என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய அணி"

    • விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
    • ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனிடையே ரோகித், கோலியை தொடர்ந்து முகமது ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியான செய்திகளை முகமது ஷமி மறுத்துள்ளார்.

    தான் ஓய்வு பெறுவதாக வெளியான கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டை முகமது ஷமி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார். அந்த ஸ்டோரியில், "ரொம்ப நல்லா இருக்கு மஹாராஜ். உங்க வேலை நாட்களையும் எண்ணிப் பாருங்க, இன்னும் எத்தனை நாளுக்கு உங்கள் வேலை இருக்கும். இது போன்ற கதைகளால் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டீர்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    ஜூன் 20-ந்தேதி இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முகமது ஷமி தயாராக உள்ளார் என்பதை அவர் இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • சொகுசு SUVயின் ஆரம்ப விலை தோராயமாக ரூ.2.4 கோடி ஆகும்.
    • விராட் கோலி பயன்படுத்தும் காரில் மகுடம் சூட்டுவது ஆடி R8 V10 பிளஸ் ஆகும்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் இவர் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் விராட் கோலி 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவார் என்பதால் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இதனிடையே விராட் கோலி எந்த வகையான கார்களை பயன்படுத்தி வருகிறார், அதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்...

    விராட் கோலி பயன்படுத்தும் கார்களில் SUVகளில் ரேஞ்ச் ரோவர் எவோக் ஒன்றாகும். இதில் 3.0 லிட்டர் இன்ஜீனியம் டர்போசார்ஜ்டு இன்லைன் 6 மைல்ட் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வெஹிக்கிள் (MHEV) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 394 ஹெச்பி பவர் மற்றும் 550 நியூட்டன் மீட்டர் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த சொகுசு SUVயின் ஆரம்ப விலை தோராயமாக ரூ.2.4 கோடி ஆகும்.



    விராட் கோலி பயன்படுத்தும் கார்களில் மற்றொன்று ஆடி R8 LMX. இந்த உயர் செயல்திறன் கொண்ட வாகனம் ரூ.2.97 கோடி மதிப்புடையது மற்றும் 602 ஹெச்பி பவர் மற்றும் 560 நியூட்டன்-மீட்டர் உச்ச இழுவிசையை வழங்கும் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் V10 எஞ்சினைக் கொண்டுள்ளது.

    மேலும் விராட் கோலி பயன்படுத்தும் காரில் மகுடம் சூட்டுவது ஆடி R8 V10 பிளஸ் ஆகும். இந்த ஸ்போர்ட்ஸ் கார் அதன் 5.2 லிட்டர் V10 எஞ்சினுக்கு பெயர் பெற்றது. இது 602 ஹெச்பி பவர் மற்றும் 560 நியூட்டன் மீட்டர் டார்க்கை உருவாக்குகிறது. இதன் விலை ரூ.2.72 கோடி ஆகும்.



    கோலியின் வாகனங்களில் பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் உள்ளது. இதன் விலை சுமார் ரூ. 5.25 கோடி. பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த இந்த சொகுசு செடான் நேர்த்தியான வடிவமைப்பையும் உயர் செயல்திறனையும் ஒருங்கிணைக்கிறது மற்றும் பிராண்டின் வரிசையில் கூட சிறப்பு வாய்ந்தது.

    கடைசியாக பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ரூ.3.29 கோடிக்கு கிடைக்கிறது. இந்த மாடல் இரண்டு எஞ்சின் விருப்பங்களை வழங்குகிறது. 4.0 லிட்டர் V8 ட்வின்-டர்போ ஹைப்ரிட் எஞ்சின் மற்றும் 6.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு யூனிட்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் அதீத சக்தி மற்றும் காற்று மாசை குறைப்பது என இருவித பயன்களை வழங்குகிறது.

    • ஓய்வு குறித்து விராட் கோலி முன்னதாகவே பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தார்.
    • 14 ஆண்டு கால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.

    ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    அதைதொடர்ந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

    தற்போது 1 வாரத்துக்குள் இருவருமே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஒருநாள் போட்டியில் மட்டுமே இனி விளையாடுவார்கள்.

    இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்த தொடரில் விளையாட கோலி விரும்பி இருந்தார். ஆனால் முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரண்தீப் சிங் கூறும்போது, 'இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய 'ஏ' அணி அங்கு செல்கிறது. இந்த அணியில் விளையாடி 3 முதல் 4 சதங்கள் அடிக்க கோலி விரும்பினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆர்வத்தில் அவர் இருந்தார்' என்றார்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு கோலி ரஞ்சி டிராபியில் ஆடினார். இதனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ஆர்வத்துடன் தான் இருந்தார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மீது அவருக்கு இருந்த அதிருப்தி, ரோகித்சர்மாவின் ஓய்வு போன்றவற்றால் கோலி முன்னதாகவே ஓய்வு முடிவை அறிவித்து விட்டார்.

    ஆஸ்திரேலிய பயணத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் இந்திய வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இங்கிலாந்து பயணத்தின் போதும் இதே கட்டுப்பாடு இருக்கும். இதனால் பி.சி.சி.ஐ. மீது அவர் அதிருப்தியில் இருந்தார்.

