என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Africa Team"

    • முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
    • நமீபியா கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    தென்ஆப்பிரிக்கா- நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 போட்டி இன்று வின்ட்கோயக்கில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    டி காக் (1), ஹென்றிக்ஸ் (7), ஜேசன் ஸ்மித் (31), போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும் 150 ரன்களை கடக்க முடியவில்லை. நமீபியா அணியில் ரூபன் ட்ரம்பெல்மான் 3 விக்கெட்டும், மேக் ஹெய்ங்கோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களம் இறங்கியது. முதல் மூன்று வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் எராமஸ் 21 ந்தில் 21 ரன்களும், ஸ்மித் 14 பந்தில் 13 ரன்களும், மாலன் குருகர் 21 பந்தில் 18 ரன்களும் சேர்த்தனர்.

    இதனால் அணி வெற்றி நோக்கி சென்று கொண்டிருந்தது. விக்கெட் கீப்பர் ஜனே க்ரீன் சிறப்பாக விளையாடினார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை க்ரீன் சிக்சருக்கு தூக்கினார். அதன்பின் 4 பந்தில் 4 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. க்ரீன் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நமீபியா கடைசி பந்தில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி சாம்பியன் ஆகியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இந்நிலையில், தென்னாப்ரிக்க அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " மகத்தான வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள்.

    எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
    • ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மார்கிரம் சதத்தால் 282 இலக்கை 5 விக்கெட் இழப்பில் எட்டியது.
    • 1998-க்குப் பிறகு ஐசிசி டிராபியை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயித்து. முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன மார்கிரம், 2ஆவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 136 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    தென்ஆப்பிரிக்கா அணி 1998-க்குப் பிறகு முதன்முறையாக ஐசிசி டிராபியை வென்று சாதனைப்படைத்துள்ளது. அந்த அணிக்கு 3.6 மில்லியன் டாலர் (31.05) கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 2ஆவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு 2.1 மில்லியன் டாலர் (18.63 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இ டஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.

    இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.

    குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.

    இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது. 

    • 1998ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது.
    • அதன்பின் பிறகு தற்போதுதான் ஐசிசி நடத்தும் தொடரில் சாம்பியனாகியுள்ளது.

    உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. ஐசிசி டிராபியில் சிறப்பாக விளையாடி வரும். ஆனால் கடைசி கட்ட சொதப்பல் அல்லது மழை போன்ற காரணத்தால் தோல்வியை தழுவி ஏமாற்றம் அடையும்.

    இதனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. கடந்த 1998-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. சாம்பியன்ஸ் டிராபியில் குறிப்பிட்ட அணிகள் மட்டுமே விளையாடுவதால், அது மிகப்பெரிய அளவில் எடுத்துக் கொள்ளுவதில்லை.

    இதனால் தென்ஆப்பிரிக்கா ஐசிசி டிராபியை வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்த நிலையில்தான் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி தோல்வி அடையாமல் இந்த சாதனையைப் படைத்துள்ளது.

    • டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில் திணறியது.

    அபுதாபி:

    தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் அபுதாபியில் நடந்தது. டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கல்டன் 91 ரன்னும், ஸ்டப்ஸ் 79 ரன்னும் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டும் கிரேக் யங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில் திணறியது. அயர்லாந்து 31.5 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசாட் வில்லியம்ஸ் 4 விக்கெட்டும், நிகிடி, பார்டுயின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இரு அணிகள் மோதும் 2-வது போட்டி நாளை நடக்கிறது.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டிவில்லியர்ஸ் இடத்தை நிரப்புவது கடினம் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் பேரிரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். #ABDevilliers
    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவரது இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    “ஆற்றல் தீர்ந்து விட்டது களைப்படைந்து விட்டேன்” என்று தனது ஓய்வு குறித்து டிவில்லியர்ஸ் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

    மைதானத்தின் அனைத்து புற்றுகளிலும் (360 டிகிரி) பந்துகளை அடித்து ஆடும் 34 வயதான டிவில்லியர்ஸ் பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர். ஒரு நாள் போட்டியில் அதிவேக அரை சதம் (16 பந்து), விரைவான சதம் (31 பந்து), அதிவேகத்தில் 150 ரன் (64 பந்து) ஆகிய 3 சாதனைகளை படைத்துள்ளார்.

    டிவில்லியர்சின் ஓய்வு முன்னாள், இந்நாள் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது இடத்தை நிரப்புவது கடினம் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் பேரிரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டிவில்லியர்சின் ஓய்வு தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட்டுக்கே இழப்பாகும். இந்த விளையாட்டின் தூதுவர் ஆவார். டிவில்லியர்ஸ் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது.

    இவ்வாறு பேரிரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார். #ABDevilliers #ABDevilliers17 #BarryRichards
    ×