search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stephen Fleming"

    • இந்த ஐபிஎல் சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் டோனி
    • டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்தது.

    இந்த சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் எம்.எஸ் டோனி. இதுவரை டெல்லி, மும்பை, லக்னோவுக்கு எதிராக 37* (16), 20* (4), 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக விளையாடி இருக்கிறார்

    சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசியுள்ளார். அதில், "டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது. எனவே அவருடைய ஆட்டத்தை பார்த்து எங்கள் அணி ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே நாங்கள் அவருடைய உச்சகட்ட திறமையை பார்த்துள்ளோம். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் அவருடைய முழங்காலில் பிரச்சனை இருக்கிறது"

    அதிலிருந்து மீண்டு வரும் அவரால் குறிப்பிட்ட சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடியும். இங்கே அனைவரும் எங்களைப் போலவே டோனி அதிக நேரம் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகின்றனர். இருப்பினும் நாங்கள் அவரை தொடர் முழுவதும் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். அதற்கு அவர் 2 – 3 ஓவர்கள் விளையாடுவதே சரியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது.

    அவர் பேட்டிங் செய்ய வரும் போது அற்புதமான சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் அனைவரையும் மகிழ்விக்கிறார். அந்த வகையில் டோனி சாதித்துள்ள விஷயங்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் செய்துள்ளதை பார்த்து எங்களுக்கு ஆச்சரியமில்லை. எங்களுடைய அணியின் இதயத்துடிப்பாகவும் ஒரு அங்கமாகவும் அவர் இருப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை.
    • பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துள்ளது.

    இந்நிலையில் டோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் போல நானும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் டோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் நிறைய விளையாடியுள்ளேன்.

    பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். டோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

    டோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்றதில்லை. இந்த நிலையை இந்தியா தக்கவைத்து கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    • ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.

    இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவின் ஒரு பகுதியாக முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் இயன் பெல் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.

    இந்த மாதம் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியுடன் இந்த குழு இணைந்து செயல்படுவர்.

    பிளெமிங் அணியில் இணைவது வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மேலும் ஊழியர்களுக்கும் நல்லது என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
    • பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்த தோல்விக்கு கொல்கத்தா அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காரணமாக இருந்தார் அவர் 4 ஓவர் வீசி 36 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ருதுராஜ் கெய்க்வாட், ரகானே ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார்.

    31 வயதான சென்னையை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கடந்த காலங்களில் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

    2019-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.4 கோடிக்கு எடுத்தது. பின்னர் 2020-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் இதுவரை 19 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒட்டு மொத்தமாக 61 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்காதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி எங்கள் அணியின் வலை (நெட்) பயிற்சி பவுலராக சில காலங்களில் இருந்தார். அப்போது அவர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பந்து வீசினார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவர் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.

    பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    • கேப்டன் டோனியின் கீப்பிங் திறமைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பேட்டி
    • காயம் காரணமாக விளையாட முடியாது என தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியின் காயம் கவலைப்படும் வகையில் இல்லை என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

    முந்தைய போட்டியின்போது காயமடைந்த டோனி நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் களமிறங்கியது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. இந்த போட்டியில் சென்னை அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இப்போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் கூறியதாவது:-

    பென் ஸ்டோக்ஸ் காயத்தால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மேலும் ஒரு வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவரது காயம் பெரிய அளவில் இல்லை. உடற்தகுதி பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறார்.

    டோனியைப் பொருத்தவரை உடற்தகுதி நன்றாக இருக்கிறது. அவர் தனது காயத்தை சரியாக கையாள்கிறார். விளையாட தயாராக இருக்கிறார். அவர் எப்போதும் அணிக்கு முதலிடம் கொடுப்பார். காயம் காரணமாக தன்னால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியாது என்று அவருக்குத் தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார். அவரைப்பற்றி எந்த கவலையும் இல்லை. அதேசமயம் அவர் ஸ்டம்புக்கு பின்னால் கீப்பராக அவரது திறமைகளுக்கு போதுமான அங்கீகாரம் கிடைத்ததாக நான் நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டோனியின் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், அந்த காயம் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாக பிளேமிங் கூறினார்.
    • சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது.

    சென்னை அணியின் கேப்டன் டோனியின் முழங்கால் காயம், அவருக்கு தொல்லையையாக இருப்பதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

    சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிளேமிங் கூறியதாவது:-

    டோனியின் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், அந்த காயம் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    மேலும் நேற்றைய போட்டியின்போது காயமடைந்த சிசண்டா மகலா, அடுத்த இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனவும் பிளெமிங் கூறினார். 

    இதனால் சிசண்டா மகலா சென்னை அணியின் அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது.

    சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி வருகிற 17-ந் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    • வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.

    இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

    மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

    வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உலகம் முழுவதும் விளையாடும் வீரர்கள் பலர், இது போன்ற பல உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மிகவும் முக்கியமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

    மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் விளையாடி உள்ளார். பட்லரும் 2013 முதல் பி.பி.எல்.லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.

    இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாட அங்குள்ள மைதானங்கள், கால நிலை, பிட்ச் தன்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் கிடைக்க கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்கள் விளையாடினால் அது சிறந்ததாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் அங்கு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    வயதான வீரர்களை கொண்ட அணி என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களை மாற்றியமைப்பது அவசியம் என பிளெமிங் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டோடு 12 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 10 வருடங்கள் முடிந்து கடந்த வருடம் 11-வது சீசனின்போது வீரர்கள் அனைவரும் பொது ஏலம் மூலம் எடுக்கப்பட்டனர். நான்கு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரையும் 8 அணிகள் ஏலம் மூலமே எடுத்தது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் அனுபவ வீரர்களை தேர்வு செய்தது. இதனால் ‘Daddy Army’ என்றும் ‘Ageing Squad’ என்றும் அழைத்தனர். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை சந்தித்தது.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த சீசனில் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தழுவவிட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சராசரியே 34 ரன்கள்தான். இதனால் அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி தோல்வி குறித்த காயம் குறைய சற்று நேரம் கொடுக்க வேண்டும். நாங்கள் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளோம். 2-வது முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளோம். இரண்டு வருடங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. சிஎஸ்கே ஒரு ‘Ageing Team’ என்பதை நாஙகள் புரிந்துகொள்ள வேண்டும்.

    மீண்டும் சிறந்த அணியை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். டோனியும் இதே எண்ணத்தில் உள்ளார். டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாட செல்கிறார். உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் அடுத்த சீசன் குறித்து திட்டமிடப்படும்’’ என்றார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி மன்னன் அந்த்ரே ரஸல் மீது அதிக கவனம் செலுத்த மாட்டோம் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK
    ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அந்த்ரே ரஸலின் அதிரடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ரஸலை பற்றி அதிக அளவில் கவனம் செலுத்த மாட்டோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியளார் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்த வரையில் இரண்டு மூன்று சவால்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மற்ற ஆறு பேட்ஸ்மேன்கள் நிராகரித்து விடுவது. அந்த அணியில் கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், உத்தப்பா போன்றோரும் உள்ளனர். இதை நாங்கள் கவனித்தில் எடுத்துக்கொள்வோம். ரஸல் மீது அதிக கவனம் செலுத்தமாட்டோம்.

    ரஸல் சிறப்பாக விளையாடி வருகிறார். இருந்தாலும் எங்களுடைய திட்டம் ஒன்று அல்லது இரண்டு வீரர்களுக்கு எதிராக என மாறாது. ஆனால் கொல்கத்தா வீரர்கள் அபாயகரமானவர்கள் என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.
    வங்காளதேச அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் ரோஸ் டெய்லர் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #NZvBAN #RossTaylor #StephenFleming
    டுனிடின்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டத்தில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது.

    முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் 69 ரன்னும், நிக்கோலஸ் 64 ரன்னும், தற்காலிக கேப்டன் டாம்லாதம் 59 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 242 ரன் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது.

    இந்த ஆட்டத்தில் டெய்லர் 43-வது ரன்னை எடுத்தபோது 8 ஆயிரம் ரன்னை தொட்டார். ஒருநாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    51-வது ரன்னை எடுத்த போது ஒருநாள் ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டெய்லர் படைத்தார். அவர் ஸ்டீபன் பிளெமிங்கை முந்தி முதல் இடத்தை பிடித்தார்.



    34 வயதான டெய்லர் 218 ஒருநாள் போட்டி, 203 இன்னிங்சில் விளையாடி 8026 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.34 ஆகும். இதில் 20 சதமும், 47 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 181 ரன் குவித்துள்ளார்.

    பிளெமிங் 279 போட்டியில் 268 இன்னிங்சில் ஆடி 8007 ரன் எடுத்துள்ளார். சராசரி 32.41 ஆகும். 8 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 134 ரன் எடுத்துள்ளார். #NZvBAN #RossTaylor #StephenFleming
    ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் கேப்டன் டோனி தான்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பாராட்டினார்.#CSK #IPL2018 #StephenFleming #Dhoni
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மாலை சென்னை திரும்பியது. 2 ஆண்டு தடைக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டி தொடரிலேயே சென்னை அணி கோப்பையை வென்று அசத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரர்களை வாழ்த்தி ரசிகர்கள் கோஷம் எழுப்பினார்கள். விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தனி பஸ் மூலம் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கு வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சென்னை ஓட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னையின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்கள் அணியின் வீரர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன. போட்டி இடம் மாற்றம் என்பது எங்களது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல. ஒரு ஆட்டத்துடன் சென்னையில் இருந்து போட்டி புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும். புனேவின் சூழ்நிலையும் எங்களுக்கு தெரியும். அதற்கு தகுந்தபடி எங்களது ஆட்ட திட்டத்தை மாற்றி செயல்பட்டோம். எங்கள் அணி வீரர்கள் மீது நம்பிக்கை இருந்தது. நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் எல்லோரும் சிறப்பாக செயல்பட்டனர்.



    ஷேன் வாட்சன் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தார். பிக்பாஷ் போட்டியில் அவரது ஆட்டத்தை கவனித்து தான் அணிக்கு தேர்வு செய்தோம். அவர் எங்களது நம்பிக்கைக்கு தகுந்தபடி சிறப்பாக செயல்பட்டார். எங்கள் அணியில் இடம் பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றி கொண்டு நன்றாக ஆடினார்கள். சென்னை அணியின் வெற்றியில் கேப்டன் டோனியின் தாக்கம் மிகவும் முக்கியமானது. திறமையான கேப்டனான டோனி வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத் திறனை வெளிக்கொண்டு வரும் சக்தி படைத்தவர். டோனியின் பலத்தையும், அணியின் நல்ல ஆட்ட திட்டத்தையும் நாங்கள் சரியாக செயல்படுத்தினோம்.

    இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

    அப்போது சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உடனிருந்தார். 
    ×