என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stephen Fleming"

    • மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம்.
    • ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை.

    ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

    நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 154 ரன்களில் ஆல்அவுட்டாகி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மெகா ஏலம் யுக்தி சரியாக அமையவில்லை. இதனால் தோல்வியை சந்தித்து வருவதாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

    "மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம். ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை. இதனால் மேலிருந்து கீழ் வரை அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வீரர்களிடம் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • நாங்கள் கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம்.
    • ஆனால் பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான புளூ பிரிண்டை ஆர்சிபி அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது.

    ஒருவேளை நாங்கள் தகுதிபெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.

    கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.

    அடுத்து வரும் அத்தனைப் போட்டிகளையும் எங்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என தெரிவித்தார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    லக்னோ:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தோனி கேப்டனாக இருப்பது நிச்சயம் எங்களுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால் அவரிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவர் ஏதோ கையை வைத்தவுடன் அணி அப்படியே மாறிவிடும் என நினைக்கக் கூடாது. அப்படி இருந்திருந்தால் அவர் அதை முன்பே செய்திருப்பார்.

    நாங்கள் தற்போது தோனியுடன் இணைந்து சரியான திசையில் செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அணியின் செயல்பாட்டை முன்னேற்ற முயற்சி செய்வோம்.

    கடந்த போட்டியில் எங்களுடைய செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. கொஞ்சம் கூட எதிரணிக்கு சவால் அளிக்காமல் நாங்கள் தோற்ற விதம் எனக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே எங்களுக்குள்ளேயே நாங்கள் சுயபரிசோதனை செய்து எப்படி முன்னேறலாம் என்பது குறித்து கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

    எங்கள் அணி தோல்வியின் மூலம் பல காயங்களை ஏற்படுத்திவிட்டது. அந்தக் காயத்தை எல்லாம் நாங்கள் உத்வேகமாக மாற்றி வெற்றியை நோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.

    வீரர்கள் தங்களது பார்மை கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நாம் அனைவரும் சிக்சர்களைப் பற்றியே பேசிக் கொள்கிறோம். ஆனால் அதுவே அனைத்தும் கிடையாது. சிக்சர் அடிப்பதற்கும், பெரிய ஷாட் ஆடி ரன்களை சேர்ப்பதற்கும் ரசிகர்கள் இடையே நிறைய ஆர்வம் இருப்பது எனக்கு தெரியும். இதை சில அணிகள் சிறப்பாக செய்கின்றது.

    எனினும் நாம் ஒன்றும் பேஸ் பால் போட்டியில் இல்லை சிக்சர், பவுண்டரி பற்றி பேச. பந்திற்கும், பேட்டிற்கும் இடையே ஒரு நல்ல பேலன்ஸ் இருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகே.

    லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் நிச்சயம் எங்களுக்கு அபாயத்தை கொடுப்பார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கின்றார். அவரை விரைவில் ஆட்டம் இழக்கவைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.

    • சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியை எம்.எஸ். தோனியின் பெற்றோர் பார்த்தனர்.
    • முதன்முறையாக சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்ததால் எம்.எஸ். தோனி ஓய்வை முடிவை அறிவிக்கலாம் எனத் தகவல் பரவியது.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியை எம்.எஸ். தோனியின் பெற்றோர் கண்டுகளித்தனர். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, இன்று முதன்முறையாக அவரது பெற்றோர்கள் போட்டியை பார்க்க வந்தனர்.

    ஒருவேளை எம்.எஸ். தோனி இன்று ஓய்வு குறித்த முடிவை அறிவிக்கலாம். இதனால்தான் பெற்றோர்கள் அவரது கடைசி போட்டியை பார்க்க வந்துள்ளனர் எனச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. ஆனால் எம்.எஸ். தோனி ஓய்வு குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஆலோசகர் ஸ்டீபன் பிளமிங் இது தொடர்பாக கூறுகையில் "எம்.எஸ். டோனி இன்னும் வலிமையாக சென்று கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் எம்.எஸ். தோனியிடம் அவருடைய எதிர்காலம் குறித்து கேட்பதில்லை" என்றார்.

    இதனால் எம்.எஸ். தோனி இந்த தொடர் முழுவதும் விளையாடுவார். டெல்லிக்கு எதிராக இன்று கடைசி வரை களத்தில் நின்று 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சருடன் 30 ரன்கள் அடித்தார்.

    • அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை.
    • அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது.

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    சென்னை அணியின் பினிஷராக செயல்படும் தோனி 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9-ம் வரிசையில் இறங்கினார். அப்போது அனைவரும் அது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்தார். இருந்தாலும் அவரால் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

    தோனியின் பேட்டிங் வரிசை குறித்தும், அவர் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:-

    அவரது பேட்டிங் வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்தது. இது குறித்த முடிவை தோனி தான் எடுக்கிறார். அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில இடர்பாடுகள் உள்ளன. அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது. அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார்.

    இன்றைக்குப் போல போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே பேட்டிங் செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார்.

    நான் கடந்த ஆண்டே கூறினேன், தோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார்.

    என்று பிளெமிங் கூறினார்.

    • நாங்கள் பாசிடிவ் பிராண்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறோம்.
    • சேப்பாக்கத்தில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை.

    ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்.சி.பி. அணி வீழ்த்தியுள்ளது.

    இந்நிலையில், போட்டிக்கு பின்பு சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது மற்ற அணிகள் பெரிய ஸ்கோரை அடிக்கும்போது சிஎஸ்கே அணி பேட்டிங்கில் குறைவான ரன்களை அடிக்கும் முறை காலாவதியாகி விட்டதாக நீங்கள் நினைக்கவில்லையா? என்று செய்தியாளர் எழுப்பினார்.

