என் மலர்
நீங்கள் தேடியது "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்"
- இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்டிலும் ஆடுகிறது.
- இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நியூசிலாந்து சாம்பியன் பட்டம் பெற்றது.
21-23-ல் நடைபெற்ற 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்திய அணி இந்த 2 தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை இழந்தது.
3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஜூன் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி தொடரில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை தவறவிட்டது.
2025-27-ம் ஆண்டுக்கான 4-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 18 டெஸ்டில் விளையாடுகிறது. ஜூன்-ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று இந்திய அணி 5 டெஸ்டில் பங்கேற்கிறது. இதோடுதான் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீசுடன் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) தென் ஆப்பிரிக்காவுடன் உள்ளூரில் 2 டெஸ்டில் ஆடுகிறது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று 2 டெஸ்டிலும், அக்டோபர்-டிசம்பர் மாதம் நியூசிலாந்து சென்று 2 டெஸ்டிலும் பங்கேற்கிறது.
இந்திய அணி 2027 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்டிலும் ஆடுகிறது. சொந்த மண்ணில் இந்த தொடர் நடைபெறும்.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி உள்ளூரில் 9 டெஸ்டிலும், வெளிநாட்டில் 9 டெஸ்டிலும் விளையாடுகிறது.
- இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
- இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது.
சிட்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்து வெளியேற்றப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 8 தோல்விகளை சந்தித்துள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் டிரா ஆனது. இதன் காரணமாக இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.
இதற்கு முன்பு நடைபெற்ற 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. 2019-21-ல் நியூசிலாந்து அணியிடமும், 2021-23-ல் ஆஸ்திரேலியா அணியிடமும் தோற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்தது.
சிட்னி டெஸ்ட் வெற்றி மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
- ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
- ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர் தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட கேள்விக்குறியாகிவிட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 52.78 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 61.46 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி முன்னேறும் வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற இந்திய அணிக்கு இன்னும் ஒரே போட்டி தான் மீதம் உள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இதேபோல் ஆஸ்திரேலியா அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
அந்த வகையில், கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணியின் புள்ளிகள் 57.02 ஆக மாறும். இந்த புள்ளிகளை வைத்தே ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். இப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணியின் புள்ளிகள் 55.26 ஆக மாறும். ஒருவேளை ஆஸ்திரேலியா அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவும் பட்சத்தில் அந்த அணி இலங்கையை ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும்.
இந்திய அணி தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்ற வேண்டும். இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும். அல்லது ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டு போட்டிகளும் டிரா ஆகும் போது ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் 55.26 ஆக மாறும். இதைவிட நிலைமை மோசமானால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
ஒருவேளை இரு அணிகளும் புள்ளிகள் அடிப்படையில் சமமாக இருந்தால், சீரிஸ் வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி தேர்வு செய்யப்படும். எதுவாயினும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தவறும் பட்சத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும்.
- 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
- 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கொண்டதாகும்.
இந்த தொடரின் முதல் 3 போட்டிகள் முடிவில் ஒரு போட்டியில் இந்தியாவும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த போட்டி டிரா ஆனதால் இந்திய அணி, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று, 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆக வேண்டும். 2-2 என டிரா செய்தால் கூட, இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு குறைந்துவிடும்.
அதாவது, 2-2 என்ற கணக்கில், தொடர் சமன் ஆனால், அடுத்து ஆஸ்திரேலியா, இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுகளை எதிர்நோக்கி, இந்தியா காத்திருக்கும் நிலை ஏற்படும்.
2-2 என சமன் ஆனால், இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கட்டாயமாக ஒரு வெற்றியைப் பெற்றாக வேண்டும். இந்த தொடர் இலங்கை மண்ணில்தான் நடைபெறும்.
ஒருவேளை, ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுவார்கள்.
- 63.330 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
- இந்திய அணி 57.290 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
துபாய்:
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களும் இலங்கை 328 ரன்களும் சேர்த்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கைக்கு 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி தற்போது தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.
63.330 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 2-வது 3-வது இடங்கள் முறையே ஆஸ்திரேலியா 60.710 புள்ளிகளுடன் இந்திய அணி 57.290 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை அணி 45.45 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும்.