    மேலும் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர் வீரராக விராட் கோலி மட்டுமே இருப்பார். இந்த டெஸ்ட் தொடருக்கு சுப்மன்கில் அல்லது ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம். இளம் வீரரின் கீழ் விளையாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தனது ஓய்வு முடிவை எடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மட்டும் தன்னை மீண்டும் கேப்டனாக நியமிக்குமாறு விராட் கோலி கேட்டுக் கொண்டதாகவும், அதை பி.சி.சி.ஐ. நிராகரித்ததாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

    ஓய்வு குறித்து விராட் கோலி முன்னதாகவே பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரிடம் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது. ஆனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் பி.சி.சி.ஐ. வேண்டுகோளை நிராகரித்து டெஸ்டில் இருந்து நேற்று விடைபெற்றார்.

    14 ஆண்டு கால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது. பல்வேறு சாதனைகளை புரிந்து சாதித்து இருந்தார்.

    • இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
    • சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்படலாம்.

    ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இத்தொடரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இஷான்கிஷன், கருண் நாயர், ஆகாஷ்தீப், ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன், ஜெய்ஷ்வால் ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம். சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்படலாம்.

    விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    சுப்மன்கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், ரிஷப்பண்ட், துருவ் ஜூரல், நிதிஷ்குமார் ரெட்டி, ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்.

    • இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான்.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும்.

    ஐபிஎல் 18ஆவது சீசன் முடிந்தப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

    முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோற்றது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது.

    இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான். இந்நிலையில் வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணி வீர்ர்களை பிசிசிஐ சல்லடை போட்டு தேர்ந்தெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மே மாதம் 2வது வாரத்திற்குள் அணிகள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. தகவலின்படி, இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிக்காக 35 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா கேப்டனாகவும், சாய் சுதர்சன் மாற்று வீரராகவும்  இருக்க வாய்ப்புள்ளது.

    5-6வது இடத்தில் பட்டீதர் & கருண் நாயர் இடம் பெற்றுள்ளனர் என்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    மற்றபடி, உத்தேசமாக, ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், துரூவ் ஜோரல், ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, ஷமி, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெறுவர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.

    இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
    • முடிந்தவரை சிறப்பாக விளையாடுவோம் என நெதர்லாந்து கேப்டன் நம்பிக்கை.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் 2வது போட்டி இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பௌலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று பெரும்பாலானவர்கள் கருதுவதாகவும், முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 3வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

    • வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.

    இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

    மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

    வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உலகம் முழுவதும் விளையாடும் வீரர்கள் பலர், இது போன்ற பல உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மிகவும் முக்கியமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

    மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் விளையாடி உள்ளார். பட்லரும் 2013 முதல் பி.பி.எல்.லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.

    இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாட அங்குள்ள மைதானங்கள், கால நிலை, பிட்ச் தன்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் கிடைக்க கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்கள் விளையாடினால் அது சிறந்ததாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் அங்கு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உலக கோப்பை தொடர்களுக்காக, இந்திய அணியை இப்போதே தயார்படுத்த வேண்டும்.
    • டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டயாவை நியமிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து, தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை இப்போதிருந்தே தயார் படுத்த வேண்டும். இதை தேர்வுக்குழு புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களே இப்போதைய தேவை. மேலும் ஆல்-ரவுண்டர்களும் அவசியமாகும். அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமிக்க வேண்டும். தேர்வு கமிட்டி தலைவராக நான் இருந்திருந்தால், இதை நேரடியாக சொல்லி இருப்பேன்.

    1983-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டு மற்றும் 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் நாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பாருங்கள். அணியில் கணிசமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். அத்தகைய வீரர்களை நாம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார். 

    • இன்றைய வெற்றியின்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    தென்கொரியாவின் டேகு நகரில் 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியாவின் ஜூனியர் பெண்கள் பிஸ்டல் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. மனு பாகெர், ஏஷா சிங், ஷிகா நர்வால் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் மின்சியோ, கிம் ஜூகி, யாங்ஜின் ஆகியோர் கொண்ட அணியை 16-12 என வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருநாள் போட்டி மீதமுள்ளது.

    இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ரிதம் சங்வான், பாலக் மற்றும் யுவிகா தோமர் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் ஜங்மி, கிம் போமி மற்றும் யூ ஹின்யாங் ஆகியோர் கொண்ட அணியிடம் 12 -16 என தோல்வியடைந்தது. 

    • ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால் வீரர்களை குறை கூறுங்கள்.
    • இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல்.

    டெல்லி:

    அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு வீரர்களின் அணுகுமுறையும், ஐபிஎல் தொடருமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறந்த மாற்றம் ஐபிஎல் தொடர் தான் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள்.

    ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.

    ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிக் பாஷ் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில், எத்தனை இந்தியர்கள் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. ஆனால் நமது பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கு வந்து பல வெளிநாட்டு கிரிக்கெட்டர்கள் பணி செய்கிறார்கள். நமது நாட்டு வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்தியாவில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.

    பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். பிசிசிஐயின் 50% வருமானமே, கிரிக்கெட்டிற்கு போதுமானவை. அதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மீதமுள்ள 50% வருமானத்தை ஒதுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு.
    • முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர்.

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அந்த அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் தொடரில் இந்திய அணி வேகப்பந்து பிரிவில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர். 


    இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ந் தேதி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் ஜனவரி 12ந் தேதி 2வது ஒருநாள் போட்டியும், திருவனந்தபுரத்தில் ஜனவரி 15ந் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம் வருமாறு: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீப்பர்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்.), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

    ×