    இதற்கு கோபத்துடன் பதில் அளித்த பிளெமிங், "நீங்கள் ஃபயர்பவரைப் பற்றி பேசுகிறீர்கள். எங்களிடம் ஃபயர்பவர் முழுமையாக உள்ளது. இந்தக் கேள்வி எனக்குப் புரியவில்லை. தொடரின் முடிவில், யார் வெற்றி பெறுவார்கள் என்று பாருங்கள். நாங்கள் பாசிடிவ் பிராண்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறோம். எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

    நீங்கள் கேட்டது ஒருவிதத்தில் முட்டாள்தனமான கேள்வி. நாங்கள் பல ஆண்டுகளாக உங்களிடம் கூறிவருகிறோம். சேப்பாக்கத்தில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை. சேப்பாக்கத்தை விட வேறு மைதானங்களில் நாங்கள் பலமுறை வென்றுள்ளோம்

    கடந்த 2 வருடங்களாக சேப்பாக்கம் மைதானத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இது [பழைய] சேப்பாக்கம் மைதானம் இல்லை. பழைய சேப்பாக்கம் மைதானத்தில் 4 சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கலாம். ஒவ்வொரு மைதானத்தின் தன்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது" என்று தெரிவித்தார்.

    • ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
    • விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும்.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் விராட் கோலி, பட்டிதாரை அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

    இது குறித்து பிளமிங் கூறியதாவது:-

    விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம். ஆர்சிபி அணியில் விராட் கோலியையும் ரஜத் பட்டிதாரையும் அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுமே கடந்த ஆண்டை விட தற்போது வித்தியாசமாக இருக்கிறது.

    விராட் கோலியை தவிர இம்முறை அவர்கள் பல பலமான வீரர்களை சேர்த்து இருக்கிறார்கள். ஆர்சிபி மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிகளும் தற்போது இப்படிதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த ஆண்டுகளை விட இம்முறை தொடர் சரிசமமாக இருப்பதாக நான் நினைக்கின்றேன். பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.

    என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.

    • வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.

    இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

    மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

    வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உலகம் முழுவதும் விளையாடும் வீரர்கள் பலர், இது போன்ற பல உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மிகவும் முக்கியமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

    மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் விளையாடி உள்ளார். பட்லரும் 2013 முதல் பி.பி.எல்.லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.

    இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாட அங்குள்ள மைதானங்கள், கால நிலை, பிட்ச் தன்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் கிடைக்க கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்கள் விளையாடினால் அது சிறந்ததாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் அங்கு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • டோனியின் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், அந்த காயம் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாக பிளேமிங் கூறினார்.
    • சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது.

    சென்னை அணியின் கேப்டன் டோனியின் முழங்கால் காயம், அவருக்கு தொல்லையையாக இருப்பதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

    சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிளேமிங் கூறியதாவது:-

    டோனியின் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், அந்த காயம் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    மேலும் நேற்றைய போட்டியின்போது காயமடைந்த சிசண்டா மகலா, அடுத்த இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனவும் பிளெமிங் கூறினார். 

    இதனால் சிசண்டா மகலா சென்னை அணியின் அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது.

    சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி வருகிற 17-ந் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    • கேப்டன் டோனியின் கீப்பிங் திறமைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பேட்டி
    • காயம் காரணமாக விளையாட முடியாது என தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியின் காயம் கவலைப்படும் வகையில் இல்லை என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

    முந்தைய போட்டியின்போது காயமடைந்த டோனி நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் களமிறங்கியது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. இந்த போட்டியில் சென்னை அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இப்போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் கூறியதாவது:-

    பென் ஸ்டோக்ஸ் காயத்தால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மேலும் ஒரு வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவரது காயம் பெரிய அளவில் இல்லை. உடற்தகுதி பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறார்.

    டோனியைப் பொருத்தவரை உடற்தகுதி நன்றாக இருக்கிறது. அவர் தனது காயத்தை சரியாக கையாள்கிறார். விளையாட தயாராக இருக்கிறார். அவர் எப்போதும் அணிக்கு முதலிடம் கொடுப்பார். காயம் காரணமாக தன்னால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியாது என்று அவருக்குத் தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார். அவரைப்பற்றி எந்த கவலையும் இல்லை. அதேசமயம் அவர் ஸ்டம்புக்கு பின்னால் கீப்பராக அவரது திறமைகளுக்கு போதுமான அங்கீகாரம் கிடைத்ததாக நான் நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
    • பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்த தோல்விக்கு கொல்கத்தா அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காரணமாக இருந்தார் அவர் 4 ஓவர் வீசி 36 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ருதுராஜ் கெய்க்வாட், ரகானே ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார்.

    31 வயதான சென்னையை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கடந்த காலங்களில் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

    2019-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.4 கோடிக்கு எடுத்தது. பின்னர் 2020-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் இதுவரை 19 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒட்டு மொத்தமாக 61 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்காதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி எங்கள் அணியின் வலை (நெட்) பயிற்சி பவுலராக சில காலங்களில் இருந்தார். அப்போது அவர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பந்து வீசினார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவர் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.

    பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    • ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.

    இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.

    இந்த மாதம் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியுடன் இந்த குழு இணைந்து செயல்படுவர்.

    பிளெமிங் அணியில் இணைவது வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மேலும் ஊழியர்களுக்கும் நல்லது என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×