- இந்திய அணி 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது.
- 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில் உள்ளது.
துபாய்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடைபெற்றது. டேஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட்டானது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது . 60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த இந்திய அணி 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது. 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 50.00 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
- இந்திய அணி 4 (ஆஸ்திரேலியா) போட்டிகளில் 2 வெற்றி பெற வேண்டும்.
- தென் ஆப்பிரிக்கா அணி 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.
புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இல்லாததால் அந்த அணி இடம் பெறவில்லை. அதனால் இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.
இந்திய அணிக்கு இன்னும் 4 (ஆஸ்திரேலியா) போட்டிகள் மீதமுள்ளது. இதில் 2 வெற்றி பெற வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு இன்னும் 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகள் உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு 6(4 இந்தியா 2 இலங்கை) போட்டிகளில் 4 போட்டிகளிலும் இலங்கைக்கு ( 1 தென் ஆப்பிரிக்கா 2 ஆஸ்திரேலியா)3 போட்டிகளில் மூன்றுமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- 3-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார் குகேஷ்.
சிங்கப்பூர்:
இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் டிங் லிரென் சாம்பியன்ஷிப்பில் 1-0 என முன்னிலை பெற்றார். நேற்று நடந்த 2வது சுற்று டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். இதில் டிங் லிரெனை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தார் குகேஷ்.
இதுவரை முடிந்துள்ள 3 போட்டிகளில் இருவரும் தலா 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
- 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.
- ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.
பெர்த்:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங் சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது.
46 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஷ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார்.
534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன் எடுத்து இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெற்றிக்கு மேலும் 522 ரன் தேவை.கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்தியா 110 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா 90 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் மற்றும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை.
- ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ஐ சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சரியாக விளையாடாதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சையும் சேர்த்து ரோகித் 91 ரன்கள் மற்றும் கோலி 93 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர்.
இந்நிலையில், ஒழுங்காக விளையாடவில்லை எனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய கர்சான் காவ்ரி, "இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள். குறிப்பாக ரோஹித் மற்றும் விராட் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். உங்கள் சொந்த மண்ணில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
முதலில், நீங்கள் பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தீர்கள். பின்னர் இரண்டாவது டெஸ்டில் மாற்றங்களைச் செய்தீர்கள், ஆனால் மூன்று நாட்களுக்குள் அந்த போட்டியில் தோல்வியடைந்தீர்கள்.
ஒரு டெஸ்ட் போட்டியில் போட்டியிடுவதற்கு 350 அல்லது 400க்கு மேல் ஸ்கோர்களை எடுக்க வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டும். பந்துவீச்சில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நமது பந்து வீச்சாளர்கள் சொந்த மண்ணில் சிரமப்படும்போது, வெளிநாடுகளில் என்ன செய்வார்கள்? உண்மையிலேயே ஏமாற்றம்தான். ஆஸ்திரேலியாவில் எப்படி இருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சரியாக விளையாடவில்லை எனில் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும்.
அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள், ஆனால் அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவை. எதிர்காலத்திற்காக நாம் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். செயல்படாத வீரர்களை எவ்வளவு காலம் வைத்திருப்போம்?
அவர்கள் சிறப்பாக விளையாடினால், அவர்களை அணியில் வைத்து கொள்ளலாம். இல்லையென்றால், ஏன் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சரியாக விளையாடாத வீரர்களை தேர்ந்தெடுப்பீர்கள் எனில் புஜாரா அல்லது ரஹானேவைக் கொண்டு வாருங்கள். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?
ஆஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில், அதிக நேரம் களத்தில் நின்று பெரிய ஸ்கோர் முடிக்கக்கூடிய அனுபவமிக்க வீரர்கள் நமக்கு தேவை. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க பெரிய ஸ்கோரை நீங்கள் அடிக்க வேண்டும்" என்று காட்டமாக பேசியுள்ளார்.
- இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அபாரமாக வென்றது.
- இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் கண்டது.
துபாய்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி என 62.82 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (50.00 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இதனால் தென் ஆப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டது.
துபாய்:
வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து 5-வது இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.
வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.