என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    அடுத்த 6 போட்டிகளிலும் நிச்சயம் வெல்வோம்-ஆர்சிபியை சுட்டிக்காட்டிய ஸ்டீபன் பிளெமிங்
    X

    அடுத்த 6 போட்டிகளிலும் நிச்சயம் வெல்வோம்-ஆர்சிபியை சுட்டிக்காட்டிய ஸ்டீபன் பிளெமிங்

    • நாங்கள் கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம்.
    • ஆனால் பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான புளூ பிரிண்டை ஆர்சிபி அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது.

    ஒருவேளை நாங்கள் தகுதிபெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.

    கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.

    அடுத்து வரும் அத்தனைப் போட்டிகளையும் எங்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×