என் மலர்
நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்"
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
- நமீபியா கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்கா- நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 போட்டி இன்று வின்ட்கோயக்கில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
டி காக் (1), ஹென்றிக்ஸ் (7), ஜேசன் ஸ்மித் (31), போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும் 150 ரன்களை கடக்க முடியவில்லை. நமீபியா அணியில் ரூபன் ட்ரம்பெல்மான் 3 விக்கெட்டும், மேக் ஹெய்ங்கோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களம் இறங்கியது. முதல் மூன்று வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் எராமஸ் 21 ந்தில் 21 ரன்களும், ஸ்மித் 14 பந்தில் 13 ரன்களும், மாலன் குருகர் 21 பந்தில் 18 ரன்களும் சேர்த்தனர்.
இதனால் அணி வெற்றி நோக்கி சென்று கொண்டிருந்தது. விக்கெட் கீப்பர் ஜனே க்ரீன் சிறப்பாக விளையாடினார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை க்ரீன் சிக்சருக்கு தூக்கினார். அதன்பின் 4 பந்தில் 4 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. க்ரீன் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நமீபியா கடைசி பந்தில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- 24 வருடத்திற்குப் பிறகு ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.
- தென்ஆப்பிரிக்காவில் 8 இடங்களில் 44 போட்டிகளை நடத்த திட்டம்.
2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவில்தான் நடைபெறும். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் மொத்த போட்டிகளில் 44 போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும். 8 இடங்களில் போட்டி நடத்தப்படும். 10 போட்டிகளில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடத்தப்படும் என உலகக்கோப்பை தொடருக்கான தங்களது திட்டங்களை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விவரித்துள்ளது.
2003ம் ஆண்டு ஆப்பிரிக்கால் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதன்பின் 24 வருடங்கள் கழித்து தற்போது அங்கு நடைபெற இருக்கிறது.
- மார்கிரம் சதத்தால் 282 இலக்கை 5 விக்கெட் இழப்பில் எட்டியது.
- 1998-க்குப் பிறகு ஐசிசி டிராபியை வென்று சாதனைப் படைத்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயித்து. முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன மார்கிரம், 2ஆவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 136 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
தென்ஆப்பிரிக்கா அணி 1998-க்குப் பிறகு முதன்முறையாக ஐசிசி டிராபியை வென்று சாதனைப்படைத்துள்ளது. அந்த அணிக்கு 3.6 மில்லியன் டாலர் (31.05) கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 2ஆவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு 2.1 மில்லியன் டாலர் (18.63 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.
- 1998ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது.
- அதன்பின் பிறகு தற்போதுதான் ஐசிசி நடத்தும் தொடரில் சாம்பியனாகியுள்ளது.
உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. ஐசிசி டிராபியில் சிறப்பாக விளையாடி வரும். ஆனால் கடைசி கட்ட சொதப்பல் அல்லது மழை போன்ற காரணத்தால் தோல்வியை தழுவி ஏமாற்றம் அடையும்.
இதனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. கடந்த 1998-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. சாம்பியன்ஸ் டிராபியில் குறிப்பிட்ட அணிகள் மட்டுமே விளையாடுவதால், அது மிகப்பெரிய அளவில் எடுத்துக் கொள்ளுவதில்லை.
இதனால் தென்ஆப்பிரிக்கா ஐசிசி டிராபியை வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்த நிலையில்தான் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி தோல்வி அடையாமல் இந்த சாதனையைப் படைத்துள்ளது.
4-வது போட்டி வருகிற 13-ந்தேதி போர்ட் எலிசபெத்திலும், 5-வது மற்றும் கடைசி போட்டி கேப் டவுனிலும் நடக்கிறது. இந்த இரண்டு போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் மார்கிராம் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் மார்கிராம், கடந்த நவம்பர் மாத்திற்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பெறாமல் இருந்தார்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மார்கிராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜேபி டுமினியும், மூத்த வீரருமான அம்லாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. குயின்டான் டி காக் (விக்கெட்), 4. ஜேபி டுமினி, 5. இம்ரான் தாஹிர், 6. மார்கிராம், 7. டேவிட் மில்லர், 8. லுங்கி நிகிடி, 9. அன்ரிச் நோர்ட்ஜி, 10. பெலுக்வாயோ, 11. பிரிட்டோரியஸ், 12. ரபாடா, 13. ஷமிசி, 14. டேல் ஸ்டெயின், 15. வான் டெர் டஸ்சன்.






