்கிறார்கள். ஆர்சிபி மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிகளும் தற்போது இப்படிதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த ஆண்டுகளை விட இம்முறை தொடர் சரிசமமாக இருப்பதாக நான் நினைக்கின்றேன். பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.

    என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.

    • புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயால், லுங்கி நிகிடி, நுவன் துசாரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் உள்னளர்.
    • லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு போன்ற ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர்.

    ஐ.பி.எல். போட்டியில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த முறையாவது அந்த அணி கோப்பையை வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    பேட்ஸ்மேன்கள்

    ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா.

    ஆல்-ரவுண்டர்கள்

    லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல்.

    பந்து வீச்சாளர்கள்

    ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.

    தொடக்க வீரர்கள்

    இந்திய அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி களம் இறங்கி வருகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுகிறார். இதனால் இந்த சீசனிலும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அவருடன் பில் சால்ட், தேவ்தத் படிக்கல் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்கள் என்பதில் அணிக்கு பெரிய அளவில் சிரமம் இல்லை எனலாம்.

    மிடில் ஆர்டர்

    ரஜத் படிதார், ஜித்தேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஸ்வப்னில் சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் தேவைப்பட்டால் குருணால் பாண்ட்யாவும் மிடில் வரிசையில் கைக்கொடுப்பார்.

    நல்ல தொடக்கம் அமைந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட துணைபுரிவார்கள். ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், டிம் டேவிட் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கலாம்.

    சுழற்பந்து வீச்சு

    குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், லிவிங்ஸ்டன், பெத்தேல் நன்றாக அறிமுகம் ஆனவர்கள். இவர்களுடன் சுயாஷ் சர்மா, மோகித் ரதீ ஆகியோர் உள்ளனர். வாய்ப்பு கொடுக்கப்பட்டால்தான் அவர்களின் திறமை வெளிப்படும். குருணால் பாண்ட்யா என்ற ஒரு நட்சத்திர ஸ்பின்னருடன் பகுதி நேரமாக ஸ்பின்னர்களாக ஆல்-ரவுண்டர் லிவிங்ஸ்டன், பெத்தேல், ஸ்வப்னில் சிங்கை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர்கள்

    ஜோஷ் ஹேசில்வுட், புவனேஸ்வர் குமார், நுவான் துசாரா, யாஷ் தயால், லுங்கி நிகிடி ஆகிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் ரஷித் தார், அபிநந்தன் சிங், ஆல்ரவுண்டர் மனோஜ் பாண்டேஜ் உள்ளனர்.

    ஜோஷ் ஹேசில்வுட் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அதேபோல் புவனேஸ்வர் குமாரும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். யாஷ் தயால், லுங்கி நிகிடி, நுவான் துசாரா இவர்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆல்-ரவுண்டர் டிம் டேவிட்டும் வேகப்பந்து யூனிட்டிற்கு உதவியாக இருப்பார்.

    வெளிநாட்டு வீரர்கள்

    பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஷெப்பர்டு, பெத்தேல், ஹேசில்வுட், துசாரா, லுங்கி நிகிடி ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

    சமநிலையான ஆடும் லெவன் அணிக்காக இவர்கள் எப்படி பயன்படுத்த இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

    ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டால் ஹேசில்வுட், லுங்கி நிகிடி அல்லது துசாரா, லிவிங்ஸ்டன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டு, பில் சால்ட் இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்படலாம்.

    எப்போதுமே ஆர்சிபி ஏற்றம் இறக்கத்துடன் பிளேஆஃப் வரை முன்னேறும். ஆனால் பிளேஆஃப், இறுதிப் போட்டியில் வெற்றி என்ற தடைக்கல்லை தாண்ட முடியாமல் உள்ளது. இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என்று பார்ப்போம்.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புதிய கேப்டனுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடங்கும் முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய கேப்டன், ரஜத் பட்டிதாருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிறப்பு கோரிக்கை விடுத்தார். மேலும், ரசிகர்களும் புதிய கேப்டனுக்கு தங்களது அன்பை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இது குறித்து பேசிய விராட் கோலி, "இவர் (ரஜத் பட்டிதார்) உங்களை நீண்ட காலம் வழிநடத்துவார். அவருக்கு அன்பை கொடுங்கள், அவர் மிகத் திறமையானவர். அவர் பிரான்சைஸ்-க்கு நன்மை செய்து. ஐ.பி.எல். தொடரில் அணியை முன்னோக்கி அழைத்து செல்வார். நல்ல தலைவராக உருவெடுப்பதற்கு அவரிடம் எல்லா திறமையும் உள்ளது," என்று தெரிவித்தார்.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாப் டூ பிளெசிஸ்-க்கு மாற்றாக ஆர்.சி.பி.-யின் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார் 2021-ம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார்.

    • நான் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்த மாட்டேன்.
    • அவர்களை எப்போதும் கூலாகவும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க முயல்வேன்.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய ஐந்து அணிகள் புது கேப்டன்களாக களம் இறங்குகின்றன.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஆர்சிபி ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானேவை கேப்டனாக நியமித்துள்ளது. இதில் ரஜத் படிதார் தற்போது புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.

    இந்நிலையில் எனது அணிக்காக நான் துணை நிற்பேன் என கேப்டன்சி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் மனம் திறந்த பேசினார். அதில், நான் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் போட்டிகளின் நிலவரங்களை உற்று நோக்குவேன். எனது அணிக்காக நான் துணை நிற்பது அவசியம். அவர்களை எப்போதும் கூலாகவும், நம்பிக்கையுடனும் வைத்திருக்க முயல்வேன்.

    என ரஜத் படிதார் கூறினார்.

    • ரஜத்துக்கு மாற்று வீரரை தற்போது அறிவிக்க வேண்டாம் என பயிற்சியாளர்களும் நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்.
    • ஆர்சிபி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    பெங்களூரு:

    16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை கோப்பயை வெல்ல ஆர்சிபி அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பல்வேறு கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரஜத் படிதார் விலகுகிறார் என ஆர்சிபி அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    டுவிட்டர் பதிவில்,

    துரதிருஷ்டவசமாக, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023-ல் இருந்து ரஜத் படிதார் வெளியேறுகிறார். ரஜத் விரைவில் குணமடைய விரும்புகிறோம். மேலும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். ரஜத்துக்கு மாற்று வீரரை தற்போது அறிவிக்க வேண்டாம் என பயிற்சியாளர்களும் நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

    ஆர்சிபி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார்.
    • இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். விராட் கோலிக்கான மாற்று விரைவில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன்.
    • குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன்.

    விசாகப்பட்டினம்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் விராட் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

    இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட ராஜத் பட்டிதாருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி போல பேட்டிங் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன் என பட்டிதார் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன். இந்த விஷயங்களை கற்று எனது பேட்டிங்கில் சேர்க்க முயற்சிக்கிறேன்.

    உள்நாட்டு சுற்றுகளில் பல இந்திய வீரர்களுடன் நான் விளையாடியுள்ளேன். கடந்த இரண்டு தொடர்களில் இருந்து ராகுல் சாருடன் உரையாடி வருகிறேன். நான் ரோகித் பாயுடன் அதிகம் பேசவில்லை. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் நான் அவருடன் பேட்டிங் பற்றி பேச நேர்ந்தது. வலைகளில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவை அனைத்தும் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

    என்று படிதார் கூறினார்.

    ×